தமிழ்ச்சொல்லாக்கம் 606-610

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 606-610 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 606. பட்சி சகுனம்              –              புற்குறி 607. அத்தினாபுரம்             –              குருநகர் நூல்        :               பெருமக்கள் கையறு நிலையும் –…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3  காட்சி : 1

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3  காட்சி : 1 மோனைப்புலவன் – அல்லி கலித்தாழிசை மோனை :                மேற்றிசையில்           ஒளிகுறைய                                       மேகங்கள்                         கருத்துவர                                    தோற்றந்தான்            மிகுந்தமயில்                                       தோகையை              விரித்தாட                              காற்றினிலே             குயிலோசை                                       கனிவைமிக              எழுப்புகையில்                              வேற்றாளாய்             எனைவிலக்கி                                       விரைந்துநீ                         செலலாமோ                              ஆதவனும்                         மேற்றிசையில்                                       அழகொளியைப்                  பரப்பிவிட                              போதினையே           மலர்த்தியங்கே                                       புகுகின்ற                         …

உ.வே.சா.வின் என் சரித்திரம் 24

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 23 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 14 தொடர்ச்சிசடகோபையங்காரிடம் கற்றது தொடர்ச்சி மாலை வேளையில் அவர் கடை வீதி வழியே செல்வார். என் வத்திரத்தை வாங்கி மேலே போட்டுக்கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடைய திருவுலாவிலே அங்கவத்திரமாக உதவும். அவர் செல்லும்போது அவரைக் கண்டு ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் இருக்கச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்புக் காணிக்கையை ஐயங்கார் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வருவார். எல்லாவற்றையும் சேர்த்து…

தமிழ்நாடும் மொழியும் 23: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 22 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 23 பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி முதற் குலோத்துங்கனின் தாய் அம்மங்கைதேவி. இவள் கங்கைகொண்ட சோழனின் மகளாவாள். குலோத்துங்கனின் தந்தை வேங்கியை ஆண்ட இராசராசன் – இவன் குந்தவையின் மகன். குந்தவை முதல் இராசராசனின் மகள். எனவே முதற்குலோத்துங்கன் சாளுக்கியன் என்பதைவிடச் சோழன் என்னலே பொருத்தமுடைத்தாகும். முதற் குலோத்துங்கன் சோழநாட்டை கி. பி. 1070 லிருந்து 1120 வரை, அஃதாவது ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்டுள்ளான். இவன் பட்டம் பெற்ற காலத்தில் சோழப் பேரரசு பல…

தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 2/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 1/3  தொடர்ச்சி) செஞ்சொல் நடைவேந்தர் ‘நடை’ என்பது எழுத்தாளரின் இயல்பையும், சித்தனைப் போக்கையும் வெளிப்படுத்த-வல்லது என்பர். எளிமை, அமைதி, அடக்கம் இவற்றின் வடிவானவர் திரு.வி.க. ஆனால், அவர்தம் நடை வீறுகொண்டதாய், சிந்தனையைக் கிளறுவதாய். மிடுக்கு நிறைந்ததாய் விளங்கும் தெளிந்த நடையாகும். வாழ்வையும் இலக்கியத்தையும் ஒன்றாகக் கண்டு வாழ்ந்த திரு வி. க. வுடன் நெருங்கிப் பழகிய முனைவர் மு.வ. அவர்கள், அவர்தம் நடையில் காணப்படும் வியத்தகு கூறுகளைத் தம் கட்டுரை யொன்றில், “எழுதும்போது இருந்த பண்பாடும் பேசும்போது வந்தது….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 25

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ இவர்கள் ஆரியர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்தவர்களாவார்கள் என்று கூறலாம். ஒரு சிலர் அவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய காலத்திலோ அக்காலத்தை ஒட்டிப் பின்போ வாழ்ந்திருக்கலாம். சிலர் பெயர்களும் பாடல்களுட் பயின்ற சில சொற்களும் வடமொழியைச் சார்ந்தன என்று கருதப்பட்டன. தேவன், பூதன், கீரன் முதலியனவற்றை வடசொற்கள் என்றே கருதியோரும் உளர். இவையெல்லாம் தூய தமிழ்ச்சொற்களே. தேவன் என்ற சொல் இனியன், விருப்பத்திற்குரியன், இடத்திற்குரியன் என்னும் பல பொருளினது. பூதன், பூதம்  என்ற தமிழ்ச் சொல்லினடியாகத்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):21

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 20. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):21  4.குலமும் கோவும்      பழந் தமிழ் நாட்டில் பல வகுப்பார் வாழ்ந்திருந்தார்கள்; பல குல மன்னர் ஆட்சிபுரிந்தார்கள். அன்னார் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் பெயரும் பெருமையும் ஊர்ப் பெயர்களால் விளங்குகின்றன. நாகர்      நாகர் என்பார் ஓர் இனத்தார். தமிழ் இலக்கியங்களில் நாகநாடு செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது.1 சோழ மன்னன் ஒருவன் நாக மங்கையை மணந்து பெற்ற மைந்தனே தொண்டைமான் என்னும் பெயரோடு காஞ்சி…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605

( தமிழ்ச்சொல்லாக்கம் 597 – 600 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 601-605 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 601. போசன பாத்திரம் –           பரிகலம் 602. அக்கினிச் சுவாலை         –           தீக்கொழுந்து நூல்   :           திருக்குற்றாலக் குறவஞ்சி…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 23

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 22 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 14சடகோபையங்காரிடம் கற்றது சடகோபையங்கார் மாநிறமுடையவர். குட்டையாகவும் பருமனாகவும் இருப்பார் பலசாலி. அவர் பேசும்போது அவரது குரல் சிறிது கம்மலாக இருக்கும்; ஆனால் பாடும்போது அது மறைந்து விடும். தமிழில் சுவை தெரிந்து படித்தவர் அவர். அவரை ஆவண்ணாவென்று யாவரும் அழைப்பர். அவருக்குச் சங்கீதமும் தமிழும் ஒரு தரத்திலே இருந்தன. சங்கீதப் பயிற்சி யுடையவர் தாமும் இன்புற்று மற்றவர்களையும் இன்புறுத்துவ ரென்பார்கள். சடகோபையங்காரிடமிருந்த தமிழானது சங்கீதம் போலவே அவரை முதலில் இன்புறச் செய்து பின்பு மற்றவர்களையும்…

தமிழ்நாடும் மொழியும் 22: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 21 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 22 பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி இவற்றோடு சோழப்படை நிற்கவில்லை. கங்கைக் கரைநோக்கிச் சோழப்படை விரைந்தது. இராசேந்திரன் செல்லவில்லை. சென்ற சோழப்படை, வங்கத்தை ஆண்ட மகிபாலன், கோவிந்த சந்திரன் ஆகிய இரு மன்னர்களையும் தோற்கடித்தது. பின்னர் கங்கை நீர் நிரம்பிய குடங்களைத் தோற்ற வட நாட்டு மன்னர்தம் தலை மீது சுமத்திச் சோழப்படை தென்னகம் திரும்பியது. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரம் இந்த வெற்றியின் நினைவாக உண்டாக்கப்பட்டது. கங்கைகொண்டான் என்ற விருதுப் பெயரும் சோழனுக்கு ஏற்பட்டது….

தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 1/3 முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 6/6 தொடர்ச்சி) 7. தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் வாழ்வும் பயனும் இன்றைய சமுதாயம் எண்ணற்ற தலைமுறையினரின் உழைப்பில் மலர்ந்ததாகும். காலந்தோறும் வளர்ச்சியை உருவாக்க முன்னோடிகளாகச் சிலர் தோன்றுகின்றனர். வருங்காலச் சமுதாயத்தினர் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கும், எளிமைப்படுத்திக் கொள்வதற்கும், கருத்து வடிவத்திலும், செயல் வடிவத்திலும் அத்தகையோர் தொண்டாற்றி வருகின்றனர். தன்னலம் கருதாத தொண்டையே தங்கள் வாழ்க்கையின் பயன் என்று கருதுகின்றனர். ‘சமுதாயப் பணியே வாழ்வின் குறிக்கோள்’ எனக் கருதிப் பணியாற்றுவோர் மிகச் சிலர். இருபதாம் நூற்றாண்டுத்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ புலவர் பெயர்                                 பாடல் தொகை        100. கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்          1        101. கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்               1         102. கிள்ளிமங்கலம்கிழார்                      4         103.  கீரம் கீரனார்                                     1         104. குடவாயிற் கீரத்தனார்                    18         105. குட்டுவன் கண்ணனார்                     1         106. குட்டுவன் கீரனார்                               1    107.   குதிரைத் தறியனார்                              1…