திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல் : தொடர்ச்சி) 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 129. புணர்ச்சி விதும்பல் பிரிந்து கூடிய காதலர், கலந்து இன்புறத் துடித்தல். (01-08 தலைவி சொல்லியவை) உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும், கள்ளுக்(கு)இல், காமத்திற்(கு) உண்டு. நினைத்த, பார்த்த உடனேயே, மகிழ்விப்பது கள்இல்லை; காதலே. தினைத்துணையும் ஊடாமை வேண்டும், பனைத்துணையும் காமம் நிறைய வரின். பனைஅளவுக் கூடல் ஆசைவரின், தினைஅளவும் ஊடல்…
திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல் தொடர்ச்சி) 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 128. குறிப்பு அறிதல் காதலர் தம்தம் உள்ளத்துள்ள் குறிப்புகளைக், குறிப்பாக உணர்த்தல் (01-05 தலைவன் சொல்லியவை) கரப்பினும், கைஇகந்(து) ஒல்லாநின் உண்கண், உரைக்கல் உறுவ(து)ஒன்(று) உண்டு. மறைத்தலையும் மீறி, உன்கண்கள் குறிப்பு ஒன்றைச் சொல்லுகின்றன. கண்நிறைந்த காரிகைக் காம்(பு)ஏர்தோள் பேதைக்குப், பெண்நிறைந்த நீர்மை பெரிது கண்கொள்ளா அழகுக் காதலிக்குப் பெண்மை நிறைபண்பே, பேர்அழகு….
திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் தொடர்ச்சி) 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 127. அவர்வயின் விதும்பல் பிரிவுக் காலத்தில் ஒருவரை ஒருவரைக் காணத் துடித்தல். (01-08 தலைவி சொல்லியவை) வாள்அற்றுப், புற்(கு)என்ற கண்ணும்; அவர்சென்ற, நாள்ஒற்றித் தேய்ந்த விரல். எதிர்பார்த்துக், கண்கள் ஒளிஇழந்தன. நாள்எண்ணி, விரல்கள் தேய்ந்தன. இலங்(கு)இழாய்! இன்று மறப்பின்,என் தோள்மேல் கலம்கழியும், காரிகை நீத்து. தோழியே! காதலை மறந்தால், தோள்கள் மெலியும்; வளைகழலும். …
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017
வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017 கருத்துகள் வலைப்பூவில் அழைப்பிதழைக் காண்க! http://thiru2050.blogspot.in/2017/05/2017.html
திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை; 125. நெஞ்சொடு கிளத்தல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 126. நிறை அழிதல் மனத்துயரை அடக்க முடியாமல், தலைவி வாய்விட்டுப் புலம்புதல். (01-10 தலைவி சொல்லியவை) காமக் கணிச்சி உடைக்கும், நிறைஎன்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. நாணத்தாழ்ப்பாள் கொண்ட கற்புக்கதவைக், காதல்எனும் கோடரி உடைக்கும். காமம்என ஒன்றோ? கண்இன்(று),என் நெஞ்சத்தை, யாமத்தும் ஆளும் தொழில். இரக்கம்இலாக் காதல், என்நெஞ்சை, நள்ளிரவிலும் அடக்கி…
திருக்குறள் அறுசொல் உரை : 125. நெஞ்சொடு கிளத்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை; 124. உறுப்பு நலன் அழிதல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் கற்பு இயல் 125. நெஞ்சொடு கிளத்தல் பிரிவுத்துயர் மிகுதியைத் தலைவி, தனது நெஞ்சுக்குச் சொல்லுதல். (01-10 தலைவி சொல்லியவை) நினைத்(து)ஒன்று சொல்லாயோ? நெஞ்சே! எனைத்(து)ஒன்றும், எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! என்துயரைத் தீர்க்கின்ற மருந்துஒன்றைச் சிந்தித்துச் சொல்லாயோ? காதல் அவர்இலர் ஆக,நீ நோவது, பேதைமை வாழிய!என் நெஞ்சு. நெஞ்சே! காதலர்க்குக் காதல்தான் இல்லையே! நீஏன் வருந்துகிறாய்? இருந்(து)உள்ளி…
திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15.கற்பு இயல் 124.உறுப்பு நலன் அழிதல் பிரிவைப் பொறாத தலைவியது கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல். (01-07 தலைவி சொல்லியவை) . சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி, நறுமலர் நாணின கண். பிரிவால் அழகுஇழந்த கண்கள், அழகுக்குவளை கண்டு வெட்கும். நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும், பசந்து பனிவாரும் கண். நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,…
திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15. கற்பு இயல் 123. பொழுது கண்டு இரங்கல் பிரிந்த காதலர், துயர்மாலைப் பொழுது கண்டு மனம்வருந்தல். (01-10 தலைவி சொல்லியவை) மாலையோ அல்லை; மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ; வாழி! பொழுது. மாலையே நீ பொழுதே இல்லை; பிரிந்தார் உயிர்குடிக்கும் கூர்வேல். புன்கண்ணை வாழி! மருள்மாலை; எம்கேள்போல், வன்கண்ண தோநின் துணை? மாலையே! நீஏன் வருந்துகிறாய்?…
திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் : வெ. அரங்கராசன
(திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் 122. கனவு நிலை உரைத்தல் தலைவி, தான்கண்ட கனவு நிலைகளை, எடுத்து மொழிதல். (01-10 தலைவி சொல்லியவை) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு, யாதுசெய் வேன்கொல் விருந்து? காதலர் வரவைக் கூறிய கனாத்தூதுக்கு, என்ன விருந்திடுவேன்? கயல்உண்கண், யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்(கு), உயல்உண்மை சாற்றுவேன் மன். கண்கள் தூங்கின், நான்வாழ்வதைக் காதலர்க்குக்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் அமைக்கப்பெற்றது. அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் ‘திருக்குறள் எளிய பொழிப்புரை’, ‘எல்லோரும் இந்நாட்டரசர்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பின்னர், நூல் வெளியீட்டுப்பணி தொடர்ந்து, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, ‘பழந்தமிழ்’, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ முதலான நூல்களும் வெளியிடப்பட்டன. திருக்குறள் கழகம் மூலம் பேராசிரியர் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தியதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது. இது குறித்துப்…
திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15.கற்பு இயல் நினைந்தவர் புலம்பல் இருவரும் கூடிப்பெற்ற இன்பத்தைப், பிரிவினில் நினைந்து புலம்புதல். (01-02 தலைவன் சொல்லியவை) உள்ளினும், தீராப் பெருமகிழ் செய்தலால், கள்ளினும், காமம் இனிது. காதலை, நினைத்தாலே இனிக்கும்; கள்ளைவிடவும், காதலே இனிக்கும். எனைத்(து)ஒன்(று) இனிதேகாண், காமம்;தாம் வீழ்வார் நினைப்ப, வருவ(து)ஒன்(று) இல். காதலியை நினைத்தாலே துன்பம் வாராதே; காதல்தானே இனிது. [03-10 தலைவி…
திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல்தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால் 15.கற்பு இயல் 120. தனிப்படர் மிகுதி பிரிந்து தனித்து இருக்கும் தலைவியிடம் படரும் மிகுதுயர் (01-10 தலைவி சொல்லியவை) தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி. காதலிப்பார் காதலிக்கப்பட்டால், அக்காதல், விதைகள் இல்லாச் சுவைப்பழம். வாழ்வார்க்கு வானம் பயந்(து)அற்(று)ஆல், வீழ்வார்க்கு வீழ்வார்…
