ira.ilankumaran01

ஞாயி றன்று பிறந்தவனே

நன்மை எல்லாம் அடைவாயே

திங்க ளன்று பிறந்தவனே

திறமை பலவும் பெறுவாயே

செவ்வாய் அன்று பிறந்தவனே

செல்வச் செழிப்பில் வாழ்வாயே

புதனாம் நாளில் பிறந்தவனே

புகழில் சிறந்து வாழ்வாயே

வியாழ னன்று பிறந்தவனே

விளங்கும் அறிவில் உயர்வாயே

வெள்ளி யன்று பிறந்தவனே

வெற்றி யாவும் பெறுவாயே

சனியாம் கிழமை பிறந்தவனே

சலியா உறுதி அடைவாயே

எந்த நாளில் பிறந்தாலும்

எந்தக் குறையும் வருவதில்லை.

எல்லாநாளும் நன்னாளே

எவர்க்கும் ஏற்ற பொன்னாளே

இயற்கை தந்த நாள்களிலே

எவரே குறைகள் காண்பதுவே.

– புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன்