kamal bangalore cine function01

பெங்களூரில் அண்மையில் கருநாடகச் செய்தித்துறை, கருநாடகச் சலனச்சித்திரா அகாதமி ஆகியன இணைந்து பன்னாட்டுத் திரைப்படவிழாவை நடத்தின.  இவ்விழாவில் ஒரு தமிழ்த் திரைப்படம்கூட வெளியிடப்படாமல் கருநாடகத்தினர் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். எனினும் முன்பு ஒரு திரைப்படத்தில் சிக்கல் எழுந்த பொழுது தான் பெங்களூர் அல்லது மைசூரில் குடியிருப்பேன்  என அறிவித்த கமலை மட்டும் அழைத்து விழாவைத் தொடக்கி வைக்கச் செய்தனர்.

தமிழ்க்கலை உலகைப் புறக்கணித்த கருநாடக விழாவில் கமல் பங்கேற்றது தமிழ்க்கலையுலகினரை அதிர்ச்சி யுறச் செய்துள்ளது.

கலைக்கு மொழி வேறுபாடில்லை எனக் கூறி ஏமாற்றுவோர் தமிழைப் புறக்கணித்தும் அதைப் பெருமையுடன் ஏற்றுக் கொண்ட  கமலைத் தமிழுலகம் புறக்கணிக்குமா?