chennai-maanakara-perunthuRamadoss05

வெளியூர்ப் பேருந்துகளையும்

கட்டணமின்றி இயக்க வேண்டும்!

மதுக்கடைகளை மூட வேண்டும்!

 பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தல்!

சனிக்கிழமை, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-

  பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் உணவு முதலான உதவிகளை வழங்குவதுடன், மற்றவர்களையும் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ளூர்ப் பேருந்துகள் மட்டும் இலவசமாக இயக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்டோர் சொந்த ஊர் செல்ல வசதியாக வெளியூர் செல்லும் பேருந்துகளையும் இலவசமாக இயக்க வேண்டும்.

வெள்ளத் துயர் தணிப்புப் பணிகளுக்கும், மக்களும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை குறைந்தது அடுத்த இரு வாரங்களுக்காவது மூடுமாறு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.