புல்மேல் விழுந்த பனித் துளியே! – பவளசங்கரி

புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய் இன்று குளிர்ந்த என் மனமே ஏன் மறந்தாய் இத்தனை நாளாய் புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய் இன்று குளிர்ந்த என் மனமே ஏன் மறந்தாய் இத்தனை நாளாய் என்னை எழுப்பிய வெண்பனியே ஏன் மறைந்தாய் இத்தனை நாளாய் கல்லை உருக்கிய கவிமழையே கனவில் நிறைந்த கற்கண்டே உயிரில் கலந்த இன்னிசை போல் உனக்குள் தானே உறைந்திருந்தேன் புல்மேல் விழுந்த பனித் துளியே எங்கே போனாய் இத்தனை நாளாய்…

எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா? – இளையவன் செயா

கல்விபடைத்த காமராசரை வாழ்த்துவோம்! பழுத்த  பலாவும்முற்றப்  பழுத்த பனம்பழமும் பழம்தானே அழுத்தமாய்க்  கேட்கிறேன்  பழச்சுவை  ஒன்றாமோ ?  இல்லை கொழுத்தும்  கதிரவனும்  குளுமைதரும்  நிலவும் கோள்கள்தானே இழுத்து  மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும்  ஒன்றாமோ ? அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும் அணிகளும் ஒன்றாமோ ? புழுத்துப்போன குமுகாயத்தில் புல்லர்கள்  வாழ்வைப் போற்றி வழுத்துவதும் அவரையே வாழ்த்துவதும் நன்றாமோ ? இல்லை பழுதின்றிப் பூத்த பனிமலரும் கோயில்  கருவறையில் தொழுது  வணங்கத் தொகுத்த மொழியும்  நல்ல முழுத்தத்தில்  முடித்த மணமும்…

வள்ளுவர் மாலை – இலக்குவனார் திருவள்ளுவன்

வள்ளுவர் மாலை – நாட்டியப் பாடல் தித், தித், தை; தாம் தித், தித், தை; தித்தக்கு தத்தக்கு தத்த தாம்; குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க தங்குகு தங்குகு தங்குகு தித்தாம் குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க தாதங்கி தங்கி கிடதக தித்தித் தை தத் தத் தாம தத்தாம் திருகிட கிடதக திக்கும்தாரி அருமறை தந்தவர், உலகப்புலவர் குறள்நெறி நல்கிய வள்ளுவர் வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! ஞாலப்…

இன்றைய நாள் இனிய நாள் – இளையவன் செயா (மா.கந்தையா)

பெரியார்  ஆண்டு 135  தொ. ஆ. 2880  தி.ஆ.2046 ஆடவை ( ஆனி )  30                         15–07–2015 பிறந்த நாள் !                            ஏ …….மனிதா.. …….! ஏறுபோல் பீடுநடைஅன்று எறும்புபோல் ஊறும்நடைஇன்று ஊறுஏதேனும்  உண்டோ   வீறுகொண்ட   மனமே மாறுபடில்லா  அறிவுகேட்டது  மாறுபடும்  மனமோ ஊறில்லா  …

கண்மைகாயு முன்கருகிட்ட கண்மணிகள் ! – – இளையவன் செயா (மா.கந்தையா)

பெரியார் ஆண்டு 135  தொ. ஆ. 2880  தி.ஆ.2046    ஆடவை ( ஆனி ) 30                15–07–2015 பத்தோடு  ஓராண்டு பறந்தோடி  விட்டதுகாற்றாய் இத்தரையில்  இன்னா  இனியதறியா   இளம்குருத்துகள் புத்தகமும்  கையுமாய் புத்தறிவுப்  பெறப்போனவர்களை பத்திஎரிந்த  தீநாக்கு பதம்பார்த்து  விட்டதே ! குடந்தைப்  பள்ளியிலே மடந்தையர்பெற்ற  மலர்கள் இடம்விட்டு நகராமலே இதயம் கருகினரே ! குடமளவு  கண்ணீரைக்  கொட்டினரே  மக்கள் தடம்மாறா  நினைவுகளைத் தரணிக்கு அளிப்போம் !  (16–07–2004 ) கருகிய …

‘தமிழ்க்கோ’ அமைப்பின் மாபெரும் கவிதைப்போட்டி!

  ஆசுதிரேலியா / அவுத்திரேலியா, ‘தமிழ்க்கோ’ அமைப்பினால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் கொண்டோர்க்கான மாபெரும் கவிதைப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது. இந்தப்போட்டியானது வட மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் மிக்கவர்களின் திறன்களை ஊக்குவித்துச் சிறப்பிப்பதற்கும், அவர்களின் கவிதைகளை நூலாக்குவதற்குமாக நடாத்தப்படுகின்றது. மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பெறுவோர்க்குப் பணப்பரிசில்கள் அளிக்கப்படும். 1ஆம், 2ஆம் பிரிவுகளுக்கு: 1 ஆம் இடம் பதினைந்தாயிரம் உரூபாய் 2 ஆம் இடம் பத்தாயிரம் உரூபாய் 3 ஆம் இடம் ஐயாயிரம்…

கனவு நனவாகுமா ? – பாவலர் கருமலைத்தமிழாழன்

ஆற்றினிலே ஆலைகளின் கழிவு சேர்த்து ஆகாய வெளியினிலும் மாசு சேர்த்து ஊற்றினிலும் தூய்மையிலா நீராய் மாற்றும் உன்மத்தர் செயல்களெல்லாம் முடிந்து போகக் காற்றுவெளி தூய்மையாகிக் குடிக்கும் நீரும் கலப்படமே இல்லாமல் கிடைக்கும் இங்கே நேற்றுவரை இருந்தநிலை மாறி வாழ்வில் நோய்நொடிகள் இல்லாமல் இருப்பார் இங்கே ! பட்டங்கள் பலபெற்றும் பணியே இன்றிப் பரிதவித்தே ஏங்குகின்ற இளைஞர் கூட்டம் வெட்டியாகச் சுற்றுகின்ற நிலைமை மாறி வெறுங்கையின் சக்திதனைத் திறன்கள் தம்மைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேலை யின்றித் திண்டாடல் பழங்கதையாய் மாறிப் போகும் கட்டாயம் பணிகிடைக்கும் வகையில்…

உன்றனுக்காய் ஒருநாடு தோன்ற வேண்டும்! – சி.கருணானந்த இராசா

  சந்த வசந்தத்தில் தமிழழகைக் காட்டுதற்காய் வந்த புலவீர்! வழி நடத்திடும் தலைவ! குந்தியிருந்து குறிப்போடெமை நோக்கும் சொந்தங்காள் உங்களைக் கை தூக்கி வணங்குகிறேன். கானமயிலாடியதைக் கண்டபொல்லாக் கடைகெட்ட வான்கோழி சிறகு தூக்கி மோனநடம் ஆடியதைப்போல நானும் முனைகின்றேன் பாவலர் முன் கவிதைபாட ஆனதனால் கற்றோரே கேலிவிட்டு அறிவற்றோன் கவிகேட்பீர் என்று வேண்டி தேனினியாள் தமிழ்த்தாயின் பாதம் வீழ்ந்தேன் செய்த கவிக்(கு) இன்தமிழே என்றும் காப்பு காரிகையைக் கண்ணெடுத்தும் பார்த்திராத கட்டையிவன் கவிதழுவா மணங்காணான்(பிரமச்சாரி) தூரிகையாம் யாப்பையவள் அருங்கலத்தில் தோய்த்தெழுதி யறியாத சுத்த மூடன்…

தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார் – அ.க.நவநீதக்கிருட்டிணன்

தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க! என்று நீபாடு தமிழ்வெல்க! தமிழ்வெல்க! என்றுதினம் ஆடு தமிழை அழிப்பாரைத் தலைதுணிக்க ஓடு தமிழைப் பழிப்பாரைத் தவிடாகச் சாடு தமிழர்கள் உலகிலே தனியரசு கண்டார் தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார். – திருக்குறள் மணி அ.க.நவநீதக்கிருட்டிணன்

நரைமுடிக்குக் காரணம் ஆண்ட நம் மக்கள் அடிமைகளானமை! – சி.இலக்குவனார்

யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல் யாங்கா கியர் என வினவுதி ராயின்? ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்; பூண்டநம் பண்பு போலிய தாகின்று நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில் பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்; தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை; ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும் அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்; தமிழைக் கற்றோர் தாழ்நிலை உறுவதால் தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்; ஆட்சி மொழியும் அன்னை மொழிஎனச் சொல்லள வாக்கினர்; தூத்தமிழ் வெறுக்கும் அயல்மொழிக் காதலர் ஆட்சி கொண்டுளர்; உயர்கல் விக்குறு ஊடக…

ஒப்பில்லா இன்பத்தமிழ் உலகில் முதன்மொழியே! – அ.க.நவநீதக்கிருட்டிணன்

தமிழர் திருநாடே தாரணியில் முதல் தோற்றம் அமுதமொழி கண்டார் அருந்தமிழர் அந்நாளில் இயற்கையோ டியைந்தமொழி இன்பம் நிறைந்ததமிழ் நயங்கள் நிறைந்தமொழி நல்லறிஞர் கண்டதமிழ் எப்போ பிறந்ததென்று எவரும் அறிந்ததில்லை ஒப்பில்லா இன்பத்தமிழ் உலகில் முதன்மொழியே! குமரியின் தென்திசையில் குளிர்ந்த வளநாடு தமிழர்திருநாடு தழைத்தோங்கி இருந்ததையோ! அந்நாட்டில் தென்மதுரை அழகான நன்னகரில் தென்னன் தமிழ்ச்சங்கம் திறம்பெறவே அமைத்திட்டான்! கன்னித்தமிழ்மொழியைக் கருத்தாய் வளர்த்திட்டான் பன்னூறு புலவரதில் பழந்தமிழை ஆய்ந்திட்டார் பின்னர்க் கபாடபுரம் பெரியதொரு தமிழ்நகரம் மன்னு தமிழ்ச்சங்கம்மறுபடியும் அமைத்திட்டான் அதிலும் பலபுலவர் அருந்தமிழை ஆய்ந்திட்டார் மதிநுட்ப நிறைபுலவர்…