அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2018

அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராசகோபால்) நினைவுச் சிறுகதைப் போட்டி (புரவலர்: அமரர் செம்பியன் செல்வன் குடும்பத்தினர்)   முதற் பரிசு: உரூ.5,000/- இரண்டாம் பரிசு: உரூ.3,000/- மூன்றாம் பரிசு:  உரூ.2,000/- ஏனைய ஏழு சிறுகதைகளுக்குப் பரிசுச் சான்றிதழ்கள் வழங்கப் பெறும். போட்டிக்கான விதிகள்: சிறுகதைகள் முன்னர் எங்கும் வெளியிடப்படாதனவாக இருக்க வேண்டும். போட்டியிடுபவர்கள் தங்கள் பெயர், முகவரி விவரங்களைத் தனியாக இணைக்க வேண்டும். அஞ்சல் உறையின் இடப்பக்க மூலையில் ‘அமரன் செம்பியன்செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி’ எனக் குறிக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி:…

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன்

  ஆடி 06, 2049  ஞாயிறு – சூலை 22, 2018 –   மாலை 5.00   குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்:  திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன் சிறுகதைகள் – ஒரு காணொளி   அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்:  9442525191 கிருபா நந்தன்: 8939604745   இல்லம் அடைய

மலேசிய ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டி – யாழ் பதிப்பகம்

மலேசியக் கல்விப் பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களைப் பதிப்பித்து வருவதோடு அரசாங்கத்  தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்புத் திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசியத் தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில்  தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பயிலும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு…

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி

பரிசு உரூ 1000.00 கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆவணி 04, 2049 /20.8.2018 கதைகள் சேரவேண்டிய முகவரி: முனைவர் க.தமிழமல்லன், தலைவர் தனித்தமிழ் இயக்கம், 66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி–9   போட்டிக்கான நெறிமுறைகள்: நான்கு பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை 2 படிகள் மட்டும் அனுப்புக. 2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின் பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ முத்திரையோ இருக்கக் கூடாது. 3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின் பெயரையும் இணைத்து அனுப்புக. 4.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச்…

இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு

இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு ‘மாறி வரும் சிறுகதைக் களம்’ சிறப்புரை :- திருமதி காந்தலட்சுமி சந்திரமௌலி வைகாசி 12, 2049 சனிக்கிழமை 26-05-2018 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை அரங்கம் அடைய   உரையாளர் பற்றி:- தமிழிலும் ஆங்கிலத்திலும் 5 புதினங்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ள எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக வடிவமைப்பவர், மொழி பெயர்ப்பாளர், தொலைக் காட்சிக்காகவும், வானொலிக்காகவும் ஏராளமான…

அகல் விளக்கு – மு.வரதராசனார். 5.

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 4. தொடர்ச்சி) அத்தியாயம் 2   சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர். சந்திரனுடைய பாட்டனார், இருந்த நிலங்களோடு இன்னும் பலகாணி நிலங்களைச் சேர்த்துக் குடும்பத்திற்குப் பெருஞ்செல்வம் வைத்துச் சென்றார். சாமண்ணா குடும்பத்தில் பெரியபிள்ளை; அவருடைய தம்பி – சந்திரனுடைய சிற்றப்பா – தமக்கு வந்த சொத்தை வைத்துக் காக்கும் ஆற்றல் இல்லாதவர்; நில புலங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் பற்றுக் கொண்டார். வாரத்தில் மூன்று நாட்களாவது நகரத்தில் கழித்துவிட்டு…

அகல் விளக்கு – மு.வரதராசனார். 4.

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 3 . தொடர்ச்சி) அகல் விளக்கு 4.      நெல்லிக்காய் விற்றவளும் பாக்கியமும் மற்றப் பெண்களும் இவ்வாறு அன்பு செலுத்தியது பற்றி மனம் வருந்தியது ஒரு பக்கம் இருக்க, ஆண்களிலும் பலர் அவனிடம் அன்பு காட்டியதும் எனக்கு வருத்தமாக இருந்தது. சிற்றுண்டிக் கடையில் பரிமாறுபவன் முதல் பேருந்பது விடுபவன் வரையில், பள்ளிக்கூட ஆசிரியர் முதல் கல்வி அதிகாரி வரையில் சந்திரனிடமே மிக்க அன்பு செலுத்தியதைக் கண்டேன். வந்த சில நாட்களுக்கெல்லாம் சிற்றுண்டிக் கடைக்காரன் அவனுக்கு நண்பன் போல் ஆகிவிட்டான்….

அகல் விளக்கு – மு.வரதராசனார். 3 .

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .  தொடர்ச்சி)   அகல் விளக்கு.  3 .     மூன்றாம் வீட்டில் பாக்கியம் என்று ஓர் அம்மா இருந்தார். அவருடைய தம்பி கன்னெய்(பெட்ரோல்) கடையில் கணக்கு எழுதுபவர். அந்த அம்மா இளமையிலேயே கணவனை இழந்தவர். குழந்தையும் இல்லை. அதனால் அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். குழந்தையாக இருந்த என்னோடும் என் தங்கையோடும் அன்பாகக் கொஞ்சுவார். ஆட்டங்களில் கலந்து கொள்வார். வீட்டில் ஏதாவது அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தால், எங்கள் அழுகுரல் கேட்டு விரைந்து வருவார்….

அகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .  

(அகல் விளக்கு – மு.வரதராசனார் 1 – தொடர்ச்சி) அகல் விளக்கு – 2 அத்தியாயம் 1 பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலாவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். நானும் அவனும் ஒரே வயது உள்ளவர்கள்; ஒரே உயரம் உள்ளவர்கள். அந்த வயதில் எடுத்த நிழற் படத்தைப் பார்த்தால் நான் கொஞ்சம் தசைப்பற்று உள்ளவனாக இருந்தது தெரிகிறது. சந்திரன் அப்படி இல்லை, இளங்கன்று போல் இருந்தான். கொழு கொழு என்றும் இல்லாமல் எலும்பும் தோலுமாக இல்லாமல், அளவான வளர்ச்சியோடு இருந்தான். அப்படி…

அகல் விளக்கு – மு.வரதராசனார் 1. அறிமுகம்

அகல் விளக்கு  1 அறிமுகம்   சந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரிவு விரிந்து பரந்து ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்குக் கொண்டு சேர்த்துவிட்டது. சந்திரனுடைய வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது. வேலய்யனுடைய வாழ்வு சமவெளியில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றை ஒத்தது. சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல், ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக்…

புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: அடிப்படை ஒன்றுதான்

புறநானூற்றுச் சிறுகதைகள் 6. அடிப்படை ஒன்றுதான்   “உலகில் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் பரந்து வாழும் மனித குலத்திற்குள், வாழும் முறையாலும் துறையாலும் வேறுபாடுகள் காண்கிறோம். ஆனால் வாழ்க்கை என்ற ஒன்றின் மூலமான அடிப்படையில் வேறுபாடு இருக்கிறதா? ‘மனித வாழ்க்கை’ என்ற ஒரு பொதுவான தத்துவத்தில் வேறுபாடு இருப்பது பொருந்துமா? இருக்கத்தான் முடியுமா? வாழ்க்கையின் சூத்திரக் கயிறு தொடங்கும் இடத்தையே ஆராய்ந்து பார்க்க விரும்பும் இந்தத் தத்துவரீதியான வினா நக்கீரர் என்ற பெரும் புலவருக்கு எழுந்தது. இன்றைக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த…