அப்படி.. அப்படி! – மு இராமச்சந்திரன்
அப்படி.. அப்படி! ஆசைகளோடு அலைந்தால் எப்படி? அடிக்கடி வீழ்ந்து கிடந்தால் எப்படி? வரப்புகளின்றி. பாய்ந்தால் எப்படி வசதிகளின்றி குடித்தனம் எப்படி? அசதிகளோடு கிடந்தால் எப்படி? ஆட்டம் விடாது நடந்தால் எப்படி? சுகம் சுகமென்று கிடந்தால் எப்படி? சுற்றுச் சூழலை மறந்தால் எப்படி? கூடிக் களிக்க மறந்தால் எப்படி? குடும்பம் இன்றிக் கிடந்தால் எப்படி? அன்பும் நேசமும் விதைப்பாய் அப்படி! வசதிகள் தேடி செய்வாய் அப்படி! கூத்தும் குடியும் விடுவாய் அப்படி குழந்தைத் தனங்களை விடுவாய் சொற்படி.. கன்றாய் தாயாய் மகிழ்வாய் நற்படி கற்றாரோடு படிப்பாய்…
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! – பழ.தமிழாளன்
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! 1. நெற்றியிலே பெண்குறியும் நிலைபெற்ற(து) உண்டோ ? நெற்றிதனில் பிறந்தவராம் பிராமணர்கள் என்பார் உற்றதொரு பெண்குறியும் தோளதனில் உண்டோ ? உலகாள்வோர் பிறந்தகுறி அக்குறியே என்பார் பெற்றதொடை பெண்குறியும் பிறங்குவதும் உண்டோ ? பொருள்வணிகர் தோன்றுகுறி அதுதானாம் என்பார்.// நிற்கின்ற தாளதனில் பெண்குறியும் உண்டோ ? நிறையுழைப்புச் சூத்திரர்கள் பிறந்த குறி என்பார் ! 2. பிறக்குமிடப் பெண்குறிகள் பிறந்தவிடம் நான்காய் பேதமையை விளைவிக்கும் மனுநூலின் கூற்றை அறவுணர்வு பெற்றிருக்கும் …
தமிழவள்! – மு. இராமச்சந்திரன்
தமிழவள்! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார் தமிழர் குலக் கொழுந்தாக அன்னைத் தமிழை வஞ்சி வஞ்சி யெனவே அவளும் வளர்ந்தாள் அவளும் வளமாய் அறிவாய்!.. செஞ்சி செஞ்சி சீர்பெற அழகாய் செய்தனர் புலவர் கவியென வடிவாய் மன்னர் எழுந்தனர் மாதவள் செழிக்க மயக்கம் தீர்க்க சங்கம் பிறக்க… ஊரும் உலகும் அவள் பெயர் படிக்க உருண்டது காலம் பலர்வழி நடக்க… வளர்ந்தது சோலை ஆடலும் இனிக்க வந்து விழுந்தது இசையென முழக்க.. அணிந்தாள் அன்னை உடைபல உடுத்த அணிகலன் எடுத்து பதித்தனர் முத்தாய் பொன்னும் மணியும்…
பகுத்தறிவுத் தன்மானப் பெரியார் பகலவனே ! – பழ.தமிழாளன்
பகுத்தறிவுத் தன்மானப் பெரியார் பகலவனே ! 1. மனுநூலை நம்பவைத்து மக்களையே மடமைதனில் ஆக்கி வைத்த மாண்பில்லா ஆரியத்தின் மடமைமுகத் தோலுரித்த மாண்பின் மிக்கோன் பனுவலெனும் வேதத்தின் முடக்காற்றை மணக்காதே வைத்த பெம்மான் பிறப்பதனில் சாதிகண்டு பரமனுச்சி அமர்ந்திருந்த ஆரி யத்தை நுனிநாவாம் பகுத்தறிவின் அம்பாலும் கோலாலும் வென்ற வீரன் நற்றமிழத் தன்மானம் பகுத்தறிவால் ஆரியத்தை விரட்டி வைத்தோன் தனிச்சிறப்பார் பெரியாரே தமிழினத்தின் மூச்சுக்காற் றாக மாறித் …
திலீபன் சாகவில்லை! – யோ புரட்சி
திலீபன் சாகவில்லை! பசி வந்தால் பற்று பறக்காது பசி வந்தால் பத்தும் பறந்திடுமெனும் பழமொழியை பார்த்தீபன் பொய்யாக்கினான். தேசம் பசித்திருக்கலாகாதென தேகம் பசித்திருந்தான். திருவிழா காணும் நல்லூர் தியாக விழா கண்டதே. ஆலய பூசை மறந்து உறவுகள் அண்ணா உன்முன் திரண்டதே. காந்தி அன்று இருந்திருந்தால் உன் காலடிக்கே வந்திருப்பார். திலீபன் உன் செய்கை கண்டு கிரீடம் தந்திருப்பார். தியாகத்தை பருகியதால்தானா சிறுதுளி நீர் பருகவில்லை. மெழுகாய் உருகியதால்தானா உணவு கேட்டு உருகவில்லை. மரணத்துக்கு போகையில் யாரும் மாலை சூடுவரோ.. இறக்கப் போகுமுன் எனக்குப்…
புரட்சி விதைகளை விதைத்தாரே இலக்குவனார்
புரட்சி விதைகளை விதைத்தாரே! தத்தனா தானனத் …… தனதான தத்தனா தானனத் …… தனதான ……… பாடல் ……… வற்றிடா நீர்வளச் சிறப்போடு உற்றசீர் வாய்மேடு–தலம்வாழ்ந்த சிங்கார வேலர் இரத்தினத்தாச்சி செய்தவப் பயனென உதித்தாரே ஒப்பிலாப் போர்க்குண மறத்தோடு முத்தமிழ் காத்திடப் பிறந்தாரே வளைந்திடாத் துணிவுக்கு உருவாக வையகம் போற்றிய இலக்குவரே! தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன …… தனதான முற்றிய புலவரின் உற்றநல் துணையொடு நற்றமி ழறிவினை –உளமாரப் பெற்றபின் இளையவர் கற்றிடும் வகையினில்…
உதிக்கும் சூரியனே! – க. இராசேசு
உதிக்கும் சூரியனே! பனியை உருக்க வரும் சூரியன்போல்பகலெல்லாம் உழைத்து ஓய்வெடுடாபனிமலையையே உருக்க நீ நினைத்தால்பகலவனாய் வானில் நீ எரிந்திடடா! சிறுகச் சிறுக வரும் வியர்வைத்துளிஉன் உழைப்பிற்குக் கிடைத்த பொன்துளிகள்பெருகி பெருகி வரும் ஊனின் வலிஉன் உடலை செய்யும் உறுதியடா! ஓடும் ஓட்டமும் ஓயாது வாழ்வுமுடியாப் பாதையின் தொடர்ச்சியடா,வாழ்வில் கடினப் பாதைகள் பலவுண்டுஅதைக் கண்கள் மூடாமல் ஓடிடடா,கடினப் பாதைகளில் ஓடிப் பழகிவிட்டால்இனி எந்தப் பாதையிலும் ஓடிடலாம்! சூழும் துன்ப இருளை நீ நீக்கிடவேபுது சூரியனாய் வானில் உதித்திடடா,சிகர தூரம் அது மிகத் தூரமில்லைஉன் புன்சிரிப்பால் அதை…
எரிமலையும் சிறு பொடியே! – தனிமையின் நண்பன்
எரிமலையும் சிறு பொடியே! கண்ணாடி முன் நின்று பார் கவலையை முகத்தில் அகற்றிப் பார் ஓய்வின்றி உழைக்கும் கடலலையென ஓயாது முயற்சி செய்து பார் உன்னை நீயே அறிந்து பார் உலகமே சிறிதெனக் கூறிப் பார் எறும்புகளை உற்றுப் பார் எவ்வளவு ஒற்றுமை வியந்து பார் தோல்வியில் சிரித்துப் பார் அதில் கற்றதை உணர்ந்து பார் ஆசையைத் துறந்து பார் அச்சத்தை மறந்து பார் எதிரியை எதிர்த்துப் பார் எரிமலையாய் வெடித்துப் பார் வியர்வை சொட்ட உழைத்துப் பார் வெற்றிக்கனியை சுவைத்துப் பார் தனிமையின்…
தமிழே நீ வாழி! – சந்தர் சுப்பிரமணியன்
தமிழே நீ வாழி! தூய தமிழே நீவாழி!தொன்மைத் தமிழே நீவாழி!பாயும் அமுதின் ஊற்றைப்போல்பழகும் தமிழே நீவாழி!ஆய நூல்கள் அணிகலனாய்அணிந்த தமிழே நீவாழி!தாயின் சிறந்தாய் நீவாழி!தங்கத் தமிழே நீவாழி! கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் வலைத்தமிழ்
கலைஞர் என்றும் கதிராய் ஒளிர்வார் !– பழ.தமிழாளன்
கலைஞர் என்றும் கதிராய் ஒளிர்வார் ! 1. திருக்குவளை எனுமூரில் அஞ்சுகத்தாய் முத்துவேலர் அன்பால் ஒன்றி ஆற்றலுருக் கொண்டாரை அருமைந் தாய்க் கலைஞரையே ஈன்றெடுத்தார் திருவாகும் கல்வியினைத் தேடுகையில் செந்தமிழிற் பற்றுக் கொண்டும் ஈரோட்டுப் பெரியாரின் ஈடில்லாப் பகுத்தறிவின் ஊற்றங் கொண்டும் பெருமைமிகு அண்ணாவின் பீடுநிறை உணர்வதனைப் பெற்றுக் கொண்டும் பைந்தமிழ நாடதனில் பாங்குறவே ஐந்துமுறை முதல்வ ராகி இருளடிமைத் தீவீழ்ந்த இனமதனை எழுகதிராய் எழவும் வைத்தோர் ஈடிணையும் இல்லாதே …
தமிழினத்திற்கு வாழ்வா ? சாவா ? – புலவர் பழ.தமிழாளன்
தமிழினத்திற்கு வாழ்வா ? சாவா ? 1. அன்றுதொட்டே இன்றுவரை அறத்தமிழை இனத்தினை அழிக்கின்ற கொள்கைநிறை நஞ்சாரிய நெஞ்சுடன் நன்றிகொன்று நாடோறும் ஞாலமதில் வாழ்பவர் நடுநிலையும் நயன்மையையும் நாடாத இனமதே இன்றுமுற்றாய் அழிப்பதற்கே ஏறியுமே ஆட்சியில் இயற்றுகிற சட்டமதை எண்ணியுமே காத்திட ஒன்றிணைய வேண்டுமென்றே உள்ளமதில் தேருக ! ஒன்றிணைய வில்லையெனில் ஒண்டமிழும் அழியுமே ! 2. தனதுநலம் புறந்தள்ளித் தமிழினத்தைக் காப்பதே தலையாய கடனென்று தமிழினமே உணருதல் தனதுநல முதற்படியாய் நெஞ்சமதில் தேருக ! தமிழ்மொழியே தன்னினத்தைக் காக்கவல்ல தென்றுமே தனதுநெஞ்சில் …
நிலையில்லை எதுவும்…! அமுதா பொற்கொடி
நிலையில்லை எதுவும்…! மணம்வீசும் மலர்கள் மாலையில் வாடும் வனம்சூழும் குயிலோசை குரல்வளை ஓயும் தனம்கோடி குபேரமும் தெருக்கோடி சேரும் மனம்கூடிய பாசமும் பசபசப்பாய்ச் சோரும் கட்டிய கோட்டைகள் தரைமட்டமாகும் ஒட்டிய ஒட்டடைகள் ஒவ்வாமையாகும் வாட்டிக் கூட்டி வகுத்த போகம் வட்டியும் முதலுமாய்க் கைவிட்டுப் போகும் ஆய்விழிப் பார்வை அந்தகம் ஆகும் வாய்வழிப் புன்னகை உதட்டோடு குன்றும் நோய்நொடி அகன்று நூறாண்டு கடந்தாலும் மெய்வற்றி உலர்ந்து பாடையில் போகும் நேற்றைய நிகழ்வுகள் இன்று புரையும் இன்றைய நடப்புகள் நாளை திரையும் முந்தை கடந்தவை காலத்தால் கரையும்…
