தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2)

(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (1) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (2) இந்துக் கூட்டுக் குடும்பத்துக்கு சலுகை தரும் சட்டங்கள் இந்தியக் குமுகம் என்பது சாறத்தில் இந்துக் குமுகமாக உள்ளது. இந்திய நாட்டின் ஒவ்வொரு துறையிலும் மேலைநாட்டுச் சட்டமுறையும் மனுநீதிச் சட்டமுறையும் கலந்துள்ளன. இதற்குச் சான்றாக சொத்துடைமை பற்றிய சட்டங்களைக் குறிப்பிடலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தையே சாதி காக்கும் சட்டம் என்று சொல்லி அதனை…

தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (1)

(தோழர் தியாகு எழுதுகிறார் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (1) இசுலாமியர்களுக்குத் தனிச் சட்டம் உள்ளதா? பொது சிவில் சட்டம் (COMMON CIVIL CODE) அல்லது ஒரே சீரான சிவில் சட்டம் (UNIFORM CIVIL CODE) என்ற பேச்சை ஆர்எசுஎசு – பாசக கூட்டம் பெரிதாகக் கிளப்பி விட்டுள்ளது. சிவில் என்பதைக் குடியியல் என்றோ உரிமையியல் என்றோ தமிழாக்கம் செய்யலாம். சட்டத் துறையில் குற்றவியல் என்ற வகைக்கு மாறாக உரிமையியல் ஆளப்படுகிறது. குற்றவியல் நீதிமன்றங்களுக்கு…

தோழர் தியாகு எழுதுகிறார் 252 : பெரியகுளத்தில் நடப்பது என்ன?

(தோழர் தியாகு எழுதுகிறார் 251 : மீண்டும் வெண்மணி! – தொடர்ச்சி) பெரியகுளத்தில் நடப்பது என்ன? இனிய அன்பர்களே! சென்ற 2023 ஆகத்து 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் மாரிமுத்து – மகாலட்சுமி இருவரும் தூக்கில் தொங்கும் சடலங்களாகக் கண்டெடுக்கபட்டதும், இது கொலையா? தற்கொலையா? என்ற கேள்வியுடன் நீதிக்கான போராட்டம் தொடர்வதும் தாழி அன்பர்கள் அறிந்த செய்திகளே. மாரிமுத்து வாழ்ந்து வந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் காவல்துறையின் நீதிமறுப்பைக் கண்டித்து அவரவர்…

தோழர் தியாகு எழுதுகிறார் 251 : மீண்டும் வெண்மணி!

(தோழர் தியாகு எழுதுகிறார் 250 : இசுலாமியச் சிறைப்பட்டோர் விடுதலை – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மீண்டும் வெண்மணி! கீழ்வெண்மணி வன்கொடுமை (1968) நிகழ்ந்து 55ஆண்டு முடிந்து விட்டன. என்ன நடந்தது? எப்படி நடந்தது? அதற்கு யார் பொறுப்பு? எந்த அளவுக்குப் பொறுப்பு? கீழ்வெண்மணிக்கான எதிர்வினைகள் என்ன? கீழ்வெண்மணியின் வரலாற்றுப் படிப்பினைகள் என்ன? இந்த வினாக்களுக்கு விடையளிக்கப் பலரும் முயன்றுள்ளனர். நான் எழுதியும் பேசியும் உள்ளேன். தோழர் ஏ.சி..கே. (அ.கோ. கத்தூரிரெங்கன்) எழுதியுள்ளார், செவ்வி கொடுத்துள்ளார். தோழர் கோ. வீரையன் எழுதியுள்ளார். இன்னும் பலரும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 250 : இசுலாமியச் சிறைப்பட்டோர் விடுதலை

(தோழர் தியாகு எழுதுகிறார் 249 : தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி – தொடர்ச்சி) இசுலாமியச் சிறைப்பட்டோர் விடுதலை இனிய அன்பர்களே! ஆதிநாதன் குழு நோக்கம் என்ன? பயன் என்ன? திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுச் சிறைகளில் நீண்ட பல ஆண்டுகளாக அடைபட்டுள்ள இசுலாமியச் சிறைப்பட்டோரை விடுதலை செய்வோம்! இது சென்ற சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் மு.க. தாலின் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கொடுத்த வாக்குறுதி. “அப்பாவி முசுலிம் கைதிகள்” என்றே அவர் சொன்னார். இருபதாண்டுக்கு மேல் சிறையில் கிடந்த பின் அப்பாவியா…

தோழர் தியாகு எழுதுகிறார் 249 : தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி 

(தோழர் தியாகு எழுதுகிறார் 248 : உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தாழி (277) மடலில் வெளியிட்ட UPR IN TAMILNADU – THE REFUGEE CRISIS IN TAMILNADU அறிக்கையின் தமிழாக்கம் இதோ – தமிழ்நாட்டில் உலகளாவிய காலவட்ட மீளாய்வு – தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி  1.    தமிழ்நாடு ஓர் இந்திய மாநிலம். தமிழ்நாட்டின் ஏதிலியர் நெருக்கடி என்பது இந்தியாவின் எதிலியர் நெருக்கடியில் ஒரு பகுதியாகும். ஆனால் இந்தியாவின் ஏதிலி நிலவரையில் தமிழ்நாட்டுக்குரிய தனியிடத்தை மறுப்பதற்கில்லை. 2.    தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றி 01. 06. 2021இல் …

தோழர் தியாகு எழுதுகிறார் 248 : உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 247 : குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்! 2023 ஆகத்து 5 காரிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் உயிரற்ற உடல்களாகத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிமீறிய காதலர்கள் மகாலட்சுமி – மாரிமுத்து… இருவரில் ஒருவரின் உடல் சடலக் கூறாய்வு முடித்து அவசரமாக எரியூட்டப்பட்டு விட்டது. அந்த எரிமேடையில் மகாலட்சிமியின் காதலோடும் உடலோடும் சேர்ந்து எத்தனை…

தோழர் தியாகு எழுதுகிறார் 247 : குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, ஒரு கேள்விக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது: குடியுரிமைச் சட்டத்தில் குறையில்லை, திருத்தம்தான் மோசமா? மோதியரசு கொண்டுவந்த திருத்தம் மட்டுமல்ல, அதன் நோக்கமும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளும் மோசமானவை எனபதில் ஐயமில்லை. எனவே நாமும் அந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டோம். அதே போது இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உட்பட…

தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி

(தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா? – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி >>> சென்ற சூலை 26ஆம் நாள் இளைஞர் அரண் சார்பில் குடந்தையில் நடைபெற்ற கல்வியுரிமைப் பேரணி கல்வியுரிமை மாநாட்டில் நாம் எழுப்பிய முழக்கங்களையும் இயற்றிய தீர்மானங்களையும் நினைவிற்கொள்ளுங்கள். நம் கோரிக்கைகள் தெளிவானவை:1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக…

தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா? பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திடுக! 2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள். அந்த இளைஞர் மாரிமுத்து, இளம்பெண்…

தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று

(தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! போகாத ஊருக்கு வழிகாட்டும் பொல்லாத பதின்மூன்று 13ஆம் திருத்தச் சட்டம் ஈழத் தமிழர்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வாக முடியுமா? இலங்கை அரசவையில் 13ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு36ஆண்டுக் காலமாயிற்று. இந்த 36 ஆண்டுகளில் அதனால் விளைந்த பயன் என்ன? அது தீர்வாகவில்லை என்பது மட்டுமன்று, தீர்வை நோக்கிய பயணத்தில் ஓரங்குலம் கூட முன்னேறவில்லை என்னும் போது 13ஆம் திருத்தச் சட்டம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய்…

தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2 – தொடர்ச்சி) தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 இந்துத்துவ ஆற்றல்களோடு கூடிக் குலாவி ஈழத்துக்கு ஏதாவது(?) செய்ய முடியும் என்ற கருத்தைப் பரப்பி வரும் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என்றே தமிழீழ ஆதரவு முற்போக்காளர்கள் கேலி செய்து வருகின்றனர். அவரும் அது பற்றிக் கவலை இல்லை, நான் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கூறி விட்டார். இந்துத்துவ ஆளும் கும்பலை நயந்து கொள்ளும் பொருட்டு அவரும், அவரைப் போலவே…