தாளநுட்பங்களைப் பழங்காலத்திலிருந்தே அறிந்து வைத்துள்ளனர்!    இன்றைய நிலையில் தாளத்தைப் பற்றி நன்கு அறிவதற்கு ஏற்ற முறையில் தாள சமுத்திரம், சச்சப்புட வெண்பா, தாள தீபிகை, தாளமும் அனுபவமும் ஆகிய நூல்கள் தமிழில் அச்சுப்பதிப்பாகக் கிடைக்கின்றன. வாத்திய மரபு என்ற நூல் சுவடிவுருவில் கிடைத்துள்ளது. இவை அனைத்தும் தமிழர் இசையிலுள்ள தாளத்தின் வகைகளையும் அவற்றின் அமைப்புக் கூறுகளையும் மிகச் சிறப்பாக விளக்குகின்றன. இவை தவிர, பத சங்கிரகம் என்ற பழைய நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் பதிப்பித்து வெளியிடப் பெற்றுள்ளது. இது நாட்டியம், தாளம் ஆகியவற்றை…