புதுச்சேரியில் நூல்அறிமுக விழா –

அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியுதவி வழங்கும் விழா

 puduchery-chathanainuul-vizhaa01

 

‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்அறிமுக விழாவும் அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும்  ஆடி 15, 2045 /31. 07. 2014 மாலை 6 மணி முதல் 8 மணி வரை புதுச்சேரி செயராம் உறைவகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் தலைமை தாங்கி ‘ஒரு சாமானியனின் சாதனை’ என்ற நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். நூலின் முதற்படிகளைப் பண்ருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவர் இரா. பஞ்சவர்ணம், அமெரிக்காவைச் சேர்ந்த தில்லை குமரன், பாரிசு பாலகிருட்டினன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ. அறிவுநம்பி நூல் திறனாய்வு செய்தார்.

புதுவை அரசின் நலத்துறை, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராசவேலு அவர்கள் கலந்துகொண்டு அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியான நூறாயிரம் உரூபாயை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்திப் பேசினார்.

காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் படிக்கும் மாணவிகளும், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளும், புதுவைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவிகளும் நிதியுதவிகளைப் பெற்றுக்கொண்டனர். வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சுந்தர இலட்சுமிநாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.

அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பொறியாளர் கு. இளங்கோவன் தம் கல்விப்பணியை நினைவூட்டி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தன்னம்பிக்கை உரையாற்றினார். முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையாற்றினார். புதுவைத் தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 puduchery-chathanainuul-vizhaa02

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் நூலை வெளியிட இரா. பஞ்சவர்ணம் அவர்கள் பெற்றுக்கொள்ளுதல்

 puduchery-chathanainuul-vizhaa03

சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராஜவேலு அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் கடற்படை சார்ந்த திரு. சோமசுந்தரம் அவர்கள்

 puduchery-chathanainuul-vizhaa04

மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் மாண்புமிகு அமைச்சர் பெ. இராசவேலு அவர்கள்.

puduchery-chathanainuul-vizhaa05

பார்வையாளர்கள்

 puduchery-chathanainuul-vizhaa06

அரவணைப்பு முனைவர் கு.இளங்கோவன் அவர்களுக்குப் பொன்னாடை அணிவிக்கும்மாண்புமிகு நலத்துறை அமைச்சர் பெ. இராசவேலு அவர்கள்

தரவு : முனைவர் மு.இளங்கோவன்