ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! – – இலக்குவனார்திருவள்ளுவன்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 29 ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! காவல், குழவி கொள் பவரின், ஓம்புமதி! காத்தற்குரிய நாட்டைக், குழந்தையைத் தாய் காப்பதுபோல் காத்திடுவாயாக! – நரிவெரூஉத்தலையார் புறநானூறு 5, அடிகள் 6-7 திணை: பாடாண் திணை துறை:செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம். சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட பொழுது, நரிவெரூஉத் தலையார் பாடியது. முழுப்பாடல்: எருமை அன்ன கருங்கல் இடை தோறு, ஆனிற் பரக்கும் யானைய, முன்பின், கானக…
வெருளி நோய்கள் 1086-1090: இலக்குவனார்
(வெருளி நோய்கள் 1081-1085 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1086-1090 சுழல் விளக்கு/சுழல்வொளிர்வு(strobe light) பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் சுழல் விளக்கு வெருளி.ஆட்சியாளர்கள், உயர் அலுவர்கள் ஊர்திகளில் சுழல் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. எனவே, சுழல் விளக்கை அதிகாரத்தின் அறிகுறியாக எண்ணிப் பெரிதும் அச்சப்படுகின்றனர்.00 சுழற் கதவு (revolving door)தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுழற் கதவு வெருளி.நம்மால் தள்ளி இயக்கக்கூடியதாகவும் தன்னால் இயங்கக்கூடியதாகவும் சுழற்கதவுகள் உள்ளன. இதன் செயல்பாட்டைப்புரிந்து கொள்ளாமல், சிக்கிக் கொள்ள நேரிடும் என அஞ்சுவோர் உள்ளனர்.அரசியலில் சுழற்கதவு இயக்கம் உள்ளது. சட்டத்தை இயற்றுநருக்கும்…
வெருளி நோய்கள் 1081-1085: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1076-1080: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1081-1085 சுவரொட்டி(wallpaper) குறித்த வரம்பற்ற பேரச்சம் சுவரொட்டி வெருளி.சுவரொட்டிகள் மூலம் அரசியல் கருத்துகள், நிகழ்ச்சி விவரங்கள் பயன்படுத்தாலும், எழுச்சி முழக்கங்களும் பரப்பப்படுகின்றன. எனினும் சுவெராட்டிகள் மூலம் எதிரான கருத்துகளும் பரப்பப்படுவதால் இதனால் அச்சமும் எரிச்சலும் அடைந்து காரணமற்ற வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர்.Tapetsaria என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சுவரொட்டி எனப் பொருள்.00 சுவர் குறித்த வரம்பற்ற பேரச்சம் சுவர் வெருளி.சுவர் இடிந்து விழுந்து மரணம், படுகாயம் முதலானவை நேர்ந்த செய்திகளைப் படித்தவர்கள் பாழடைந்த சுவர்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’: சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘ காலனி’: சரிதானா? எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’: சரிதானா? ??? ஐயா, ‘காலனி’ என்றாலும் குடியிருப்புதானே அவ்வாறுதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். காலோனியா /colōnia என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே காலனி/colony என்னும் சொல். உண்மையில் ‘காலனி’ என்பது குடியேற்றப் பகுதியைக் குறிக்கும். அஃதாவது, குடியேற்ற ஊர், குடியேற்ற நகர், குடியேற்ற நாடு என எல்லாமே…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத் திருமணப் பதிவு முறையைப் பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார். திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும் உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக்…
வெருளி நோய்கள் 1071-1075: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1066-1070) வெருளி நோய்கள் 1071-1075 1071. சுடுநர் வெருளி – sniperphobia மறைவான இடத்திலிருக்கும் ஒருவரால் சுடப்படுவோம் என்றுகாரணமற்ற அளவு கடந்த பேரச்சம் சுடுநர் வெருளி. sniper என்றால் பதுங்கிச் சுடுநர். அஃதாவது பதுங்கி மறைவாக இருந்து குறிபார்த்துச் சுடுநர் எனப் பொருள். யாரும் மறைவாக இருந்து சுடுகிறார்களோ என்ற பேரச்சத்தையே குறிக்கிறது. போர்க்களத்தில் பதுங்கு குழியில் இருந்து யாரும் சுடுகிறார்களோ என்ற பேரச்சத்திற்கு ஆளாவதால் வெருளி உண்டாகிறது. 00 1072.சுட்டுரை வெருளி – Twitterphobia சுட்டுரை குறித்த வரம்பற்ற பேரச்சம்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு இக்கோப்பில் ‘ஆபிசர் குவார்ட்டர்சு’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அலுவலர் குடியிருப்பு என்று தமிழில் குறி்த்திருக்க வேண்டும். ???? ‘குவார்ட்டர்’ என்றால் கால் என்று பொருளில்லையா? ஆம். அவ்வாறும் பொருள் உள்ளது. அவ்வாறு பார்த்தால் காலாண்டுகள் என வர வேண்டும். ஆனால், இடத்திற்குத்தகுந்த பொருளைக் குறிக்க வேண்டுமல்லவா Quarters என்றால், உறையுள், உறைவிடம், குடியிருப்பு, படைத்தங்கல் இடம்,குடியிருப்பில்லம்; குடியிருப்புகள்;தங்குமிடம் எனப் பல பொருள்கள். இருப்பினும்…
நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: இலக்குவனார் திருவள்ளுவன்
((நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : தொடர்ச்சி) பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க! கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனைஇடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,தொன்மை யுடையார் தொடர்பு. நாலடியார் 216 கருத்து: முதல், இடை, கடைநிலையில் உள்ள நட்பை உணர்ந்து பனைமரம்போன்று. தொடர்ந்து உதவாவிடினும் நட்புத்தன்மை குறையாதவரிடமே நட்பு கொள்ளல் வேண்டும். பதவுரை : கடையாயார் = கடைநிலையினர்; நட்பில் = தோழமை உணர்வில்; கமுகனையர் = கமுகு மரம்போன்ற தன்மையர்; ஏனை = பிறர்; …
வெருளி நோய்கள் 1026-1030: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1021-1025: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1026-1030 சிதை பொருள்(decaying matter) குறித்த வரம்பற்ற பேரச்சம் சிதை பொருள் வெருளி.அழுகும் பொருள்களால் ஏற்படும் தீய நாற்றம்,நோய் முதலியவற்றால் பேரச்சம் கொள்வர்.sep என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிதைவு/அழுகிப்போதல்.00 குழந்தை உருச்சிதைந்து பிறக்கும், கோரமாகப் பிறக்கும், அருவருப்பான தோற்றத்தில் பிறக்கும் என்றெல்லாம் குழந்தைப் பிறப்பு குறித்து அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வது சிதைவுரு வெருளி.இது மகப்பேறு வெருளியுடன் (Lockiophobia/Tokophobia/Tocophobia/ Maieusiophobia/ Parturiphobia தொடர்புடையது.பழங்கிரேக்கத்தில் téras என்றால் கோர உரு எனப் பொருள். இச்சொல்லில் இருந்து…
வெருளி நோய்கள் 1021-1025: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் + படங்கள் 1016-1020 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1021-1025 இறப்பு வரும் என்ற அச்சத்தால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் சாவு வெருளிசாதல் அஞ்சேன்; அஞ்சுவல், சாவின்பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின் (நற்றிணை : 397.7)கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது (புறநானூறு :137 : 5)சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின் (பரிபாடல் : 2:71)(‘இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே’ எனக் குறுந்தொகை(209.3) அடியில் இறப்பு என்பது கடத்தல் என்னும் பொருளில்தான் வருகின்றது. பிறகுதான் உலக வாழ்வைக் கடத்தலையும் இறப்பு…
வெருளி நோய்கள் 1016-1020: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1011-1015 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1016-1020 சாம்பல் நிறம் தொடர்பானவற்றின் மீது ஏற்படும் வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சாம்பல்நிற வெருளிசாம்பல் நிறம் நடுவுநிலைமை, ஒத்துப்போதல், சலிப்பு, ஐயப்பாடு, முதுமை, புறக்கணிப்பு, நாணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய குறியீடாக விளங்குகிறது.glauco என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாம்பல்நிறம்.00 தனித்திராமல் பிறரைச் சார்ந்திருக்கும் சார்பு(dependence on others) நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் சார்பு வெருளி.தற்சார்பின்றிப் பிறரை அண்டியிருத்தல் உரிய செயலைக் குறித்த காலத்தில் முடிப்பது குறித்த கவலையை உருவாக்கும். சார்தலுக்குரியவர் எதிர்பார்க்கும் உதவியைச் செய்யாமல்…
வெருளி நோய்கள் 1011-1015: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1006-1010: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1011-1015 1011. சாக்கடைப் புழை வெருளி – Manholephobia சாக்கடைப் புழை(Manhole) குறித்த வரம்பற்ற பேரச்சம் சாக்கடைப் புழை வெருளி. manhole என்பதன் நேர் பொருள் மனிதத் துளை. இது புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பைக் குறிக்கிறது. புதை சக்கடைக்குள் மனிதர் இறங்குவதற்கு அமைக்கப்பட்ட வாயில் அல்லது வழி். இதனைப் புழை என்பர். எனவே, சாக்கடைப்புழை எனப்படுகிறது. 00 1012. சாச்சன் வெருளி – Saxophonophobia சாச்சன் இசைக் கருவி/ சாச்சன் இசைப்பி (சாச்சபோன்/saxophone)குறித்த…
