தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்

 (தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ)   குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் “வார இதழாக மாற்றக்கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா” என்றெல்லாம் வேண்டினர். வார இதழாக மாற்றுவதை விட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் இலக்குவனார் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இது குறித்த நாளிதழ்…

திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி:தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 132. புலவி நுணுக்கம்  தவறுஇல்லாப் போதும், கூடல்இன்ப மிகுதிக்காக நுட்பமாய்ச் சினத்தல்              (01-02 தலைவி சொல்லியவை) பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர், நண்ணேன், பரத்த!நின் மார்பு. பெண்களின் பார்வைகளால் கற்பினை இழந்தவனே! உன்னை நெருங்கேன்.   ஊடி இருந்தேம்ஆத், தும்மினார், யாம்தம்மை,      “நீடுவாழ்” கென்பாக்(கு) அறிந்து. ஊடலில் தும்மினார், “நீடுவாழ்க”என வாழ்த்துவேன் என்று நினைந்து.   (03-10 தலைவன் சொல்லியவை)  …

சுந்தரச் சிலேடைகள் 17 : பெண்மகளும் பெட்டகமும் – ஒ .சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 17 பெண்மகளும் பெட்டகமும்   வாய்மூடிக் கொள்ளுமே, வாய்திறக்க முத்துதிர்க்கும் தூய்மை தனைநாடும், நல்சுமக்கும் – ஏற்புறப் பல்நிலை தானிருக்கும் பாதரு காரிகையே ! வெல்மகளும் பெட்டகமாய் வீடு.  பொருள்: பெண் மகள்: | ) தேவைப்படும் நேரத்தில் அளவாகப் பேசிவிட்டு வாயை மூடிக் கொள்வர். 2) வாய் திறந்தால் வெண்முத்துகளாய்ப் பற்கள் ஒளிரும் . 3) தூய்மையாக இருப்பார்கள். 4) குடும்பப் பொறுப்பை உணர்ந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருப்பர். 5) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை…

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 –‌ தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 பாலுக்குள்  நெய்பதுங்கி   உள்ள   தன்மை பார்வைக்குத்   தெரியவில்லை   என்ப   தாலே பாலுக்குள்   உள்ளநெய்யும்   பொய்யாய்ப்   போமோ பாட்டிற்குள்  அறிவியலின்   கருத்தை  யெல்லாம் மேலுக்குச்    சொல்லவில்லை   என்ப   தாலே மேடையிலே   இல்லையென்று   முழங்க   லாமா காலங்கள்   வினைத்தொகையில்   உள்ள   போலே கனித்தமிழில்   அறிவியலும்   உள்ள  துண்மை !   பொறியிலின்   நுணுக்கத்தைப்   பாட்டிற்   குள்ளே போற்றியதைத்   தெரியாமல்   மறைத்து   வைத்தோம் குறியீட்டில்    மருத்துவத்தைச்   சித்த   ரெல்லாம் குறித்தளிக்கப்   புதையலெனப்  …

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? – தமிழரசி

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ?  பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.   சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா? “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும். “முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும்! முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள்  கற்றவர்கள் இன்றெழுத வேண்டும்! நல்ல கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும்   நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த  நாடாள வேண்டும்;ஆம்! வேண்டும்! வேண்டும்  பற்றிவரு இந்திமொழி நீங்க வேண்டும் பார்போற்றத் தமிழ்முழக்கம் செய்வோம் வாரீர்!’ இன்று…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) தேயாத ஒருவான நிலவே அந்நாள் செந்தமிழர் வாழ்வென்றால். வருங்காலத்தில் ஒயாத புகழ்க்கதிரோன் வரவை நோக்கி உழைப்போம் நாம் உறுதியுடன் வெற்றி காண்போம் பேயாத விண்ணும் ஓர் நாளில் பெய்யும் பேரிருளும்  பகல் வந்தால் பிணங்கி ஓடும்! நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால் நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ? சொல்வீர்!’ எதிர்கால வளத்துக்காகச் செய்யப்பட வேண்டிய ஆக்கப்பணிகளை அறிவுறுத்துகிறார் கவிஞர். பல்கலை நற்கழகத்தில் தமிழ்முழக்கம்…

திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் :தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை  3. காமத்துப் பால் 15. கற்பு இயல்    131. புலவி தலைமக்கள் ஒருவர்மீது ஒருவர், கொள்ளும் பொய்ச்சினமும், பிணக்கும்   (01-05 தலைவி சொல்லியவை) புல்லா(து) இராஅப் புலத்தை, அவர்உறும்       அல்லல்நோய் காண்கம் சிறிது.        அவர்படும் துயரைக் காண்போம்         சிறிது; மனமே! நீ வேறுபடு.    1302. உப்(பு)அமைந்(து) அற்(று)ஆல் புலவி, அதுசிறிது       மிக்(கு)அற்(று)ஆல் நீள விடல்.         உணவில் உப்பின்…

அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? – இலக்குவனார் திருவள்ளுவன்

அமைதியின் காரணம்  ஆழ்மனத் துயரமோ?   சொலல் வல்லர் சோர்விலர் இன்று சொல்லவும் இயலவில்லை! சோர்வும் விடவில்லை! கலைஞர்களைத் தன்  சொல்லோவியங்களால் உருவாக்கிய கலைஞர் கருணாநிதியின் சொல்ல முடியா அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ? ஆட்சிச்சிறையில் இல்லாத பொழுது உரிமையுடன் முழங்க முடிந்தது! சிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது! தமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது! ஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு பெண்ணுரிமை பேண முடிந்தது! சமத்துவம் காண முடிந்தது! ஆரியத்துடன் இணையவும் முடிந்தது! அன்னைத்தமிழை மறக்கவும் முடிந்தது! கல்விநிலையங்களில் விரட்டப்படும் தமிழால்…

திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை   3.காமத்துப் பால்  15.கற்பு இயல்  130.நெஞ்சொடு புலத்தல் ஊடாமல் கூடவிரும்பும் தலைவியின் நெஞ்சோடான உணர்வுப் போராட்டம்.   (01-10 தலைவி சொல்லியவை) அவர்நெஞ்(சு) அவர்க்(கு)ஆதல் கண்டும், எவன்நெஞ்சே!       நீஎமக்(கு) ஆகா தது?        அவர்நெஞ்சு அவரிடம்; என்நெஞ்சே! நீஏன், என்னிடம் இல்லை?   உறாஅ தவர்க்கண்ட கண்ணும், அவரைச்       செறாஅ(ர்எ)னச், சேறிஎன் நெஞ்சு. நெஞ்சே! பொருந்தார்என அறிந்தும், வெறுக்கார்எனப் பின்செல்கிறாய்…

நீயின்றி இயங்காது எம் உலகு! – கவிஞர் கனிமொழி

நீயின்றி இயங்காது எம் உலகு!   பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா? பேசிப் பேசி அலுத்து விட்டதா? சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா? உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா? மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்… வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச்…

பேசு தலைவா பேசு! – சுப.வீரபாண்டியன்

பேசு தலைவா பேசு!   நீ என்றன் பள்ளிக்கூடம் – சிந்தை தெளியாப் பருவத்துச் சிறுவனாய்ப் படித்தேன் உன்னை உயர்கல்வித் தளத்தில் கூட உன்னைத்தான் படித்தேன் அப்போதே எனது திசைகளைத் தீர்மானித்த தொலைதூர வெளிச்சம் நீ தொடமுடியா விண்மீன் நீ!   நீ என்றன் பள்ளிக்கூடம் இலக்கியம் எப்படி எழுதுவதென்றும் மேடையில் எப்படிப் பேசுவதென்றும் வாதம் புரியும் வகைஎது என்றும் வடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன்   நீ என்றன் பள்ளிக்கூடம் – பத்து ஆண்டுகள் உன் பக்கம் இருந்தேன் பார்த்துக் கொண்டிருந்ததாய்ப் பலரும்…