பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு – தனபால் அறிவிப்பு (கற்பனைதான் – இலக்குவனார் திருவள்ளுவன்)

பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு – தனபால் அறிவிப்பு (கற்பனைதான்)    சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு ப.தனபால் இன்று திடீரென்று  ஊடகத்தினரை வரவழைத்தார். அப்பொழுது அவர்,  முதல்வர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிராக வாக்களித்த பன்னீர் அணியைச்சேர்ந்த  11 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் இப்பொழுது் தகுதி நீக்கம செய்த தினகரன் அணியினரின் தகுதி நீக்கத்தை விலக்கிக் கொள்வதாகவும் தி.மு.க. உறுப்பினர்கள் 21 பேர் மீதான நடவடிக்கையைக் கைவிடுவதாகவும் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “ஆளாளுக்கு அம்மா ஆவி பேசியது, ஆதன்(ஆன்மா) பேசியது என்றெல்லாம் சொல்கிறார்களே! நம்முடன் அம்மா…

அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே! – இலக்குவனார் திருவள்ளுவன்

அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே!      அறிவியல் என்றால் நம்மில் பலர் ஆய்வகத்தில், குடுவைகளில் ஆய்வு செய்வது எனத் தவறாகக் கருதுகிறோம். ஆனால், “கூர்ந்து நோக்குவதாலும்  ஆய்வாராய்ச்சியாலும் கண்டறியப்பட்டு முறைமைப் படுத்தப்படும்” எல்லாம் அறிவியலே.   இத்தகு அறிவியலில் தமிழ் மக்கள் தொடக்கக் காலத்தில் இருந்தே சிறந்து விளங்கியுள்ளமையை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார் தொல்காப்பியர். இவ்வாறு பொருள் குறித்து அமையும் சொற்கள் எல்லாம் அறிவியல் தன்மை கொண்டுள்ளமைதான் தமிழுக்கே உள்ள சிறப்பு. காலம் செல்லச் செல்ல பல…

தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்

(தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware  1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 2/2 ware என்பது பொருள் அல்லது பண்டம் என்பதைக் குறிக்கும் என்பது உண்மைதான். எனவே, ஆட்சியியலில்   warehouse –  கிடங்கு, பொருளறை, பண்டக மனை என்றும்  வேளாணியலில் பொருளைத தேக்கி அல்லது சேமித்து வைக்குமிடம் என்னும் பொருளில்  warehouse   –  தேக்ககம், கிட்டங்கி வங்கியியலில் காப்பகம், பண்டகச்சாலை  என்றும் பொறியியலிலும் மனையியலிலும்  glassware – கண்ணாடிப் பொருட்கள்  என்றும் குறிக்கின்றனர். மேசையில் வைக்கப்படும்…

காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார் பழனிசாமி, காயத்திரி மனோகரன், தமிழரசி இளங்கோவன்

காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு (பாடல்கள்). 1/2     மலேசியாவில் தமிழர் பண்பாடு பல காலமாக வளர்ந்து வேரூன்றியது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பண்பாடுகளில் பல காலத்தால் அழிந்துவிட்டன. விடுதலைக்குப் பின்பு பல பண்பாடுகள் கால ஓட்டத்தால் இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டன, இவற்றுள் குறிப்பிடத்தக்கது தமிழ்ப்பள்ளிகளில் வழக்கத்திலிருந்த பல பண்பாட்டு நடவடிக்கைகளாகும். அவற்றுள் பாடல்கள், விளையாட்டுகள், பள்ளியின் அமைப்பு, பெற்றோர் ஆசிரியர் ஈடுபாடு ஆகியன குறிப்பிடத்தக்கன.  இக்கருத்தாய்வில் அந்தக் காலத்தில் பள்ளியில் பாடப்பெற்ற சில பாடல்களையும் பள்ளிகளில் மேற்கொண்ட சில…

மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை : எழில்.இளங்கோவன்

  மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை  இவர் எந்த ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பேராசிரியராகப் பணியாற்றவில்லை. தொழில் முறைப் பேராசிரியராகக் கூட இருந்ததில்லை. ஆனாலும் இன்றும் கூட அறிவுத் தளங்களில் இவர் பேராசிரியர் என்றே அழைக்கப்படுகிறார் என்பது இவரின் பெருமைக்குச் சான்று.  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இவரின் சொந்த ஊர். கார்த்திகை 22, 1938 / 7-.12.-1907 அன்று இவர் பிறந்தார்.  திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பயின்ற இவர் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.   பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட…

எத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

எத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது! செட்டம்பர் திங்கள் திராவிட இயக்க வரலாற்றிலும் தமிழின வரலாற்றிலும் முதன்மையான திங்களாகும். செட்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள். செட்டம்பர் 16 தன்மதிப்புச் சுடரொளி இராமச்சந்திரன் பிறந்த நாள். செட்டம்பர் 17  தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி பிறந்தநாள். தன்மானமும் உரிமையும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழ வேண்டும் என்று அவர்கள் கண்ட கனவு, அவர்களை எப்பொ ழுதாவது புகழ்வதால் நனவாகாது. செட்டம்பரில்  நம் உள்ளத்தை அரித்துக்கொண்டிருக்கும் மற்றொரு துயரம், திலீபன் இந்தியாவை நம்பி அளித்த உயிர்க்கொடை!…

தெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 1/2 : இலக்குவனார் திருவள்ளுவன்

  தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 1/2  எந்த ஒரு சொல்லுக்குமான பொருளும் அச்சொல் பயன்படும் இடத்தைப் பொருத்தே அமையும். எனவே, வெவ்வேறு பயன்பாட்டுத்தளங்களில்  அல்லது இடங்களில் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு பொருள்  அமைவதும்  இயற்கை. நமக்கு அறிமுகமான சொற்கள்  நாம் கருதக்கூடிய பொருள்களிலேயே பிற இடங்களிலும் வருவதாகத் தவறாக எண்ணும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இப்போக்கால் கலைச்சொல் பெருக்கம் தடைப்படுகிறது; அறிவியல் துறையின் வளர்ச்சியும் இடர்ப்படுகின்றது.     இங்கு நாம் ஆங்கிலத்தில்  ஆர்டுவேர் / hardware எனச் சொல்வதைத்…

இளைஞர் கைகளில் இணையத்தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்

இளைஞர் கைகளில் இணையத்தமிழ்    தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைவரும் எதிரொலிக்கும் கவலை முதியோர் அவையாக இருக்கிறதே என்பதுதான். எந்தத் தமிழ்க்கூட்டம் என்றாலும், இளைஞர்களைக் காண முடிவதில்லை. ஒருவேளை உரையாளர்களின் குடும்பத்தினர் யாரும் வந்திருந்தாலும் அவர்கள் ஒருவர் அல்லது இருவராகத்தான் இருப்பர். கூட்டம் இறுதிவரை இருப்பார்கள் என்பதும் ஐயமே. இதற்காகவே நான் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அங்கும் தமிழ் பயிலும் ஏதோ ஓர் ஆண்டின் மாணாக்கர்கள் மட்டும் அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் ஆர்வமாகத்தான் இருப்பர். ஆனால், கல்லூரியில் இந்த நிகழ்ச்சிக்கு இத்தனாம் ஆண்டு…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙோ)   தம் உடல் நலனைக்கருதாமல் தமிழ் நலனைக் கருதி வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனாருக்குத் திடீர் நலக்குறைவு ஏற்பட்டது. செருப்புக் கடியால் காலில் ஏற்பட்ட புண் உடனே கவனிக்கப்படாமையால் முற்றி விட்டது; மருத்துவமனையில் சேர்ந்தார்.  பேராசிரியருக்கு நீரிழிவு நோய் உண்டு. அதனால் புண் புரையோடிப் போனதை மருத்துவர்களே கவனிக்கவில்லை. முருகன் தம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இருந்த பேராசிரியர்  நம்பிக்கை இழந்தார். தமிழுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் உள்ளனவே எனக் கருதினார்….

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (19) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18)  தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (19) 5. குருபக்தியும் ஐயப்பன் அருளும் காலம் கடந்த கனி அருள் நிலமே ஞாலம் கடந்த நடைதரும் அறமே நீல விண்ணின் நிலைகளின் திறமே சாலப் பண்பார் தவமே குருவே இப்படிப் பாடல்கள் தமிழ் இனிமையை உணர்த்துவதாகவும் ஒலிக்கின்றன. மணியின் ஒசை வாழ்த்தும் ஒளியே அணியின் எழிலே ஆர்வ மொழியே பணியின் செயலே பார்வை வழியே வணங்கும் நுதலே வாழிய குருவே! என்று போற்றிப்பரவும் பாடல்களைக் கவிதை ஒட்டத்துக்காகவும் செஞ்சொல்…

கல்வி கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்) – பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் வகுப்பு)

கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்)   முன்னுரை      நம் நாடான மலேசியா, கல்வித்துறையில் அறைகூவல்களை எதிர்கொள்ள நாட்டின் கல்வித்துறையில்  புது உத்தி(வியூகங்)களை மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின்  உயிர்நாடி 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் அணுகுமுறையாகும். இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாணவனும் தொழில் நுட்பக் கற்றலில் பீடு நடை போடுவது இன்றியமையாததாகும்.. ஆகவே இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிநிலையில் தமிழ்ப்பள்ளியும் அடங்கும் என்பது காலத்தின் விதியாகும். கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பக் கூறுகள்   பள்ளி ஒளிபரப்பு…

வெள்ளிசை(Karoeke) முறையில் தமிழ் இலக்கணம் கற்றல் கற்பித்தல் – புவனேசுவரி கணேசன்

வெள்ளிசை (Karoeke)  தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித் தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தல் ஆய்வுச் சுருக்கம் இந்த ஆய்வானது, தொடக்கக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் தமிழ்மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலுக்கு உதவி புரியும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக மொழிப் பாடத்தில் இடம்பெறும் இலக்கணம் எனப்படுவது மனனம், புரிதல், எடுத்துக்காட்டு என்ற மூன்று கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இக்கூறுகளை ஒருங்கிணைத்துக் கற்பிக்கப்படும் இலக்கண விதிகளே மாணவர்களின் சிந்தையில் பதியும் என்பதே என் கருத்து. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தல் முறையோடு இதனை…