மன்னர் மன்னன்: ‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்!
(‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’தமிழர் நெஞ்சில் எழுச்சியாய் உலவட்டும்! பாவேந்தரின் புரட்சிக்கவி குறுங்காப்பியம் வெளிவந்து எழுபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நூல் வெளிவந்த அந்த ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பாரதிதாசன் ஒர் செந்தமிழ்ப் புரட்சிக்கவி எனத் தந்தை பெரியார் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார். 1946இல் பேரறிஞர் அண்ணா நடத்திய நிதியளிப்பு விழாவில் புரட்சிக்கவிஞர் எனப் பாராட்டிப் பொற்கிழி வழங்கிப் போற்றினார். சிங்கப்பூர் நகரில் முதன் முதலில் புரட்சிக்கவி மேடை நாடகமாக அரங்கேறியது. அதன்பின்னர். டி.கே.எசு நாடக மன்றத்தினர்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.26 – 1.7.30
(இராவண காவியம்: 1.7.21 -1.7.25. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் துணையா நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகிஇணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல்அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியேபுணையா வந்த பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே. 27. நன்றே பழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே ஒன்றார் போலப் பாழ்ங்கடலே உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய் என்றே புலம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகலா விடரெய்தித் தன்றா யிழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே. 28.அன்னை புலம்பத்…
‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது
(புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக்கவி’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காப்பியத்தை 1937ஆம் ஆண்டில் இயற்றினார். ‘பில்கணியம்’ என்னும் வடமொழி நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது என அவரே குறிப்பிட்டுள்ளார். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவர் ‘சீவகசிந்தாமணி காப்பியத்தைப் படைத்துத் தழுவல் இலக்கியம் என்ற புதிய போக்கைத் தமிழ் இலக்கியத்தில் தொடக்கி வைத்தார். பிறமொழிக் காப்பியங்களைத் தமிழ் இலக்கிய – இலக்கண மரபுகளுக்கேற்ப வடிவமைக்க வழிகாட்டினார். …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.21 -1.7.25
(இராவண காவியம்: 1.7.16 -1.7.20. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷெ வேறு வண்ணம் 21. யாழுங் குழலும் பலபறையும் யாழோ ராடு மாடரங்கும் போழும் பனையே டுந்தோய்ந்த பொதிபொ தியான தமிழ்நூலும் வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க்கொண்ட பாழுங் கடலே. நீயொருநாட் பாழாய்ப் போகக் காணேமோ. 22. வாரா யெனவே கைகோத்து மலர்வாய் மோந்து முத்தாடிச் சீராய் வளர்த்த கோத்தாயின் சீரைக் குலைக்கச் சினந்துவரும் …
புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை: தங்கத்தில் பதித்த முத்து
புதிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி குறுங்காவியத் தழுவல் அணிந்துரை இனவுணர்வுக்கும், மொழியுணர்வுக்கும், தமிழ்ப் பண்பாட்டு உணர்வுக்கும் குடியாட்சியுணர்வுக்கும் மொத்தத் தொகுப்பாக முகிழ்த்த காவியம் பாவேந்தரின் புரட்சிக் கவி’. அந்தப் புதுவைப் பாட்டுக்கு புதுமை சேர்க்கப் புறப்பட்ட காப்பியம் புலவர் பன்னீர் செல்வத்தின் புரட்சிக்கவி நாடகக் காப்பியம்’. நகலுக்கு நகைகளைப் பூட்டி அசலுக்கே அழகு சேர்க்கிறார் பன்னீர். பக்கந்தோறும் பன்னீர் தெளித்து நூலுக்கு மணம் தருகிறார். முன்னர் மொழி பொன்னே என்ற கோட்பாட்டில் பாவேந்தரின் வரிகளை அப்படியே கையாள்கிறார். மூலத்திற்கு மூலமே நிகர்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.16 -1.7.20
(இராவண காவியம்: 1.7.11 -1.7.15 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் கழகமோ டமர்ந்து தென்னர் கனிதமி ழாய்ந்தாய்ந் தன்னார்வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் நம்மோர்க்கழகல வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப்பழகவே யேற்ற காலம் பாத்துமே யிருந்த தம்மா. நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் இல்லிடத் திருந்த ளாவி யின்புறு மறிஞர் போலச் சொல்லிடத் தினிய வின்பந் தோய்தமி ழுறவை நாடிப் புல்லியே யளவ ளாவப் பொருகடல் நினைத்த தம்மா. எண்டிசை யவாவு மின்பத் தியைந்துகட்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.6 -1.7.10.
(இராவண காவியம்: 1.7.1-1.7.5. தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 6. பொருவள மின்றியே புகல டைந்தெனப் பெருவள மிக்கதன் பெயரின் மேம்படும் ஒருவள நாட்டினை யுண்டு வந்திடத் திருவுளங் கொண்டதத் தீய வாழியும். 7. அவ்வள நாட்டினும் அரிய தாகவே குவ்வளத் தமிழர்கள் கொண்டு போற்றிடும் இவ்வுல கத்திலா வினிமை மிக்கிடும் செவ்விய தமிழுணத் தேர்ந்த வக்கடல். 8. இனிமையி னுருவினள் இயற்கை வாழ்வினள் …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.1-1.7.5.
(இராவண காவியம்: 1.6.41- 1.6.43 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 1. இங்ஙனம் பல்சிறப் பியைந்து பல்வள முங்கியே செந்தமிழ் மொழியை யோம்பியே தங்களுக் கரசர்கள் தாங்க ளாகவே மங்கலம் பொருந்திட வாழ்ந்து வந்தனர். 2. இவ்வகை வாழ்கையி லினிது போற்றிடும் செவ்வியர் பொருளினைத் தீயர் நன்றென வவ்வுத லுலகியல் வழக்கம் போலவே கவ்வைநீர் வேலையுங் கருத்துட் கொண்டதால். 3. அல்லது வழியிற்கேட் பாரற்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.41- 1.6.43
(இராவண காவியம்: 1.6.36- 1.6.40 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 41. தகையுற வத்தமிழ்ச் சங்கந் தங்கினோர் வகையுறப் புலவர்கள் வகுத்த பாக்களைத் தொகையுறச் செய்துநூல் தொகுத்து மோதியும் திகழுற வாய்ந்தநேர் செய்து வந்தனர். 42. முத்தமி ழாய்தர முறையி னாக்கிய அத்தமிழ்ச் சங்கமவ் வண்ணல் பின்னரும் வைத்ததம் முன்னவர் வழியைப் பின்றொடர்ந் தொத்தினி தோம்பிட வோங்கி வந்ததே. 43. அந்நிலை யிருந்தநம் அருமைத்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6. 13 – 1.6. 17
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 13. ஈங்கொரு புதுமை யில்பொரு ளுவமை யெனத்தகு சிறுமுகை மணம்போற் பாங்கொடு மக்கள் பற்பல பெற்றும் பழமையென் றளவிடு மகவுந் தாங்கிய தாவிற் கன்னியா யிளமை ததும்பிடுந் தண்டமிழ்த் தாயை நீங்கிய விளமைச் சிறியவ ருலக நெறியிலா ரொத்துளே மெனலே. 14. வண்புகழ் மூவ ரொடுதமிழ்க் குயிரை வழங்கிய…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3-1.6.7
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21- 1.6.2தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 3. இனியசெந் தேனு மினியவான் பாலு மினியதீஞ் சுவைநிறைந் தியலும் கனியதன் சாறுங் கரும்பினின் சாறுங் கனிவரு முதலவின் பருப்பும் இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற் கினிமைநம் பாலிலை யென்று கனியவுள் ளுருகிக் கவன்றிட விரங்கிக் கைசெயுங் கனிதமிழ் மொழியே. 4. உரப்பியுங் கனைத்து முடிமுத லடிநாக் குழறியுங் குழறியு…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21-1.6.2
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16-20 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் தாய்மொழிப் படலம் 21. காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர்தா மவரோடு சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல் ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக் காதினுங்கேட் டறியார்கைக் களிறிளைக்கு மலைநாடர். 22. அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப் புறப்பொருளின் றுறையறிந்து பொருதுபுகழ் பூண்டிருந்தார் திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர். 23. ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ் …