எங்குமெழுகவே! – தமிழ்மகிழ்நன்

  எங்குமெழுகவே!   அகர முதலுடை அன்னைத் தமிழை இகழும் வடவரின் இந்தியை வீழ்த்த இகலெதிர் கண்ட இலக்குவர் ஈன்ற புகழ்மிகு வள்ளுவ! பூட்கை வினைஞ! தகவுடைச் செந்தமிழ்த் தாயினங் காக்க முகிழ்த்த முரசே! மொழிப்போர்க் களிறே! முகிலைக் கிழித்தொளி வீசும் நிலவாய் அகர முதல யிதழெங்கு மெழுகவே!   – திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்

நற்றமிழாலே உயர்வோம்! – யாழ்ப்பாவாணன்

நாம் பாடுவோம் தமிழைப் பாடுவோம் நாம் தேடுவோம் நற்றமிழைத் தேடுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழைப் பேணவே! நாம் படிப்போம் தமிழைப் படிப்போம் நாம் எழுதுவோம் நற்றமிழில் எழுதுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழை வெளிப்படுத்தவே! நாம் கேட்போம் தமிழைக் கேட்போம் நாம் சொல்லுவோம் நற்றமிழில் சொல்லுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழை வாழவைக்கவே! நாம் ஆடுவோம் தமிழைப்பாடி ஆடுவோம் நாம் பாடுவோம் நற்றமிழில் பாடுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழுக்கு உயிரூட்டவே! நாம் நிமிர்வோம் தமிழாலே நிமிர்வோம் நாம் உயர்வோம் நற்றமிழாலே உயர்வோம் நாளை நம்முலகம் தூயதமிழைப் பேசும்வேளை!…

வாழ்ந்து தழை – அரியரவேலன்

வாழ்ந்து தழை – அரியரவேலன் புள்ளல்லவே? – நீ புழுவல்லவே? – பின் புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்? கல்லல்லவே? – நீ கசடல்லவே? – பின் கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்? மண்ணல்லவே? – நீ மரமல்லவே? – பின் மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்? விழலல்லவே? – நீ வெற்றல்லவே? – பின் வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்? கண்ணைத் திற! – கீழ் விண்ணை அறி! – இரு கைகளை ஏனினும் கட்டுகிறாய்? கூட்டை உடை! – சங்கை ஊதி எழு! – சேவல் கூவிய…

சிறுநண்டு – உருத்திரமூர்த்தியின் தமிழிசைப்பாடல்

சிறுநண்டு – தமிழிசைப்பாடல் சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும். கறிசோறு பொதியோடு தருகின்ற போதும் கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும். வெறுவான வெளி மீது மழை வந்து சீறும் வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும். நெறி மாறுபட நூறு சுழி வந்து சூழும் நிலையான தரை நீரில் இலை போல் ஈடாடும். இருளோடு வெளியேறி வலை வீசினாலும் இயலாது தர வென்று கடல் கூறல் ஆகும்….

மொழிக்கெலாம் தலைமை தமிழே – புலவர் குழந்தை

மொழிக்கெலாம் தலைமை தமிழே! முதன்மையும் தலைமையும் மிக்கது தமிழ் உலகம் ஊமையா உள்ள அக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி என்றுநான் என்னும் மொழிக்கெலாம் தலைமையாம் தமிழ் – புலவர் குழந்தை

தமிழும் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழும் நீடு வாழ்க காதொளிரும் குண்டலமும் கைக்குவளை                 யாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்                 மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ                 ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்                 தாங்குதமிழ் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ! – எம். செயராம(சர்மா) … மெல்பேண்

       இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்      இல்லையென்று சொல்லுவதில்லை      கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்      காட்சிதர மறுப்பதுமில்லை        ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்       அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்       நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன்       நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்      உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்      உள்ளமதில் வந்துநின்றிடுவான்      தெளிவுடனே நாளும்தேடுங்கள்  –…

ஆலமரம் – முனைவர் எழில்வேந்தன்

அணுவுக்குள் இருக்கும் ஆற்றலைப் போல மிகச்சிறு விதைக்குள் அடங்கியிருந்த பேருருவம் நான். ஆலமரம் அற்புத அருமரம். ஈகக் குருதியின் சேற்றில் முளைத்து உகங்களின் தாகம் தேக்கிய விழிகளின் கண்ணீர்த் துளிகளால் துளிர்த்த மரம் நான். விரிந்து கிளை பரப்பி விழுதுவிட்டு அடர்ந்து பசுமையாய் பரந்து நிற்கிறேன் என் படர்ந்த நிழலுக்காகவும் பழத்தின் சுவைக்காகவும் நேசமாய் வந்தமரும் பறவைகளின் பாசறை நான். பற்பல வண்ணப் பறவை இனங்களின் மொழிகள் என்னவோ வேறு வேறுதான் பாடும் பண்ணின் சிந்தனை மட்டும் என்றென்றும் ஒன்று. நான் உழைக்கும் பறவைகளின்…

நாளும் வளர்வாய் நல்ல படி! – கு.ந.தங்கராசு

அம்மா, அப்பா என்ற படி, அங்கும் இங்கும் நடந்த படி, அழகுத் தமிழில் பாட்டுப் படி, அம்மா சொல்லித் தந்த படி! ஆசை முத்தம் கொடுத்த படி, அப்பா மகிழ்வு கொள்ளும் படி, அன்னைத் தமிழில் பாட்டுப் படி, அப்பா கற்றுக் கொடுத்த படி! அண்ணன் அக்கா சிரிக்கும் படி, அத்தை மாமா மகிழும் படி, மழலைத் தமிழில் பாட்டுப் படி, மனம்போல் குறும்பு செய்த படி! நடைவண்டி பிடித்து நடந்த படி, ஙஞண நமன என்ற படி, நாளும் வளர்வாய் நல்ல படி!…

சிரீ காளீசுவரி கல்லூரி, தமிழியல்துறை, பயிற்சிப்பட்டறை

புரட்டாசி 8, 2045 / 24.09.2014 சிவகாசி கதையும் கவிதையும் சிறுகதைச்சிந்தனைகள் கவிதைக் கண்ணோட்டம்    

1 3 4 5 9