(திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல்     அதிகாரம் 109. தகை அணங்கு உறுத்தல்                    தகுதிமிகு தலைமகளது அழகு,                    தலைமகனது  மனத்தை  வருத்துதல்                                                           (01-10  தலைமகன்  சொல்லியவை)   அணங்குகொல்…? ஆய்மயில் கொல்லோ…? கணங்குழை       மாதர்கொல்….? மாலும்என் நெஞ்சு.        தெய்வ மகளோ….? மயிலோ….? மண்மகளோ….? என்மனம் மயங்கும்.   நோக்கினாள்; நோக்(கு)எதிர் நோக்குதல், தாக்(கு)அணங்கு       தானைக்கொண்(டு)…