கருத்தரங்கம் 6 :இந்தியால் தமிழுக்குக் கேடு…! – க. அ.செல்வன்

வருமுன்னர்க் காவா தான் வாழ்க்கை எரிமுன்னர்  வைத்தூறு போலக் கெடும். 1. அழிவுக்கு உண்டான வேலைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டன, நண்பரே, அரசியல் சட்டம் 17ஆவது பிரிவில், அதன் பயனை 65 சனவரி 26ஆம் நாள்முதல் இந்தி அரியணைஏறுவதின் வழியாக நாம் பட்டறியத்தான் போகிறோம். ‘‘தமிழகம் ஏற்றுக்கொண்டால்தானே’’ என்றொரு வினாவை நீர் கேட்கத்துடிப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நிலைமைகள் நம்மைப் பயமுறுத்துகின்றன எனபதை இதோ பாரும். ‘‘தமிழ்நாட்டிலும் வங்காளத்திலும் இந்தியைக் கட்டாய பாடமாக்குவதே என் முதல் வேலை. அதனை எவ்வகையிலும் செயல்படுத்தியே தீருவேன்’’…

கருத்து அரங்கம் 7 இந்தியால் தமிழுக்குக் கேடு! – மே.சி.சிதம்பரனார்

  வினா1 : இந்தியால் தமிழ் எந்த வகையில் அழிகிறது? அழிந்தது? அழியும்? மேல் நாட்டில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ‘‘பின்னமாலியட்’’ என்பாரிடம் எதிர்கால விளைவுகளின் ஐயப்பாடுகள் பற்றி மக்கள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வதுண்டாம். அவற்றுள், ஒரு நாட்டிற்கு வரும் மீளாத பேராபத்து எது? “எவ்வித ஆபத்திற்கும் மீட்சியுண்டு. அந்நாட்டுத் தாய்மொழி மெல்ல மெல்ல மங்கி மறைவதுதான் மீளாத பேராபத்து.” ஒரு நாட்டை என்றும் அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமானால் செய்வதென்ன? “முதற்கண் அந்நாட்டின் மொழி வளத்தைக் கெடுக்க வேண்டும்” இங்ஙனம் கூறிய விடைகள்…

கருத்தரங்கு 5 : இந்தியால் தமிழுக்குக் கேடு…!

– பி.சு.தங்கப்பாண்டி குலசேகரப்பட்டி 1. ‘இந்தி படித்தால்தான் நடுநிலையரசில் பதவிகள் பெறமுடியும்’ என்ற உணர்வு மாணவ உள்ளங்களில் தூண்டப்படுகிறது. நம்மவர் படிப்பது பதவிக்குத்தான்; அறிவோடும் தன்மானத்தோடும் வாழவல்ல. இதனால் தமிழார்வம் கொண்டோரும், தமிழால் பயனில்லையோ? என்று எண்ண வேண்டியுள்ளது. இதற்குத் தமிழ் அழிந்ததோ, இல்லையோ, தமிழை வளர்க்க வேண்டியோரின்  உள்ளங்கள் அழிந்ததாயின. அழிகிறது; இதே நிலைமை நீடித்தால் அழியும். 2. இந்தியா ஒரு தனியாட்சி நாடாக இருந்தால் மாநிலங்களின் தொடர்பிற்குரிய மொழி இந்திதான். அதை ஒப்புக் கொள்வது தவறல்ல. ஏனெனில் தனியாட்சிதானே! ஆனால் இந்தியா…

கருத்தரங்கு 2: இந்தியால் தமிழுக்குக் கேடு…!- ச.சிவசங்கர்

ஐயா! குறள்நெறிக் கருத்தரங்கத்தில் ஓர் அன்பர் விடுத்த வினாக்களுக்கு விடையாக எனது கருத்துகள். அவ்வன்பர் தொடக்கத்தில் ‘பிறப்பால் தமிழன், மொழியால் தமிழன்; என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!’ எனக்கூறிவிட்டுப் பல பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை முதற்கண் அன்பர் தெரிந்து கொள்வது, அவர் எடுத்துக் கொண்ட செயலுக்கு மிக வேண்டற்பாலதாகும். – ச.சிவசங்கர். 1. ஒரு காலத்தில் ஆண்டமொழியாக இருந்த தமிழ், வெள்ளையன் காலத்தில் இரண்டாந்தர மொழியாக ஆகியது. வெள்ளையன் சென்ற பின் காங்கிரசு…

அரசுப்பணிக்குத் தமிழ்ப்புலவர்கள்

    தமிழ்நாட்டு அரசு அலுவல்களில் தமிழ்ப் புலவரும் பணிபுரியலாம் எனும் செய்தி வெளிவந்துளளது. இச்செய்தி வெளிநாட்டார்க்கு நகைப்பை விளைவிக்கும். ஆங்கில நாட்டில் ஆங்கிலத்தில் புலமையுற்றோரும், ஏனைய நாடுகளிலும் அவ்வந்நாட்டு மொழிகளிலும் புலமைபெற்றோரே அலுவல் துறைகளில் முதன்மையிடம் பெறுகின்றனர். தமிழ்நாட்டிலும், தமிழ் ஆட்சிமொழியானபிறகு தமிழ்ப்புலமை பெற்றோரே தமிழ்நாட்டு  அரசு அலுவல் துறைகளில் அமர்த்தப்படல் வேண்டும். ஆனால் இன்னும் தமிழ்ப்புலமைப் பட்டம் பெற்றோர்க்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை தமிழ்ப் புலமையுற்றோர் பணிதேடிச் செல்லுங்கால் ஆங்கிலப் புலமை பெற்றிருந்தம், அதனுடன் தமிழ்ப்புலமை பெற்றிருப்பதால் அதற்காக இகழப்படுகின்றனராம். என்னே…

உண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால்…

ஒட்டடார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கொட்டான் எனப்படுதல் நன்று.     இந்தியக் கூட்டரசு பதினான்கு மொழிகளையும் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசியல் சட்டம் கூறுகின்றது. எல்லா மாநிலங்களும் இணைந்துள்ள கூட்டரசில் எல்லா மாநில மொழிகட்கும் சம உரிமையும் வாய்ப்பும் அளித்தல் வேண்டும். கூட்டரசுப் பாராளுமன்றில் அவைகளைப் பயன்படுத்துவதற்குத் தடை இருத்தலாகாது. கூட்டரசுப் பாராளுமன்றில் தேசிய மொழிகள் என ஒப்புக் கொள்ளப்பட்டவற்றுள், எதில் வேண்டுமானாலும் யாரும் உரை நிகழ்த்தலாம் எனும் உரிமை ஒப்புக் கொள்ளப்படல் வேண்டும். இவ்வுரிமை மறுக்கப்பட்டால் கூட்டரசு என்பது பொருளற்று…

கருத்தரங்கு 1: இந்தியால் தமிழுக்குக் கேடு!

-சா.வி. இராசேந்திரதாசன், தேனி 1937ஆம் ஆண்டில் தமிழ்ப் பெரியார் மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர் தி.ருவி.க. பசுமலை பாரதியார் ஆகிய தமிழ்ப் பெருமக்கள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தின் மணம், தமிழகத்து மூலை முடுக்குகளில் உள்ளவர்களையெல்லாம் மொழியுணர்வு மிக்கவர்களாய் எழுச்சி பெறச் செய்து தமிழ் மொழிக்கு மறுமலர்ச்சி அளித்தது. அன்றுதொட்டு இந்திமொழி இந்நாட்டை ஆளத் தகுதியற்றது என மொழித்துறை அறிஞர் பலர் தம் கருத்துக்களைத் தெளிவுபடுத்தி வந்துள்ளனர். நாடோறும் நல்ல தமிழ் வழங்கும் நாட்டம் உடையவராய்த் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நண்பர் திரு. பாரதம், எம்.சி….

அன்பர் கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு!

குறள்நெறி  மாசி 18. 1995 / 01.03.1964 இதழில், ‘பாரதம்’ எம்.சி.(இ)லிங்கம் என்னும் நண்பர் இந்தி குறித்துப் பின்வருமாறு எழுதி 7 வினாக்களைத் தொடுத்து விடை கேட்டிருந்தார். நான் பிறப்பால் தமிழன்! மொழியால் தமிழன்! என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!  சுருங்கக்கூறின் என் உடல், பொருள், ஆவி தமிழ்தான்! எனினும் தேசியப்பற்று உடையவன். என் தேசம் இந்தியா! என் தலைவர் நேருசி, என் உரிமை காமராசர், என் சகோதர,  சகோதரிகள் நாற்பது கோடி மக்களும்! ஆக,…

தமிழ்ப் புலவர்கட்கு வேண்டுகோள்

 – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்நாட்டில் தமிழ் இன்னும் தனக்குரிய இடத்தை அடையவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி அகன்றுவிட்டபோதும் ஆங்கில மொழியாட்சி இன்னும் அகன்றிலது. ஆங்கிலேயர் ஆண்டகாலத்தைவிட இன்று ஆங்கிலம் போற்றப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகின்றது. தமிழை இந்நாட்டின் ஆட்சிமொழி என ஒப்புக்கொண்டுள்ள போதிலும் தமிழைக் கற்றுப் புலமையடைந்தோர்களைத் தக்கவாறு பயன்படுத்தும் சூழ்நிலை இன்னும் உண்டாகவில்லை. தலைமையிடத்தில் இருப்போரெல்லாரும் ஆங்கிலப் பற்று மிகுந்தோராய்த் தமிழ்ப்பற்றும் அறிவும் குறைந்தோராய் இருப்பதனால் தமிழை எள்ளி இகழ்ந்து ஒதுக்கும் நிலையிலேயே உள்ளனர். ஆகவே இச்சூழ்நிலையில் தமிழைப் போற்றிவளர்த்து, அதற்குரிய இடத்தை அடையுமாறு…

செந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி

  – கே இராமையா 1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப் பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப் பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப் புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச் சதிராடி வந்தவளே! தமிழே! தாயே! மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன் மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர் 2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள் செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன் போராட லேன்? பிணங்கள் தானே விழும் பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்! நேராத செயல்நேரக் கண்டேல் வேலி நெற்பயிரை…

இந்திக்கு முதன்மை பிரிவினைக்கு வித்து

 – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் இந்தியக் கூட்டரசின் பொதுப்பணிக்குழுவின் தேர்வு மொழியாக இந்தியை ஆக்குவதற்கு, இந்திமொழி பேசப்படாத மாநில முதல் அமைச்சர்களுடன் இந்தியக் கூட்டரசுத்துறையினர் ஆய்வு நிகழ்த்தப்போவதாகச் செய்தியொன்று வெளிவந்துள்ளது. கூட்டரசு மொழிகளில் இந்தியை மட்டும் பொதுப் பணிக்குழுவின் தேர்வு மொழியாக ஆக்குதல் இந்திக்கு மட்டும் ஏற்றம் அளித்து, கூட்டரசின் ஏனைய மொழிகளை இழிவுபடுத்துவதாகும்; ஏனைய மாநிலங்களுக்கு இழைக்கும் பெருந்தீங்காகும். ஆதலின் கூட்டரசு மொழிகள் அனைத்திலும் தேர்வு எழுதுவதற்கு உரிமையளித்தல்தான் கூட்டரசுக் கொள்கைக்கு ஏற்றதாகும். இன்றேல் ஏனைய மொழியாளர் கூடி வாழ்வதால் பயனில்லை என்று…

இந்தியாவின் மொழிச்சிக்கல்

–       கூடலரசன்   இந்தியத் துணைக்கண்டத்தில் நிலையான விவாதத்துக்குரிய சிறந்த பொருளாக மொழிச்சிக்கல் அமைந்துள்ளது அரசியல் வடிவம் பெற்றுள்ள மொழிஆதிக்கம் பெருநிலப் பரப்பின் கருப்பொருளாக அனைவரின் சிந்தனையையும் கவர்ந்துள்ளது. ஆட்சிப்பீடத்து ஆதிக்க மொழியாக நான்கு நூற்றாண்டுகள் இடம் பெற்றிருந்த ஆங்கிலம் அகற்றப்படுவதும், அந்தச் சிறப்பான உரிமையை இந்தி மொழிக்கு வழங்குவதும் இமயம் முதல் குமரிமுனை இறுதியாக கடுமையான கண்டனத்துக்குரியதாக அமைந்துள்ளது. இந்திக்கு மகுடம் சூட்டினாலும் ஆங்கிலத்தின் தேவையைப் புறக்கணிப்பது இயலாத செயலாக இருக்கிறது. ‘அறிவுப் பெருக்கத்திற்கு ஆங்கிலம் தேவையாகும். அனைத்திந்தியத் தொடர்பு மொழியாக ஆங்கிலமே…