தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (திருவள்ளுவர், திருக்குறள் 1033) தமிழர் திருநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்   தமிழே விழி !                                                                                                தமிழா விழி  ! தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைய உரையரங்கம்: மார்கழி 25, 2052 ஞாயிறு 09.01.2022 காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: செல்வி வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் கவியுரை: பாவலர் மு.இராமச்சந்திரன், தலைவர், …

பகுத்தறிவுக் களஞ்சியம் சிவகங்கை இராமச்சந்திரனார் – ப.சீவானந்தம்

காலத்தை வென்ற பகுத்தறிவுக் களஞ்சியமே! சிவகங்கை தந்த இராமச்சந்திரப் புதையலே உனக்கு இன்று காணுகின்ற நினைவுநாள் நான்கு! கேடுதரும் பழைமையை நீக்கி விட மேடுபள்ளம் பாராது சுற்றிய செம்மலே! சமூகநீதி நிலைத்திடவும் சமதருமம் தழைத்திடவும் பொதுவுடைமை வளர்ந்திடவும் மனிதநேயம் மலர்ந்திடவும் இன உணர்வு வளரவும் வாழ்ந்தவரே! நீ பம்பரமாய்ச் சுழன்று, உன் உடல் நலத்தையும் பாராமல் மருதுபாண்டியரைத் தூக்கிலிட்ட திருப்பத்தூரில் மிசன் மருத்துவமனை சிகிச்சைப் பெறும்போது ஈரக் கண்களோடு அமர்ந்திருந்தேன்! நீ சாகும் தறுவாயில் சிந்திய  நெறிகள் உன் உள்ளத்தை ஆழமாகத் தொட்டன சுயமரியாதைச்…

தாமரையின் ஊழல் முகம் ! – பாரதி தம்பி

தாமரையின் ஊழல் இதழ்கள் !  – பாரதி தம்பி மக்களின் அவநம்பிக்கையைப் பெற, காங்கிரசுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய சனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. காங்கிரசை மக்கள் நிராகரிக்க ஊழல் காரணம் என்றால், இந்த ஓர் ஆண்டில் பா.ச.க அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் வாதாட்டங்களும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிக்கின்றன. இலலித் மோடி முதல் ‘வியாபம்’ வரை புதுப் புது ஊழல்கள்; புதுப் புது வாதாட்டங்களள்! தலைமையாளர் மோடி, எதற்குமே வாய் திறப்பது…

ஆலமரம் – முனைவர் எழில்வேந்தன்

அணுவுக்குள் இருக்கும் ஆற்றலைப் போல மிகச்சிறு விதைக்குள் அடங்கியிருந்த பேருருவம் நான். ஆலமரம் அற்புத அருமரம். ஈகக் குருதியின் சேற்றில் முளைத்து உகங்களின் தாகம் தேக்கிய விழிகளின் கண்ணீர்த் துளிகளால் துளிர்த்த மரம் நான். விரிந்து கிளை பரப்பி விழுதுவிட்டு அடர்ந்து பசுமையாய் பரந்து நிற்கிறேன் என் படர்ந்த நிழலுக்காகவும் பழத்தின் சுவைக்காகவும் நேசமாய் வந்தமரும் பறவைகளின் பாசறை நான். பற்பல வண்ணப் பறவை இனங்களின் மொழிகள் என்னவோ வேறு வேறுதான் பாடும் பண்ணின் சிந்தனை மட்டும் என்றென்றும் ஒன்று. நான் உழைக்கும் பறவைகளின்…