பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 6 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! காட்சி – 6 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குடில் முன் உள்ள மரக்கிளை நிலைமை  :     (நாடகம் பற்றிய கருத்துரையில் பேடும் சிட்டும் ஈடுபடல்) ஆண் :     நாடகம் எப்படி உள்ளது சொல்? பேடே! நீயும் பெண் தானே! பெண் :     எனக்கென்னத் தெரியும்! நான் சொல்ல?     உனக்கெதும் தெரிந்தால் சொல்லிவிடு! ஆண் :     நடப்பிற்கும்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 5 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  பாடு சிட்டே பாடு ! பண்பாடு !   (மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி) காட்சி – 5 (நாடகக் காட்சி – 1) அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (அருண் மொழி  வருகைக்காகத் திருமகள் காத்தே இருக்க வருகின்றான் அருண்மொழி ஆங்கே! பெறுகிறாள்! பூங்குயில் இன்பம்!) அருண்   :     கண்ணானக் கண்ணே!                      ஏனிந்த வாட்டம்?                            பெண்ணே! நான் நீங்கிச்               சென்ற…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 4 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி -4 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (நாடகம் காண வந்தோரைப் பேடது கண்டு திகைக்கின்றது) பெண்   :           இன்றென்ன! வருவோர்! போவோருமாக                    நன்றே! தெருவினில் மக்கள் கூட்டம்? ஆண்     :        பொங்கல் திருநாள் நாடகமன்றோ? எங்கும் அதுதான்; இத்தனைக் கூட்டம்!                 “தமிழ்த்தாய்’ என்பது நாடகப் பெயராம்?                         அமிழ்தாய் இங்கு உரைத்தார்!…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  (மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி)     காட்சி –3 அங்கம்    :     கவிஞர், அன்பரசன், இடம்      :     கவிஞரது குடில் நிலைமை  : (கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்!                    வீரிய நெஞ்சாம்! அன்பரசன் தனக்குத்தானே குடில் முன்னே! மனக்குறையோடு உரைக்கின்றான்!) அன்ப :   காலம் உணர்ந்த கவிஞருக்கு ஞாலப்பரிசு ஒரு குடிலோ; வணக்கம் புலவரே! வணக்கம்! மனநிறைவான வணக்கம்! கவி     :  யாரது? ஓகோ! வா! வா! தம்பி அன்ப   : …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – காட்சி 2

[கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி]   காட்சி – 2 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (சிட்டுக்கள் இரண்டும் மெட்டுரையாடல்) ஆண்   :  என்ன பேடே! சிரிப்பென்ன? எனக்கும் சொல்லேன்! சிரிக்கின்றேன்! பெண் :   என்னவோ! வாழ்வை நினைத்திட்டேன்! இனிமையில் என்னையே மறந்திட்டேன்! வண்ண எண்ணங்கள் விரிந்ததனால் என்னையே மறந்து சிரித்திட்டேன்!   ஆண் :   அதுவா! உண்மை! உண்மைதான்! இதயம் குளிர்ந்த சிரிப்புத்தான்! இனிய…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்

  பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன் காட்சி – 1   அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     கூரையிலுள்ள குருவிக்கூடு நிலைமை  :     (தன்னுரையாக இரு சிட்டும் முன்னுரை இங்கே பகிர்கின்றது) ஆண் பெண் பருவ இருசிட்டு ஆழ்ந்த காதல் முடிபோட்டு வாழத்துடியாய்த் துடித்தொன்றாய் நாடி நரம்பு தளர்ந்து விட வானில் பறவைகள் பறந்ததுவே! அஞ்சிச் சிறகுகள் வழிதடுத்தும் கெஞ்சிக்கால்கள் குரல்கொடுத்தும் அலையாய், அலையாய் அலைந்துமே நிலையாய் முட்டையிட்டுவிடக் குஞ்சு பொரித்து…

எது சொந்தம்?

–          இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன்   (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 13 அறிக்கைவிட்டு  அறிக்கைவிட்டே நமை ஏமாற்றி    ஆண்டுவந்தார் இந்தியாவை! தில்லி ஆட்சி விரித்தவலை வீழ்ந்திருக்கும் இறக்கும்  புறாக்களாகி    விசையற்றுப் பதவிசுகம் தமிழர் கண்டார்! அவித்தமுட்டை போலாகிக் கருவும் செத்து    அருந்தமிழன் தில்லிக்குத்  தீனி  ஆனான்! புவியாண்ட தமிழினத்தான் புள்கூட்  டம்போல்   பூமியெலாம் பறந்தோடி அகதி ஆனான் 14 ஊரிழந்தான் உணர்வழிந்தான் தேடித்  தேடி   ஒவ்வொன்றாய்த் தமிழுயிரை  அவன்அ  ழித்தான் தேரழித்தான் தெய்வீகப் பண்ப ழித்தான்…

எது சொந்தம்?

–     இன எழுச்சிக் கவிஞர் கவிஞர் இராமச்சந்திரன் விளைந்தபயிர் வளைந்தபடி குனிந்த வாறே        வீடெல்லாம் துடைப்பத்தால் பெருக்கி நின்றாள்! கலைந்தபடி கிடந்திருந்த குப்பை கூட்டி         காலடியில் அவள்குவித்தாள்! கட்டில் மீது