ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 12

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 11 தொடர்ச்சி) ஊரும் பேரும் –12 நாடும் நகரமும் நாடு      நாடு என்னும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்த முறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. அந்நாடு மூன்று பாகமாகிய பொழுது ஒவ்வொரு பாகமும் தனித்தனியே நாடு என்னும் பெயருக்கு உரியதாயிற்று. சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என்ற பெயர்கள் தமிழிலக்கியத்தில் மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். நாளடைவில் முந் நாடுகளின் உட்பிரிவுகளும் நாடு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 76

(குறிஞ்சி மலர்  75 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 27 தொடர்ச்சி மாந்தர்பால் பொருள் போக்கிப் பயின்றதாம்மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலைஎந்தமார்க்கமுந் தோற்றில தென்செய்கேன்?ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?      — பாரதி அடுத்த நாள் விடியற்காலையில் மீனாட்சிசுந்தரத்தோடு அரவிந்தனும், முருகானந்தமும் மதுரைக்குத் திரும்பி விட்டார்கள். சிற்றப்பாவின் பதினாறாவது நாள் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குத் திரும்பவும் போவதற்கு முன்னால் அரவிந்தன் மதுரையில் செய்ய வேண்டிய செயல்கள் சில இருந்தன. மாவட்ட அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று பூரணியின் வெளிநாட்டுப் பயண அனுமதிக்கான விண்ணப்பங்களைக் கொடுத்து ஏற்பாடு செய்தான். பார்க்க வேண்டியவர்களைப்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35

(இராவண காவியம்: 1.7.26 – 1.7.30தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷ வேறு வண்ணம்         31.     குஞ்சோ ரைந்தின் மூன்றொழியக் கோலென் றலறுங் குருகேபோல்                வஞ்சாய் நீயுன் பொருளிழந்து மண்மே டாவா யென்றலற                அஞ்சா தக்கா ராழிபினும் ஐந்நூற் றோடீ ராயிரத்தே                எஞ்சா நின்ற பெருவளத்தோ டிந்திரப் பேரின் றாக்கியதே.         32.     அந்தோ முன்போற் றமிழ்மக்க ளானார் வடபா லடைவாகிக்                கொந்தார் கானக் குலமுண்டு கொழுதே யடிமைக் குடியாக                நந்தா…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 13

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 12 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 7கிருட்டிண சாசுதிரிகள் (தொடர்ச்சி) கங்கைகொண்ட சோழபுரத்தில் அவர் இருந்த காலத்தில் மூன்று பெண்கள் பிறந்தனர் அவர்களுக்கு முறையே இலட்சுமி பாகீரதி, சரசுவதி என்னும் பெயர்களை வைத்தனர். தேவ கோட்டத்திலுள்ள பிம்பங்களும் சிங்கக் கிணற்றின் கங்கையுமே அப்பெயர்களை வைப்பதற்குக் காரணமாயின. மூன்றாம் பெண்ணாகிய சரசுவதியே என் தாயார், என் தாயாரது முகத்தின் முகவாய்க்கட்டையில் ஒரு தழும்பு உண்டு. என் மாதாமகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்ததற்கு அடையாளம் அது. என் அன்னையார் சிறு குழந்தையாக இருக்கையில் திண்ணையில் விளையாடும்பொழுது…

தமிழ்நாடும் மொழியும் 11 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 10 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி கல்வி முறை சங்கக்காலக் கல்விமுறை மிகவும் சிறந்த முறையிலே அமைந்திருந்தது. சாதிமத பேதமின்றி ஆடவரும் பெண்டிரும் கல்வி கற்றிருந்தனர். இதனை வெண்ணிக்குயத்தியார் முதலிய பெண்டிர்தம் பாடல்கள் நன்கு தெளிவுறுத்தும். சங்ககாலத்திலே கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இருந்தது. கற்றுத் துறைபோய நற்றமிழ் வல்லார்க்குக் காவலனும் கவரி வீசினான்; கைகூப்பினான். ‘உற்றுளி உதவியும் உறுபொருள் கொடுத்தும்பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே………………………………………………………..அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்’ என்னும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் சங்ககாலக் கல்விமுறை நன்கு விளங்கும்….

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5  தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 கால நதியின் கதியதினில்கடவுள் ஆணை காண்பீரேல்ஞால மீது சுகமெல்லாம்நாளும் அடைந்து வாழ்வீரே! என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார். ‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார். கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும் கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின்…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–11

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 10 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 11 நெய்தல்‌ நிலம்‌ தொடர்ச்சி பாக்கம் கடற்கரைச்‌ சிற்றூர்கள்‌ பாக்கம்‌ என்று பெயர்‌ பெறும்‌. சென்னை மாநகரின்‌ அருகே சில பாக்கங்கள்‌ உண்டு. கோடம்‌ பாக்கம்‌, மீனம்‌ பாக்கம்‌, “வில்லி பாக்கம்‌ முதலிய ஊர்கள்‌ நெய்தல்‌ நிலத்தில்‌ எழுந்த பாக்கம்‌ குடியிருப்பேயாகும்‌. சில காலத்திற்கு முன்‌ தனித்‌ தனிப்‌ பாக்கங்களாய்ச சென்னையின்‌ அண்மையிலிருந்த சிற்றூர்கள்‌ இப்போது அந்நகரின்‌ அங்கங்க ளாய்விட்டன. புதுப்‌ பாக்கம்‌, புரசை பாக்கம்‌, சேப்பாக்கம்‌, நுங்கம்‌ பாக்கம்‌…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 75

(குறிஞ்சி மலர்  74 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 26 தொடர்ச்சி அன்று மதுரைக்குத் திரும்புவதாக இருந்த அரவிந்தன், மீனாட்சிசுந்தரம், முருகானந்தம் மூவரும் குறிஞ்சிப் பூக்காட்சிகளைச் சுற்றிப் பார்த்து மகிழ வேண்டுமென்பதற்காகப் பயணத்தை ஒருநாள் தள்ளிப் போட்டிருந்தார்கள். அன்றைக்கு அரவிந்தனும் முருகானந்தமும் காலை பத்து மணிக்குப் புகைப்பட நிலையத்தில் போய்ப் படங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அரவிந்தனையும் பூரணியையும் சேர்த்து நிறுத்தி ஸ்டூடியோக்காரர் எடுத்த படம் மிக நன்றாக இருந்தது. முருகானந்தம் அந்தப் படத்தை மிகவும் பாராட்டினான். அவர்கள் இருவரும் புகைப்பட நிலையத்திலிருந்து வீடு திரும்பும் போது பூரணியும் வசந்தாவும்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.26 – 1.7.30

(இராவண காவியம்: 1.7.21 -1.7.25. தொடர்ச்சி)   இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் துணையா நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகிஇணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல்அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியேபுணையா வந்த பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே. 27. நன்றே பழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே ஒன்றார் போலப் பாழ்ங்கடலே உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய் என்றே புலம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகலா விடரெய்தித் தன்றா யிழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே. 28.அன்னை புலம்பத்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 486-492

(தமிழ்ச்சொல்லாக்கம்: 481-485 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 486-492 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 486. Hair Pin            –          தலைமயிர் ஊசி 487. Nail Brush        –          நகக்குச்சு 488. Mons Veniris –            அல்குலின் மேடு…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 12

(உ.வே.சா.வின் என் சரித்திரம், 11 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 7கிருட்டிண சாசுதிரிகள் (தொடர்ச்சி) வாழ்நாள் முழுவதும் சிவ பூசையும் சபம் முதலிய கருமானுட்டானங்களுமே புரிந்து வந்து வேறு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் உள்ளும் புறமும் தூய்மையுடன் ஒரு கிருகசுதர் வாழ்க்கை நடத்துவதென்றால் அது சாத்தியமென்று இக்காலத்தில் தோன்றாது. ஆனால், எங்கள் மாதாமகர் (தாயாரின் தகப்பனார்) அவ்வாறு இருந்தவர். அவர் பெயர் கிருட்டிண சாசுதிரிகளென்பது. அவர் காவிரியின் வடகரையில் கஞ்சனூரென்னும் தலத்துக்கு வடகிழக்கே ஒன்றரை மைலிலுள்ள சூரியமூலை யென்னும் ஊரில் இருந்தார். அவர் ருக்வேதத்திற் பாரங்கதர்;…

தமிழ்நாடும் மொழியும் 10 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 9 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி பண்டைத்தமிழர் இயற்கைப் பொருள்களையே தெய்வங்களாக வழிபட்டனர். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்; முல்லை நிலக் கடவுள் மாயோன்; மருதநிலக் கடவுள் இந்திரன்; நெய்தற் கடவுள் கடற்றெய்வம்; பாலை நிலக் கடவுள் கன்னி. குழலும், முழவும், யாழும், பறையும் கடவுள் வழிபாட்டின்கண் ஒலித்தன. உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கின. கைத்தொழிலில் சிறந்து விளங்கியது நெசவுத்தொழிலே. பருத்தி, ஆட்டுமயிர், எலி மயிர் முதலியன கொண்டு மக்கள் ஆடைகளை நெய்தனர். ஆடைகள் மிக நுட்பமாக…