இராவண காவியம்: பாயிரம்: தமிழகம், தமிழ்மக்கள்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் தமிழகம்   11.பண்டு நம்மவர் பாத்துப் பலவளங் கண்டு சுற்றங் கலந்து கரவிலா துண்டு வாழ வுதவி யுலகவாந் தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம். 12.நினைத்த நெஞ்சு நெகிழகந் தாயகம் அனைத்து முண்டு யாழியோ டாரியம் இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள தனித்தி ராவிடத் தாயினைப் போற்றுவாம். தமிழ்மக்கள் ஒழுக்க மென்ப துயிரினு மேலதன் இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப் பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர் வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்….

இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5 தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் (தொடர்ச்சி) 6.எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற இழைத்த பாத்தொகை எண்ணில வாய்வளந் தழைத்த முத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 7.ஞாயி றன்னசொல் நாவலர் வாய்ப்பிறந் தீயை வல்லோ ரிசையின் வளர்ந்துமுத் தூய சங்கத் திருந்த தொழுதகு தாயை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 8.இனித்த பாலினுந் தேனினு மின்சுவைக் கலித்தொ கையினுங் கட்டிக் கரும்பினும் நினைத்த வாயுஞ்சொல் நெஞ்சு மினித்திடும் தனித்த மிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம். 9.கனைத்து…

இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5

(இராவணகாவியம் – கதைச்சுருக்கம் தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் 1.உலக மூமையா யுள்ளவக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி யின்றுநா னென்னு மொழிக்கெலாம் தலைமை யாந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 2.பின்னர் வந்து பிறந்து செருக்கொடு முன்னர் வந்த மொழிபல வீயவும், இன்னு மன்ன விளமைய தாயுள தன்னி கர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 3.கன்ன டந்தெலுங் கந்துளு வம்புயல் மன்னி மேவு மணிமலை யாளமாம் பொன்னின் மேனி திரிந்து பொலிவறு தன்னை நேர் தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 4.மூவர் மன்னர் முறையொடு…

புலவர் குழந்தையின் இராவணகாவியம் – கதைச்சுருக்கம் தொடர்ச்சி

(இராவண காவியம் கதைச் சுருக்கம் தொடர்ச்சி) இராவண காவியம் தொடர்ச்சி   சித்திரக் கூடத்தைவிட்டு இராமன் தமிழகத்தை அடைய ஆரியர் வரவேற்கச் சில நாளங்கிருந்து சரபங்கன் நிலையை யடைந் திருந்தனர். ஒரு நாள் முனிவர்கள் ஒன்று கூடி வந்து தமிழகத்தில் தாங்கள் தவவேள்வி செய்ய முடியாமல் கரன் தடுப்பதைக் கூறி அவனைக் கொன்று தங்களை வாழ்விக்கும்படி வேண்டினர். ராமன் அதற்கிசைந்து விடை பெற்றுச் சென்று முனிவர் இருக்கையில் தங்கித் தமிழ் கற்றும், வேள்வி செய்ய முனிவர்க்குதவியும், இரண்டகத் தமிழரை நட்பாக்கியும் பத்தாண்டினை அங்கே கழித்தனன்,…

புலவர் குழந்தையின் இராவண காவியம் – பேரறிஞர் அண்ணாவின் முன்னுரை

இராவண காவியம் திராவிடத் தளபதி, திரு, சி. என். அண்ணாத்துரை எம்.ஏ.அவர்களின் முன்னுரை   இராவண காவியம்- திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும், பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டும் வந்த மக்களல்லவா! அவர்களின் செவிக்கு. இராவணகாவியம் என்ற ஒலியே சற்றுக் கிலி தருவதாகத்தான் இருக்கும், எனினும், இந்நூல், எதிர் பாராததல்ல. காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, என்று பல கூறலாம் இதற்குக் காரணமாக, இது போல் ஒரு நூல் வெளி வந்தே தீரும் என்பதை, நாட்டு மக்களின் உள்ளத்தின்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 17/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 17/17   உயர்வுபெற வேண்டுமெனின் ஒவ்வொரு குலத்தினரும்அயர்வின்றிப் பலதுறைநூல் ஆயவேண்டும் அம்மானைஅயர்வின்றிப் பலதுறைநூல் அனைவரும் ஆராயின்உயர்ந்தோர்க்குத் தாழ்குலத்தோர் ஒடுங்குவரோ அம்மானைஉயர்வுதாழ்வு பேசினினி ஒறுப்புண்டாம் அம்மானை       (81) தமிழ்நாட்டெல்லை நன்கு வளம்பெற்ற நம்தமிழ் நாட்டெல்லைதென்குமரி முதலாகத் திருப்பதியாம் அம்மானைதென்குமரி முதலாகத் திருப்பதிநம் எல்லையெனில்இன்று சிலரதனை எதிர்ப்பதேன் அம்மானைஎதிர்ப்பவரை எதிர்த்தால்நம் இடம்பெறலாம் அம்மானை    (82) முன்னைநாள் தொட்டுமே மொய்த்துத் தமிழர்வாழ்சென்னை தமிழருக்கே சேரவேண்டும் அம்மானைசென்னை தமிழருக்கே…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 16/17   இன்னும் ஆரியப்பெயரை இயம்பாது பொருள்கட்குநண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டும் அம்மானைநண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டு மென்றிடினேதண்ணீர், சோறு எனும் தமிழைத் தாழ்த்துவதேன் அம்மானைதாழ்த்தியவர் ஆரியராம் தகையிலிகள் அம்மானை       (76)   தாயில்மொழியாம் தனித்தமிழ்தும் நாட்டிலுறுகோயிலில் நம்தமிழே குலவவேண்டும் அம்மானைகோயிலில் நம்தமிழே குலவவேண்டு மாமாயின்வாயில் வடமொழியின் வாழ்வென்ன அம்மானைசுந்தரரைச் சிவன்தமிழே சொல்லென்றான் அம்மானை       (77) ஆங்கிலத்திற் கடிமையாய் அல்லலுற்ற தமிழ்த்தாயைஈங்கினிமேல் தலைமகளாய்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 14/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 15/17   இனித்தநறுந் தமிழ்மக்கள் இயன்றவரை தமக்குரியதனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தம்மானைதனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தாமாயின்தனித்தமிழ்ச் சொற்கள் சில தமிழிலில்லை யம்மானைஇல்லையென் றாற்புதிதாய் இயற்றவேண்டும் அம்மானை   (71) பழித்தற் கிடமின்றித் தமிழ்நாட்டுப் பண்புகளைஎழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவேண்டும் அம்மானைஎழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவில்லை எனினினிமேல்விழித்த தமிழ்மக்கள் விடுவரோ அம்மானைவிடமாட்டார் அன்னவரை வெறுத்திடுவார் அம்மானை       (72) வீசும் புகழொளிசால் வியன்தமிழர் எஞ்ஞான்றும்பேசும் போதாங்கிலத்தில் பேசுவதோ அம்மானைபேசும்போதாங்கிலத்தில் பேசவேண்…

ஈழத்துக் கவிதை முயற்சிகள், இதழ்கள், நூல்கள் -சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 7   அத்தியாயம்  3. கவிதை தொடர்ச்சி   2 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை பற்றிப் பேசுகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனியாகக் குறிப்பிடுவது பொருத்தமாகும். பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கலைநோக்கில் இருந்து சமூகநோக்குவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை பரிணமித்ததை மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் நாம் காணலாம். 1940 ஆம் 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூக நோக்குபற்றிய பிரக்ஞையின்றி இலக்கியச் சுவையின் அடிப்படையில் பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன….

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 14/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 14/17 தமிழ்க்கிளர்ச்சி தனைவிரும்பித் தமிழ்மறவர் சிலர்முன்புதமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தார்கள் அம்மானைதமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தவரைக் கொடியசிலதமிழரே தண்டித்து வெறுத்தனர் அம்மானைவெறுத்தோர் எலாம்இன்று விரும்புகின்றார் அம்மானை       (66) உரிமை இனியும் தமிழர்கள் ஏமாற இயலாதால்தனியாக தமிழர்க்குத் தரவேண்டும் அம்மானைதனியாக தமிழர்க்குத் தரவேண்டின் இணைந்துள்ளஇனியநல் இந்தியத்தை எதிர்ப்பதாமே அம்மானைஎதிர்க்காது தமிழுரிமை ஈயக்கேள் அம்மானை       (67) தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே அம்மானைதண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே யாமாயின்நண்ணு…

இலங்கைத் தமிழ்க் கவிதையில் தோன்றிய புதிய அலை -சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 6 அத்தியாயம்  3. கவிதை தொடர்ச்சி 1960 ஆம் ஆண்டுகள் இலங்கைத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை பிறிதொரு வகையில் முதன்மையான காலப் பிரிவாகும், சமூக விழிப்புணர்வும் முற்போக்குச் சிந்தனையும் தமிழ்க்கவிதையின் தலைமைப் போக்காக மாறிய காலப்பிரிவும் இதுவே. 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து புதினம், சிறுகதை, திறனாய்வுத்துறைகளில் முற்போக்குச் சிந்தனை முதன்மை இடம் பெறத் தொடங்கியது. ஆனால் கவிதையைப் பொறுத்தவரை 60 ஆம் ஆண்டுகள், அதிலும் குறிப்பாக…

இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை – சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 5   அத்தியாயம்  3. கவிதை இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை என்று பேசும்போது நவீனத் தமிழ்க் கவிதையையே நாம் முதன்மையாகக் கருதுகின்றோம். ‘நவீன தமிழ்க்கவிதை அல்லது ‘தற்காலத் தமிழ்க்கவிதை’ என்ற ஒரு தொடரை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். பழைய, பண்டித மரபு வழிப்பட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்ட பிரபந்த இலக்கிய வகைகளிலிருந்து மாறுபட்டு,நிகழ்கால வாழ்க்கை நிலைமைகளையும், அதன் அடிப்பிறந்த வாழ்க்கை நோக்குகளையும் கருத்தோட்டங்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளையே நவீனக் கவிதை…