தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 238 – 244

(தமிழ்ச்சொல்லாக்கம் 228 – 237தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 238. சுக்கிலம்        –           வெண்மை 239. கிருட்டிணம்   –           கருமை 240. பீதம்     –           பொன்மை 241. இரக்கதம்          –           செம்மை 242. அரிதம்            –           பசுமை 243. கபிலம்            –           புகைமை 244. இரத்தினம்    –           மணி நூல்   :           தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் (1909) பக்கம் : 8. நூலாசிரியர்         –            தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி இராசு. (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  58

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 21 தொடர்ச்சி இரவு எல்லாரும் உறங்கின பின் தனக்குச் சொந்தமான இரண்டு மூன்று அழுக்குச் சட்டை, துணிகளையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு இரயில் பாதை வழியாக நடக்க ஆரம்பித்து விட்டான். பயங்கரமான இருளில் தண்டவாளத்தையும் சரளைக் கற்களையும் மாறி மிதித்துக் கொண்டே முழங்காலில் சிராய்த்துக் காயம்படுவதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். மதுரையிலிருந்து கிழக்கே இராமேசுவரம் செல்லும் இரயில் பாதையின் அருகில் மதுரையிலிருந்து பதினெட்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்திலிருந்துதான் மதுரையை நோக்கி அவன் புறப்பட்டிருந்தான். ஏன்?…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 228 – 237

(தமிழ்ச்சொல்லாக்கம் 218 -227தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 228. தேசிய கீதம் – நாட்டுப் பாட்டு (1908) பரலி ச. நெல்லையப்பர் 229. அஞ்சலி           –           கும்பிடல் 230. அதீதம்            –           எட்டாதது 231. அபிநயம்        –           கைமெய் காட்டல் 232. சம்மதம்          –           உடன்பாடு 233. சுதந்தரம்       –           உரிமை 234. கனிட்டர்        –           இளையவர் 235. நிருத்தம்        –           கூத்து 236. இரத்தம்          –           புண்ணீர் 237. விவாகம்         –           மணம் நூல்   :           மார்க்கண்டேய புராணம் வசன…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21-1.6.2

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16-20  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் தாய்மொழிப் படலம்        21.   காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர்தா மவரோடு                  சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல்                  ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக்                  காதினுங்கேட் டறியார்கைக் களிறிளைக்கு மலைநாடர்.            22.    அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே                  மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப்                  புறப்பொருளின் றுறையறிந்து பொருதுபுகழ் பூண்டிருந்தார்                  திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர்.            23.   ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ்                 …

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 218 -227

(தமிழ்ச்சொல்லாக்கம் 213 – 217 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 218. அசாதாரண தருமம்   –    சிறப்பியல்பு 219. ஆசீர்வாத ரூபம்     – வாழ்த்து 220. திருக்கு – அறிவு 221. நாநா    –          பல 222. பரசுபரம்      – ஒன்றற் கொன்று 223. பத்தியம் – பாடல் 224. பிரதியோகி  – எதிர்மறை 225. பிராக பாவம் – முன்னின்மை 226. விசேடம் – அடைகொளி 227. விட்சேபம்      – புடைபெயர்ச்சி நூல்   :           வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908) குறிப்புரை…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  56 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 21 நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்கனற்புகைய வேகின்றான். . .     – புகழேந்தி முதலில் திட்டமிட்டிருந்தபடி அரவிந்தனும் முருகானந்தமும்தான் கோடைக்கானலுக்குப் புறப்படுவதாக இருந்தது. காலையில் புறப்படுகிற சிறிது நேரத்துக்கு முன்னால் அந்தத் தந்தி வந்திருக்காவிட்டால் அரவிந்தன் பயணம் தடைப்பட்டிருக்காது. அரவிந்தனுக்குத் தன்னுடைய சொந்தக் கிராமத்தில் உறவு கொண்டாடிக் கொண்டு ஆள்வதற்கு சொத்து ஒன்றுமில்லாவிட்டாலும் மனிதர்கள் இருந்தார்கள். பேருக்குத்தான் அவர்கள் உறவினர்கள், உண்மையிலோ அத்தனை பேரும் பகைவர்கள், அத்தனை பேரும் குரோதமும் அசூயையும் கொண்டவர்கள்;…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 213 – 217

(தமிழ்ச்சொல்லாக்கம் 208-212தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 213. GLAND- உமிழ்நீர்க் கோளம் கீழ்த்தாடை என்பு, மேல்தாடை என்பு இவற்றில் உமிழ்நீர்க் கோளங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்றாக அணைந்திருக்கின்றன. நூல்   :           சரீரவியவசேத சாத்திரம் என்னும் அங்க விபாக சுகரண வாதம் (1906) பாகம் 15 நூலாசிரியர்                     டி. ஆர். மகாதேவ பண்டிதர் ★ 214. தத்தம் –           கொடுக்கப்பட்ட பொருள் 215. சூதிகாகாரம்            –           பிள்ளை பெறும் வீடு 216. திகுதிகு           –           சுடுகடு நூல்   :           சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை (1907)…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 208-212

(தமிழ்ச்சொல்லாக்கம் 203-207தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 208. புருசார்த்தம்    –   தக்க நலம் 209. பரிசுத்த (இசு)தானம் –   தூய நிலம் 210. துர்கதி –   பொல்லா நெறி நூல்   :           பகவத்(து) கீதை வெண்பா (1906) நூலாசிரியர்                     வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர் ★ 211. Cultivators         :           பயிரிடுகிறவர்கள் 212. Sea Custom                   கடல்வரி இதழ் :           விவகாரி (1906), புத்தகம் இலக்கம் 1 இதழாசிரியர்                   ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  56

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  55 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 20 தொடர்ச்சி அவள் துன்பப்பட்டிருக்கிறாள்! பொறுப்புகளைச் சமாளித்திருக்கிறாள். வாழ்க்கை வீணையின் நரம்புகளில் எல்லாவிதமான துன்ப நாதங்களையும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவற்றால் மூப்புக் கொண்டு அழிந்து விடவில்லை. தன்னுடைய உடம்பைப் பேண நேரமின்றி, பேணும் நோக்கமும் இன்றித் தன்னையே மறந்துவிட்டிருந்தாள் அவள். ஆனால் உடம்பு அவளை மறந்துவிடவில்லை. கண்ணாடியில் உடம்பைக் கண்டு கொண்டே மனத்தில் சிந்தனைகளைக் காண்பது சுகமாக இருந்தது. சமையற்கார அம்மாள் வந்து ‘மருந்து சாப்பிட வேண்டிய நேரம்’ என்று நினைவுபடுத்திய போது தான்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 203-207

(தமிழ்ச்சொல்லாக்கம் 197-202 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 203. மத்தியசுதன்   –    நடுவோன் 204. (இ)லாபம்  –    பேறு 205. துர்கதி –   பொல்லா நெறி 206. கர்மபந்தம்    –    வினைக்கட்டு 207. (இ)லாப நட்டம் –   பேறு இழவு நூல்   :           பகவத்(து) கீதை வெண்பா (1906) நூலாசிரியர்                     வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர் பதிப்பாளர்                        சே. கே. பாலசுப்பிரமணியம் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 197-202

(தமிழ்ச்சொல்லாக்கம் 178- 196 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 197. அசுதமயம்   –        ஞாயிறுபடுதல் 198. அற்பம் –        சிற்றளவை 199. அநுராகம்      –        தொடர் விருப்பு 200. கவி       –        புலவன் 201. கல்யாணம்   –        மணவினை 202. விபரீதம்         –        மாறுபாடு நூல்   :           சேந்தன் செந்தமிழ் (1906) நூலாசிரியர்                     பாம்பன் குமர குருதாச சுவாமிகள் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  55

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  54 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 20 தொடர்ச்சி  ‘உன் விருப்பம் தெரிந்து இந்தக் கடிதங்களுக்கு நான் மறுமொழி எழுத வேண்டும். அல்லது நீயே அவர்களுக்குத் தனித்தனியே பதில் கடிதம் எழுதி விடலாம். எங்கள் எல்லோருடைய அபிப்பிராயமும் நீ இவற்றுக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதுதான். உடல்நிலைப் பற்றிக் கவலைப்படாதே! இவற்றில் கலந்து கொண்டு அடைகிற உற்சாகமும் கலகலப்புமே உன் உடம்பைத் தேற்றிவிடும் என்பது எங்கள் கருத்து. மேலும் அவை எல்லாவற்றுக்கும் நீ ஒப்புக் கொண்டாலும் முழுமையாக இன்னும் இரண்டு மாத கால…