genocide139

முனகல்களோடு

புலர்ந்து கொண்டிருந்த

பொழுதை

மூர்ச்சையாக்கி

புதைத்த அந்த நாள்

பால் குடிப்பதற்காக,genocide134

சடலத்தின் உடலை உறிஞ்சிய

பச்சை மண்ணின் வறண்ட அதரங்கள்

கனவுகளைச் சுமந்த

பாவாடை மலர்களின்

நீலம் பாய்ந்த நயனங்கள்

வெட்டிய நெஞ்சின்

முட்டிய உறுதியின் அடையாளமாய்genocide121

கருகிய மீசைகள்

சுருங்கிய தோலும் சுருங்காத கனவும்

தேக்கிய  இதயங்கள்

எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்!

மரணம் அடுக்கி மாளிகை

கரசேவக இனவெறிப் பேய்கள்

குருட்டு மொழியின் கதறல்களுக்கு

இன்னும் வெளிச்சமிடாத

பச்சைத் துரோகங்கள்

மே 18genocide122

சிந்திய செந்துளிகள்

அமைதியடையும் நேரம் எது?

இனத் துரோகிகள் ஒழிவதெப்போது?

தனி ஈழம் மலர்வதெப்போது?

(மே 18 நிருவாணமாய் செவ்வாம் அடைந்த

எம் தொப்புள் கொடி உறவுகளின் நினைவாக….)

Banumathy Aathirai03eeahzam-blood01– ஆதிரை