திருக்குறள் அறுசொல் உரை – 078. படைச் செருக்கு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 077. படை மாட்சி தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல் அதிகாரம் 078. படைச் செருக்கு படைவீரரின் வீரப்பண்பு, மான உணர்வு, வெற்றிப் பெருமிதம். என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்,என்ஐ முன்நின்று, கல்நின்ற வர். பகைவரே! என்தலைவன்முன் நில்லாதீர், நின்றார் நடுகல்லாய் நிற்கிறார். கான முயல்எய்த அம்பினில், யானை பிழைத்தவேல், ஏந்தல் இனிது. முயல்குறி தப்பாத அம்பைவிட, யானை தப்பியவேல் சிறப்பு. பேர்ஆண்மை என்ப தறுகண்;ஒன்(று)…
திருக்குறள் அறுசொல் உரை – 077. படை மாட்சி : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 076. பொருள் செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல் அதிகாரம் 077. படை மாட்சி நாட்டுப் பாதுகாப்புக்குத் தேவையான வீரப்படையின் சீரும், சிறப்பும். உறுப்(பு)அமைந்(து), ஊ(று)அஞ்சா வெல்படை, வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. பல்உறுப்போடு அஞ்சாத வெல்படையே, ஆட்சியர்க்குத் தலைமைச் செல்வம். உலை(வு)இடத்(து) ஊ(று)அஞ்சா வன்கண், தொலை(வு)இடத்தும், தொல்படைக்(கு) அல்லால் அரிது. அழிவிலும் அஞ்சாப் பெருவீரம், பயிற்சிப் பழம்படைக்கே எளிது. ஒலித்தக்கால் என்ஆம் உவரி..?…
திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வுரை 1. : இலக்குவனார் திருவள்ளுவன்
1 உலகப் பொதுநூலாம் திருக்குறள் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல். ஆதலால் உலக அறிஞர்களின் பாராட்டிற்குரிய நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளை அவரவர் நோக்கில் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். இதனால் சிலர் தாங்கள் சார்ந்துள்ள கருத்தியத்திற்கு ஏற்றாற்போல் திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளித்துள்ள சில நேர்வுகளும் உள்ளன. எனினும் ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட திருக்குறள் இன்றைக்கும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. எப்பாலோரும் பாராட்டும் முப்பாலாம் திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக, தலைமைக்கு வழிகாட்டும் நூலாக,…
திருக்குறள் அறுசொல் உரை –076. பொருள் செயல் வகை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 075. அரண் தொடர்ச்சி) 02. பொருள் பால் 09. பொருள் இயல் (கூழ் இயல்) அதிகாரம் 076. பொருள் செயல் வகை. செல்வத்தின் தன்மை, தேவை, சிறப்பு, திரட்டும் வழிமுறைகள். பொருள்அல் லவரைப், பொருள்ஆகச் செய்யும் பொருள்அல்ல(து), இல்லை பொருள். மதிப்பு இல்லாரையும், மதிப்பு உள்ளாராக மாற்றுவது செல்வமே. இல்லாரை, எல்லாரும் எள்ளுவர்; செல்வரை, எல்லாரும் செய்வர் சிறப்பு. செல்வம் இல்லாரை, எல்லாரும் இகழ்வார்; உள்ளாரைச் சிறப்பிப்பார். பொருள்என்னும் பொய்யா விளக்கம்,…
திருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 074. நாடு தொடர்ச்சி) 02. பொருள் பால் 08. அரண் இயல் அதிகாரம் 075. அரண் நாட்டிற்குத் தேவையான இயற்கை, செயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்கள். ஆற்று பவர்க்கும், அரண்பொருள்; அஞ்சித், தம் போற்று பவர்க்கும் அரண். போரைச் செய்வார்க்கும், அஞ்சுவார்க்கும் கோட்டையே தக்கதோர் பாதுகாப்பு. மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல் காடும், உடைய(து) அரண். ஆழ்அகழி, வெட்டவெளி, மலைகள் காடுகள் கொண்டது அரண். உயர்(வு),அகலம், திண்மை, அருமை,இந் நான்கின் அமை(வு)அரண் என்(று),உரைக்கும் நூல். …
திருக்குறள் அறுசொல் உரை – 074. நாடு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 073. அவை அஞ்சாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 07. நாட்டு இயல் அதிகாரம் 074. நாடு நாட்டின் இலக்கணம், சிறப்புகள், நாட்டு மக்கள்தம் பண்புகள். தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்(வு)இலாச் செல்வரும், சேர்வது நாடு. தொடர்விளைவு, தக்கார், உயர்மனச் செல்வர், இருப்பது நல்நாடு. பெரும்பொருளால் பெள்தக்க(து) ஆகி, அரும்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. பெரும்பொருளால், கேடும் இல்லா நிறைவிளைவால், அமைவது நாடு. பொறைஒருங்கு மேல்வரும்கால்…
திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 தொடர்ச்சி) பூ, காய், கனி கலைச்சொற்கள் மணமலி பூவீ மலர்போ து அலராம் துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம் நலம்சேர் குலைதாறு வல்வரியாகும் பலம்காய் கனியாம் பழம் என்கிறது உரிச்சொல் நிகண்டு (பா. 94). அஃதாவது மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும். திருவள்ளுவர், காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை…
திருக்குறள் அறுசொல் உரை – 071. குறிப்பு அறிதல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 071. குறிப்பு அறிதல் பிறரது மனஉணர்வுகளைக் கண்கள், முகங்கள்வழி ஆராய்ந்து அறிதல். கூறாமைநோக்கிக் குறிப்(பு) அறிவான், எஞ்ஞான்றும், மாறாநீர் வையக்(கு) அணி. முகக்குறிப்பால் மனஉணர்வை அறிவார் உலகிற்கே நல்நகை ஆவார். ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத், தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல். மனத்தின் உள்கருத்தை ஐயம்அற, உணர்வார் தெய்வத்திற்குச் சமம். குறிப்பின் குறிப்(பு)உணர் வாரை, உறுப்பினுள், யாது…
திருக்குறள் அறுசொல் உரை – 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 069. தூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ஆட்சியரிடம் பழகும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள். அகலா(து), அணுகாது, தீக்காய்வார் போல்க, இகல்வேந்தர் சேர்ந்(து)ஒழுகு வார். மாறுபட்டு ஆள்வாரோடு விலகாமல், நெருங்காமல் ஆய்ந்து பழகு. மன்னர் விழைய விழையாமை, மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். ஆட்சியார் விரும்புவதை விரும்பாமை, நிலைக்கும் நன்மைகள் தரும். போற்றின், அரியவை போற்றல்; கடுத்தபின், தேற்றுதல்…
திருக்குறள் அறுசொல் உரை – 069. தூது : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 068. வினை செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 069. தூது தூதரது கல்விஅறிவு, தூதுஇயல் அறிவு, செயல்உறுதி, சொல்முறை. 681. பண்(பு)உடைமை, தூ(து)உரைப்பான் பண்பு. நாட்டுப்பற்றும், உயர்குடிப் பிறப்பும், பண்பும், தூதர் இலக்கணம். அன்(பு),அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தூ(து)உரைப்பார்க்(கு) இன்றி யமையாத மூன்று. அன்பும், அறிவும், சொல்ஆய்வுத் திறனும், தூதர்க்கு மிகத்தேவை. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல், வேலாருள் வென்றி வினைஉரைப்பான்…
திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 தொடர்ச்சி) 2 அரணறை – safety room ‘அரண்’ எனத் திருக்குறளில் தனி அதிகாரமே(எண் 75) உள்ளது. இவ்வதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளிலும் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளதுபோல், பிற அதிகாரங்களிலும் 4 இடங்களில் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் ‘அரண்’ 31 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது; ‘அரணம்’ என்பது 13 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. படைத்துறையில் இடம் பெற்றுள்ள முதன்மையான கலைச்சொற்களில் ஒன்று அரண். அரண்சூழ்ந்த மனையையே அரண்மனை என்றனர். கரூவலங்களில் உள்ள காப்பு அறையை அரணறை –…
திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
1 இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள…