வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26. அடக்க முடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல்  26.   அடக்க முடைமை 251.அடக்க மனம்புலத் தணுகா தடக்கல். அடக்கம் என்பது மனத்தை ஐம்புலன்களில் இருந்தும் காத்தல் ஆகும் .252.அறிவினர்க் கென்று மடங்கி யொழுகல். அடக்கம் என்பது அறிஞர்களுக்கு எப்பொழுதும் அடங்கி நடத்தல் ஆகும். அடக்கநன் னெறியி னடக்கச் செய்யும். அடக்கம் நல்லொழுக்க நெறியில் நடக்கச் செய்யும். அடக்கமில் லாமை யதைக்கடக் கச்செய்யும். அடங்காமை நல்லொழுக்க நெறியை மீறச் செய்யும். அடக்கம் பல்வகை யாக்கமுந் தருமே. அடக்கம் பல வகையான செல்வங்களையும் தரும். அடக்க…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. நடுவு நிலைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல்  25. நடுவு நிலைமை நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல். நடுவு நிலைமை என்பது பாரபட்சம் பார்க்காத தன்மை ஆகும். பிறவுயிர் நடுவள விறனடு வின்மை. பிற உயிர்கள் நடுங்குமாறு செய்வது நடுவின்மை ஆகும். நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள். அறமாகிய பொருளின் மையமாக விளங்குவது நடுவு நிலைமை ஆகும். அறனெலா நிற்பதற் கஃதா தாரம். எல்லா அறங்களுக்கும் அடிப்படை நடுவு நிலைமையி நிற்றலே ஆகும். அதுசிறி தசையி னறனெலா மழியும். நடுவு நிலைமையில் இருந்து…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. நன்றி யறிதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 24. நன்றி யறிதல் நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி. மற்றவர்கள் நமக்குச் செய்தவையை நினைவு கூர்தலே நன்றி ஆகும். உறவினர் முதலியோ ருதவுதல் கடனே. உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும். பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே. பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை. உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல். துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும். உயர்ந்தது கைம்மா றுகருதா துதவல். உதவியில் உயர்ந்தது பதிலுக்கு…

இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் : தொடர் 79

வ.உ.சிதம்பரனார், மறைமலையடிகள், சி.இலக்குவனார் புகழ் போற்றும் விழா: புரட்டாசி 04, 2047 / செட்டம்பர் 20, 2016 மாலை 6.00 – இரவு 9.00 இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் ஆடற்கலையரங்கம் பேச்சுக்கலைப் பயிற்சி யரங்கம் பரிசுவழங்கிப் பாராட்டரங்கம் எண்கண்மணி

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. திருந்தச் செய்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.22.தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 23. திருந்தச் செய்தல் 221.திருந்தச் செயலியல் பொருந்தச் செய்தல். திருந்தச் செய்தல் என்பது சிறப்பான முறையில் ஒரு செயலைச் செய்வது ஆகும். அழகு நிறைவு மமைவுறச் செய்தல். திருந்தச் செய்தல் என்பது பொருத்தமான முறையில் முழுமையாகச் செய்வது ஆகும். 223.திருந்தச் செய்தலே செய்தற் கிலக்கணம். ஒரு செயலைச் செய்யும் முறையானது திருந்தமாகச் செய்வதே ஆகும். 224.திருந்தச் செயல்பல சீர்களைக் கொணரும். திருந்தமாகச் செய்வது பல பெருமைகளை ஏற்படுத்தும். திருத்தமில் செயலாற் சீர்பல நீங்கும். திருத்தமில்லாத செயல்களால்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.22. தொழில் அறிதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.21 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 22. தொழில் அறிதல் மெய்யுறுப் புக்கொடு செய்வது தொழிலே. தொழில் என்பது உடலால் உழைப்பது ஆகும். தொழிலா லுலகந் தோன்றிநிற் கின்றது. உழைப்பினால் உலகம் அழியாமல் இருக்கின்றது. தொழிலிலை யெனிலுல கழிவது திண்ணம். தொழில் இல்லை எனில் உலகம் அழிந்து போவது உறுதி ஆகும். தொழிலிலார் வறுமையுற் றிழிவெலா மடைவர். தொழில் செய்யாதவர்கள் வறுமை நிலை அடைந்து அவமானப்படுவர். அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன். உயர்ந்த, சிறந்த தொழில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளுதல் அனைவரின் கடமை…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.20 அழுக்கா றொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.19. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 20. அழுக்கா றொழித்தல் (அழுக்காறு- பொறாமை) அழுக்கா றயலா ராக்கத்திற் புழுங்கல். அழுக்காறு என்பது அடுத்தவர் பெற்றுள்ள செல்வத்தை நினைத்து உள்ளூர வருந்துதல் ஆகும். அழுக்கா றுறலினோ ரிழுக்கா றிலதே. அழுக்காறு கொள்வதைவிடப் பெரிய குற்றம் இல்லை. அழுக்கா றதுபோ லழிப்பதொன் றின்றே. பொறாமையைப் போல் அழிவை ஏற்படுத்தக் கூடியது வேறு ஏதும் இல்லை. அழுக்கா றுளவரை யொழுக்கா றிலையே. பொறாமை உள்ளவனிடத்தில் நல்லொழுக்கம் இருக்க இயலாது. அழுக்கா றுடையார்க் காக்கமின் றாகும். அழுக்காறு…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.19. பயனில் சொல் விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல்   19. பயனில் சொல் விலக்கல் பயனில்சொல் யார்க்கும் பயன்றராச் சொல்லே. பயனில் சொல் என்பது யாருக்கும் பயன் தராத பேச்சு ஆகும். அறியா மையினின் றச்சொல் பிறக்கும். பயனற்ற பேச்சு அறியாமையினாலேயே ஏற்படுகிறது. அறியா மையினை யச்சொல் வளர்க்கும். பயனற்ற பேச்சு அறியாமையை வளர்க்கும் இயல்பு உடையது. அறிவினர் நட்பெலா மச்சொல் குறைக்கும். அறிவுடையவர்களின் நட்பை பயனற்ற பேச்சு குறைக்கும் இயல்பு உடையது. அறிவிலார் நட்பினை யச்சொல் பெருக்கும். பயனற்ற பேச்சு அறிவற்றவர்களின்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 : புறஞ்சொல்லல் விலக்கல் :

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 18. புறஞ்சொல்லல் விலக்கல் புறஞ்சொலல் பிறரைப் புறத்திழித் துரைத்தல். புறஞ்சொல்லல் என்பது ஒருவரை அவர் இல்லாதபோது இழிவாகப் பேசுதல் ஆகும். அறங்கொலு மறத்திற் புறஞ்சொலல் கொடிது. புறஞ்சொல்லல் அறத்தைக் கொல்லும் தீய செயல்களில் மிகக் கொடியது ஆகும். புறஞ்சொலல் பொய்முதற் புரையெலாம் வளர்க்கும். புறஞ்சொல்லல் பொய் முதலான குற்றங்களை வளர்க்கும் தன்மை உடையது. புறஞ்சொலல் புறனெலாம் பொருபகை யாக்கும். புறஞ்சொல்லல் ஒருவனுக்கு விரோதிகள் ஏற்படக் காரணமாக அமையும். புன்மகார் செயல்களுட் புறஞ்சொல லொன்று. புறஞ்சொல்லல்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. : பொய்ம்மை விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 17. பொய்ம்மை விலக்கல் நிகழா ததனை நிகழ்த்துதல் பொய்ம்மை. நடக்காததைச் சொல்வது பொய் ஆகும். நிகழ்வதை யங்ஙன நிகழ்த்துதல் வாய்மை. நடந்ததை அவ்வாறே சொல்வது உண்மை ஆகும். தீமையைத் தருமெனின் வாய்மையும் பொய்ம்மையாம். தீய விளைவைத் தரும் எனில் உண்மை என்பது பொய்க்குச் சமம் ஆகும். புரைதீர் நலந்தரின் பொய்ம்மையும் வாய்மையாம். குற்றமில்லாத நன்மையைத் தரும் எனில் பொய்யும் உண்மைக்குச் சமம் ஆகும். வாய்மையைத் தருவதே வாயென வறிக. வாய்மை(உண்மை)யைப் பேசுவதால் மட்டுமே “வாய்”…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. மயக்குவ விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.15 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 16. மயக்குவ விலக்கல் (மயக்குவ-போதைப்பொருட்கள்) மயக்குவ வறிவினை மயக்கும் பொருள்கள். மயக்குவ என்பவை அறிவினை மயக்கும் பொருட்கள் ஆகும். அவைகள் கஞ்சா வபின்முத லாயின. அவை கஞ்சா, அபின் போன்றவை. அறிவுதம் முயிரே யாதியே யுலகே. நம்முடைய உயிர், கடவுள், உலகம் எல்லாமாக அறிவுதான் உள்ளது. அறிவினை மயக்குத லவற்றை யழித்தலே. அறிவினை மயக்குவது என்பது இம்மூன்றையும் அழிப்பது ஆகும். அறிவினை மயக்குவா ரருமறம் புரிவர். அறிவினை மயக்கும் பொருட்களை உட்கொண்டவர் தீய செயல்களைச்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.15. இரவு விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 15. இரவு விலக்கல் (இரவு-யாசித்தல்) இரவென் பதுபிறர் தரவொன் றேற்றல். இரவு என்பது பிறர் நமக்குத் தருவதை ஏற்றுக் கொள்ளுதல் ஆகும். இரவினிற் றாழ்ததொன் றிலையென மொழிப. இரத்தலை விட தாழ்ந்தது வேறொன்றில்லை என்று கூறலாம். இரவினிற் களவு மேற்றமா மென்ப. இரத்தலை விட களவு செய்தல் சிறந்தது என்று கூறலாம். இரந்திடப் படைத்தவன் பரந்தழி கென்ப. உயிர்களை இரந்து வாழுமாறு படைத்தவன் (இறைவன்) பல இடங்களுக்கும் சென்று இரந்து அழிவானாகுக. இரந்துயிர் வாழ்தலி…