thamizhthaay01

இன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி

                எந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி

மன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம்

                மகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம்

நின்னரு வரவினை நினைத்துமே இந்நாள்

                நிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள்

உன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே,

                உவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே.

– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்

a.k.paranthamaar01