பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருது வழங்கும் விழா  தேவகோட்டை: பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருது வழங்கும் விழா  பங்குனி 25,   2047 / ஏப்பிரல் 07, 2016 அன்று நடைபெற்றது.  விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரித் தாளாளர் அகமது யாசின் முன்னிலைவகித்தார்.   விசாலயன்கோட்டை சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரித் தாளாளர் சேதுகுமணன் சிறப்புரையில்,  8ஆம் வகுப்பு மாணவி தனம்,  7ஆம் வகுப்புமாணவி தனலெட்சுமி ஆகியோரின்…