தமிழர்கள் இந்தியரல்லரா? கேரள அரசால் ஏதிலிகளாகும் அட்டப்பாடித் தமிழர்கள் – தினமலர்

கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான  சொத்துக்களைக் கவர்ந்து,  ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு  வட்டத்தில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள்  மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்). இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட…

பூவுலகம் மகிழ்ச்சியின் எல்லை….. -முனைவர். ப. பானுமதி

கேவலம் மரணத்திடம் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்? மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே. என்னை எதிர்கொண்டு நேரடியாகப் பரிட்சித்துப் பார்.     இவை உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க்கு மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள்  தலைமையாளர் திரு வாசுபாய் அவர்கள் எழுதிய கவிதை வரிகள். துன்பங்களும் துயரங்களுமே வாழ்க்கை என்றிருந்த நம் எழுச்சிக் கனல் பாரதியும் மரணப் படுக்கையில் இருந்த போது, “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்! . . .              …

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப் பள்ளிகள் 2.

முதல் இதழ் (01.11.2044/17.11.2013) தொடர்ச்சி தமிழ்வழிப் பள்ளிகளின் வளர்ச்சியும் தளர்ச்சியும்   கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். தமிழ்வழிக் கல்வியை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டும் பள்ளிகள் நம் தமிழ் வழிப்பள்ளிகளும் தாய்த் தமிழ் பள்ளிகளும். அப்பள்ளிகளின் வளர்ச்சியைப் பற்றியும் அவற்றின் தளர்வு நிலைகளைப் பற்றியும் காண்போம். தொடக்கக் காலத் தமிழ்வழிப்பள்ளிகள் தொடக்க காலப் பள்ளிகள் நம் தாய்மொழியான தமிழில்தான் அமைந்தன என்றறிவோம். ஆங்கில மாயையும் அடிமை மனநிலையும், கல்வியை வணிகப் பொருளாய் மாற்றிய இழிவும் ஆங்கிலப் பள்ளிகளைத் தெருவெங்கும் தொடங்கச் செய்தன….

புரட்சிப் பூ புவியை நீங்கியது! மண்டேலாவிற்குத் தலைவர்களின் போலிப்புகழாரம்!

தென் ஆப்பிரிக்கக் கருப்பர் இன மக்களின் அடிமைத்தளையை உடைத்தெறிந்த தலைவர்  நெல்சன் மண்டேலா மறைந்தார். உலக மக்கள் பலரின் கண்ணீர் அஞ்சலிகளிடையே உலகத்தலைவர்களின் போலிப்புகழாரங்களும் சூட்டப்பட்டன. இன விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவரை தேசிய இனங்களை ஒடுக்கும் தலைவர்களும் இன வாழ்விற்காக வாழ்ந்தவரை இனப்படு கொலைபுரிந்தவர்களும் அதற்குத் துணை  நின்றவர்களும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவரை வீட்டுமக்களுக்காக மட்டுமே வாழும் தலைவர்களும்  அறவழியில் இருந்து மறவழிக்கு மாறிய ஆயுதப்புரட்சியாளரை, புரட்சிக்கு எதிரானவர்களும் வாழ்த்துப்பாக்கள் சூடி அஞ்சலி செலுத்தினர்.  மண்டேலாவின் இயற்பெயர் உரோலிலாலா மண்டேலா(Rolihlahla Mandela) 1918 சூலை…

மாவீரர் உரைகளின் மணிகள் சில!

(முந்தைய இதழின் தொடர்ச்சி) எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். அயலக ஆதிக்க விலங்குளால் கட்டுண்டுக் கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற  விடுதலைத் தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.

தமிழ் வரிவடிவம் காப்போம்! – 3

– தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) ஆங்கில வரி வடிவத்தில், எழுத்துரு இல்லாத மலாய் மொழி போலத் தமிழை மாற்றி விடலாம் என்று குறுகிய சின்னப்புத்திக்குச் சொந்தக்காரராக ஏன் இப்படி எழுத்தாளர் மாறிப்போனார் என்று தெரியவில்லை. பொதுவாக, ஆங்கிலத்தில் ‘தமிழ்99’ வகைத் தட்டச்சு முறையில் அடிப்பதை அப்படியே தமிழ் எழுத்துருவை விட்டுவிட்டு எழுதப் படிக்கப் பழகிக்கொள்ளாலம் என்று சொன்னால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் எதுவும் இருக்க முடியாது. –          அழகு   ஒரு மொழியின்  மரபே தொன்மையான அதன் எழுத்து…

ஈழ நேயமா? தேர்தல் நேயமா? – இதழுரை

 மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும் காலம் இது. ஆற்றல் வாய்ந்த இருபால் இளைஞர்கள், நாட்டு மக்களின் உரிமைக்காகத் தங்கள் உயிர்க்கொடையை அளித்ததை நினைவுகூர்ந்து போற்றும் காலம் இது. உலகின் தொன்மையான இனம், தனக்கே உரிய நிலப்பரப்பில், அடிமைப்பட்டு, அல்லல்பட்டு, துன்பப்பட்டுத், துயரப்பட்டு, நிலம் இழந்து, வளம் இழந்து, உற்றார் உறவினர் இழந்து, தாங்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  வேண்டும் என்பதற்காகத் தத்தம் உயிர்களை இழந்தவர்களைப் போற்றும் வாரம் இது. நாமும் ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கான வீர வணக்கத்தைச் செலுத்துவோம்!  அதே நேரம், இத்தகைய நாள் வந்ததன்…

மாவீரர் உரைகளின் மணிகள் சில!

தமிழீழத்தின் அடர்ந்த ஆழமான காடுகளில் ஒன்றில் தமிழ்ஞாலத் தேசியத் தலைவர்  மேதகு பிரபாகரன் அவர்களால் முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு  மாவீரர் நாள் உரை ஆற்றப்பட்டது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நம் நினைவிற்காக இம்மாவீரர் கிழமையில் வழங்கப்படுகிறது. “எமது போராட்டத்தில் இன்று ஒரு முதன்மையான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் தொடங்கியுள்ளோம். முதல் முறையாக இன்று…

தமிழ் வரிவடிவம் காப்போம்! – 2

 – தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) தாய்ப்பாலும் நாய்ப்பாலும் ஒன்றாகாது. ஆங்கிலேயன் தமிழை விரும்புகிறான். ஆனால், தமிழனோ ஆங்கிலத்தை நேசிக்கிறான். –          தில்லை அம்பலம் தில்லை (Telai Amblam Thilai) தாய்ப் பாலும் புட்டிப் பாலும் ஒன்றாகுமா? என்று எழுதுங்கள் – அது நாகரிகமாகவும் பொருத்தமாகவும் இருக்கும். –          யான்சன் விக்டர்(Johnson Victor) தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுத வேண்டும் என்போர், ஆங்கில நாட்டில் குடியேறட்டும். – சிறீதர் இராசசேகர் (SRIDHAR RAJASEKAR)   தனக்கென்று ஒரு வரிவடிவு…

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப் பள்ளிகள்

  – வெற்றிச்செழியன் செயலர், தமிழ்வழிக்கல்வி இயக்கம் தமிழ்வழிக் கல்வி        “தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது, சரியானது”, என நாம் அனைவரும் அறிவோம்.  உலகெங்கும் வாழும் அறிஞர்கள் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.  தமிழ் நமது தாய்மொழி; எனவே, தமிழே நமது கல்வி மொழியாக இருக்க முடியும்; இருக்க வேண்டும்.

காலத்தால் அழியாத தமிழ்நாடன்

கவிஞர் சேலம் தமிழ்நாடன் [மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர்,] தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. அவரின் இலக்கியப் பணிகள் காலத்தால் அழியாதவை. சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த தமிழ்நாடனின் இயற்பெயர் சுப்பிரமணியன். திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்திருக்கும் அவ்வூரின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இருசாயம்மாள் இணையர்,

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 1

 வரலாற்று நோக்கு பழந்தமிழகத்தின் வரலாறு உலகிற்கு இன்றும் அறியபடாததாகவே உள்ளது. தமிழ் மக்கள்கூடத் தங்களின் வரலாறு குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இந்திய வரலாற்றில் தமிழக வரலாற்றிற்கு முதன்மை அளிக்கப்பட வில்லை. இந்திய வரலாற்றாளர்கள் பழந்தமிழகம் குறித்து முற்றிலும் அறியாதவர்களாகவே உள்ளனர். அவர்கள் பழந்தமிழக வரலாற்றை உணர்த்தக் கூடிய பொருள்கள் தங்களிடம் இல்லை எனக் கூறலாம். அவர்களுக்குப் பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழக் கூடிய தொல்காப்பியம்