nighazhvu_sembiyan

 மயிலாடுதுறையில் இயங்கும் ‘செந்தமிழ் நாடு’ என்னும் அமைப்பு தனித்தமிழ் இயக்கவிழாவை முனைவர் செம்பியன் தலைமையில் நடத்தியது. தங்க.முருகதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் ‘தனித்தமிழ் இயக்கத்தின் தேவை’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். முனைவர் கலைவாணி பெற்ற நுாற்பரிசுக்காக அவர் பாராட்டப்பெற்றார். முனைவர் க.தமிழமல்லன் அவர்க்குக் கேடயம் பரிசளித்தார்.

 இறுதியில் சுரேசுக்குமார் நன்றி கூறினார். செயலர் முனைவர் தமிழ்வேலு, முனைவர் சீ. இளையராசா, முனைவர் ச.அருள், புரவலர் கி.கலியபெருமாள் முதலியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

nighazhvu_senthamizhnadu02