தமிழகப் புலவர் குழு – புதிய பொறுப்பாளர்கள்

  தமிழகப் புலவர் குழுவின்  107 ஆவது  கூட்டம்  கிருட்டிணன்கோவில் நகரில் உள்ள  கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில்,  கோலாகலமாக  நடந்தேறியது. பங்குனி 07, 2047 /  மார்ச்சு 20, 2016 காலை  10.00 மணியளவில்  தமிழ்த்தாய் வாழ்த்துடன்  கூட்டமானது  தொடங்க, கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் க.சிரீதரன் வரவேற்புரையாற்றினார்.   புலவர் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில்  தலைவர்,  செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாண்மைக்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புலவர் குழுவின் தலைவராக முனைவர் சிலம்பொலி செல்லப்பன், துணைத்தலைவராக இதுவரை செயலாளராகப்பணியாற்றிய, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,  செயலாளராக  முனைவர்  மறைமலை இலக்குவனார்,…

இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம்,சென்னை

  மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 : காலை 10.00 இராணிமேரிக்கல்லூரி(தன்னாட்சி) சென்னை 600 004 தமிழ்த்துறை தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கம் சிறப்புப் பொழிவுகள்: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு கருத்தரங்கத்தலைவர் : முனைவர் ந.கலைவாணி கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி.கலைமகள் தலைமையுரை : முனைவர்  இர.அத்தர்பேகம் புரவலர் : முனைவர் இ.மதியழகி

தாய்மொழிநாளில் பேரா.மறைமலை காணுரை – ‘சன்’ தொலைக்காட்சி

சன் தொலைக்காட்சிக்குப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் அளித்த நேர்காணல் – உரை வடிவில்   இந்த ஆண்டு ‘உலகத் தாய்மொழி நாள்’ (மாசி 09, 2047-பிப்பிரவரி 21, 2016) அன்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சன் தொலைக்காட்சியின் ‘விருந்தினர் பக்கம்’ நிகழ்ச்சியில் ‘உலகத் தாய்மொழி நாள்’ குறித்து அளித்த நேர்காணலின் உரை வடிவம்.   தொகுப்பாளர்: ஒவ்வோர் ஆண்டும் பிப்பிரவரி 21ஆம் நாள் ‘உலகத் தாய்மொழி நாள்’ கொண்டாடுகிறோம். உலக நாடுகள் எல்லாமே இந்த நாளை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றன. இந்த நாளை…

சன்தொலைக்காட்சியின் சூரிய வணக்கத்தில் பேரா. மறைமலை

  சன் தொலைக்காட்சியில் மாசி 10, 2047 / பிப். 22.02.2016 திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் சூரிய வணக்க நிகழ்ச்சியில் காலை 8.00 மணிக்குப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் செவ்வி / பேட்டி ஒளிபரப்பாகிறது.   http://www.sunnetwork.in/ இணையத் தளத்திலும் காணலாம்.

மருத்துவமாமணி கண்ணப்பன் போற்றி விழாக்கள்

மருத்துவமாமணி கண்ணப்பன் அவர்களின் 81-ஆம் பிறந்தநாள் விழா & 5-ஆம் நினைவுநாள்   மறைமலை இலக்குவனார், திருக்குறள் மோகனராசு,பெங்களூர் மருத்துவர் நாகேசு, பால.சீனிவாசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். வாசுகி கண்ணப்பன் விழாவைச் சிறப்பாக நடத்தினார். இசைப்பாவலர் இரமணன், பா.ச.க.தலைவர் இல.கணேசன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.தாண்டவன், மு.சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்

கண்ணப்பர்விழா இன்று(13.12.2015) நடைபெறுகிறது.

பேரா.மருத்துவர் முதுமுனைவர் கண்ணப்பரின் 81 ஆம்  பிறந்தநாள் விழா,  5 ஆம்  ஆண்டு நினைவு நாள் மறைமலை இலக்குவனார் முதலானவர்க்கு விருது வழங்கும் விழா இசைப்பொழிவு நூல் வெளியீடு கார்த்திகை 27, 2046 / திசம்பர் 13, 2015 சென்னை

இணையவெளியில் பாரதியார் விழா – மறைமலை இலக்குவனார்

இணையவெளியில் பாரதியார் விழா திசம்பர் 11: பாட்டுக்கொரு புலவர் பாரதியார் பிறந்தநாள். மழைத் தொல்லையில் வெளியே விழாவுக்குப் போகமுடியவில்லை. வீட்டிலேயே கணினிமுன் அமர்ந்து கொண்டாடுவோம். பாரதியாரைப் பற்ரிய உங்கள் கவிதையை, கட்டுரையை ஒருங்குறி எழுத்தில் வடித்துக் கவிதை விக்கிக்கு அனுப்புங்கள். உங்கள் முகநூல் கணக்கைக் கொண்டு கவிதை விக்கியில் சிக்கலின்றி நுழையலாம் .உடனடியாகத் தரவேற்றம் செய்யலாம். உங்கள் பேச்சைக் கூட எம்பி4 கோப்பில் பத்து மணித்துளிகளுக்கு மிகாமல் அனுப்பலாம். வாருங்கள். உலகப்பெரும் பாவலன் பாரதியின் புகழ் பரப்புவோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் வரலாற்று ஆவணம் – மறைமலை இலக்குவனார்

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் 3 மறுமலர்ச்சிக் காண்டம் நூலிற்கு முனைவர் மறைமலை இலக்குவனாரின் அணிந்துரை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப்பாவலர். உலகைப் பலமுறை (49 தடவை) வலம் வந்த ஒரே தமிழறிஞர். ‘கெடல் எங்கே தமிழின் நலம்!அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’ எனும் புரட்சிக்கவிஞரின் ஆணையைத் தம் வாழ்நாள்பணியெனக் கொண்டு செயலாற்றும் தமிழ்மறவர். கரிகாற்பெருவளத்தானையும் சேரன் செங்குட்டுவனையும் நிகர்த்த தமிழ் மறம் கொண்ட தமிழ் உரிமைப்போராளி. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’என்னும் திருநாவுக்கரசரின் வாக்கையேற்றுத் தமிழ்ப்பகை கடியும் தறுகண்மை மிக்கவர். தமிழுக்குச் செம்மொழித்தகுதிப்பேறு வழங்கவேண்டுமென அற்றைத்…

மறைமலை இலக்குவனார் பங்கேற்ற மயிலாடுதுறை அ.வ.அ.கல்லூரி விழா

மயிலாடுதுறை அ.வ.அ.கல்லூரியில் பாவேந்தர் 125-ஆம் பிறந்தநாள்விழா ஐம்பெரும்விழா பேராசிரியர் துரை.குணசேகரன் எழுதிய இரு நூல்கள் வெளியீடு

முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம்

முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம் தொகுப்பு : பாரி முடியரசன் வெளியீடு : சாகித்ய அகாதெமி ஐப்பசி  17, 2045 / நவ.03, 2015 மாலை 6.00 சென்னை