பேரன்புடையீர்,

வணக்கம்.

வரும்

மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை

சனவரி மாதம் 2-ஆம் நாள், சென்னை

இரீயூனியன் நாட்டைச் சார்ந்த 10 தமிழர்கள்

தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்து

இரீயூனியன்-தமிழக நல்லுறவு

குறித்து ஆசியவியல் நிறுவன வளாகத்தில்

தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளனர்.

இச்சந்திப்பும் கலந்துரையாடலும் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும்.

இதில் பங்கேற்றுத் தமிழக-இரீயூனியன் நல்லுறவு வலுப்பெறவும், தமிழர் பண்பாடு இரீயூனியன் நாட்டில் வளம்பெறவும் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்

மிக்க நன்றி.
மிக்க அன்புடன்

சான் சாமுவேல்

.

Dr.G.John Samuel,

நிறுவனர்-இயக்குநர்-செயலர்

ஆசியவியல் நிறுவனம்

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர்

சென்னை 600 119

பேசி 9840526834

தளம்  : www.instituteofasianstudies.com