தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4.

(தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர்3 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4/4 மரணத் தண்டனைக் கைதியாக இருந்த போதும் சரி, அத்தண்டனை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பிறகும் சரி, புலவரைத் தொடர்ந்து தனிக் கொட்டடியிலேயே அடைத்து வைத்தனர். 12 ஆண்டுக்கு மேல் பல்வேறு சிறைகளில் போராட்டமும் அடக்குமுறையுமாகக் கழிந்தபின் பத்திரிகையாளர் கன்சியாம் பருதேசு எடுத்துக் கொண்ட முயற்சியால் புலவர் பிணையில் விடுதலை ஆனார். சற்று முன்பின்னாக அவ்வழக்கில் மற்றவர்களும் விடுதலையானார்கள். சிறையில் புலவரை நான் கடைசியாகப் பார்த்தது 1974 கடைசியில்தான். 1977இல் தொடங்கி…

தன்னேரிலாத தமிழ் மகன் ஒளவை நடராசனார் தமிழ்ச்சுவை பரப்ப எமனுலகு சென்றார்

இன்று(கார்த்திகை 05, 2053 / 21.11.2022) இரவு 7.50 மணிக்கு தாமரைத்திரு, கலமாமணி, நாவரசர் ஒளவை இயற்கை எய்தினார். தனிப்பட்ட முறையில் என்மீது பேரன்பு கொண்டிருந்த பெருமதிப்பிற்குரிய அண்ணல் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. நாவரசர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தனிப்பட்ட முறையிலும்இலக்குவனார் குடும்பத்தினர் சார்பாகவும் தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், அகரமுதல மின்னிதழ், தமிழ்நாடு – புதுவை தமிழ் அமைப்புகள் ஆகியன சார்பாகவும்தெரிவிக்கிறோம். அறிஞர் ஒளவை குடும்பத்தார் தெரிவிக்கும் மறைவுச் செய்தி எந்தையும் இலமே ! ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார்…

உலகாய்தத்தை உணர்த்த உம்பர் உலகு சென்றாரோ பேரா.க.நெடுஞ்செழியன்!

பேரா.க.நெடுஞ்செழியன் மறைவு! தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று வைகறை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79. தமிழறிஞர், பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தமிழ் மெய்யியல், தமிழ் இலக்கியம், தமிழர் அரசியல், தமிழர் சமயம் ஆகிய துறையினரால் போற்றப்பட்டவர். ஆசீவகம் பற்றிய இவருடைய ஆய்வு தமிழாய்வு உலகில் மிகவும் முதன்மையானது. திருச்சி மாவாட்டம், இலால்குடி வட்டத்தில் உள்ள படுகை ஊரில் 15.06. 1944-இல் பிறந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று திருச்சியில் உள்ள ஈ.வே.இரா பெரியார்…

1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு! – பெ. மணியரசன் இரங்கல்!

1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! மிகச் சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த்தேசியருமான தோழர் பா. செயப்பிரகாசம் அவர்கள் இன்று (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திக்குளத்தில் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற செய்தி சொல்லொணா வேதனையை உண்டாக்குகிறது. ஆதிக்க இந்தியை எதிர்த்து 1965இல் நடந்த மாபெரும் மாணவர் போராட்டத்தின் தள நாயகர்களில் ஒருவர் தோழர் பா. செயப்பிரகாசம். அப்போது மதுரையில் தியாகராசர் கல்லூரியில்…

பிரபஞ்சன் காலமானார்

எழுத்தாளரும் திறனாய்வாளரும் விருதாளருமான பிரபஞ்சன் இன்று(மார்கழி 08, 2049 / திசம்பர் 21, 2018) காலமானார்.   எழுத்தாளர் பிரபஞ்சன் சித்திரை 15, 1976 / ஏப்பிரல் 27, 1945 ஆம் நாளன்று  புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தைக் கல்லூரியில் தமிழ் வித்துவான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் இதழுலகில் நுழைந்தார். குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவரது ‘என்ன உலகமடா’ என்னும் முதல் சிறுகதை…

அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! – இரவிக்குமார்

அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! தமிழறிஞர் அ.அ.மணவாளன் (ஆவணி 21, 1936 / 06.09.1935 – கார்த்திகை 14, 2049 / 30.11.2018)  தமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரசுவதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (கார்த்திகை 14, 2049 / நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவம் பெற்று வந்த அவர் பண்டுவம் பலனளிக்காமல் 30.11.2018 அன்று இரவு 8 மணிக்குக் காலமானார். அவருக்குத்  திருமதி சரசுவதி என்ற மனைவியும்,…

மொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு

மொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு [மாசி 25, 1965 / 08.03.1934  – மாசி 17, 2049 / 31.05.2018] மொழி பெயர்ப்பிலும்  மொழி ஆக்கத்திலும் வல்லவரான தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா இன்று (மே 31,2018)வைகறைக்கு முன்னரே –  நேற்று  இரவு 01.30 மணிக்கு – இயற்கை எய்தினார். நலக்குறைவால் சில நாள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று  முதல் நாள் வீடு திரும்பினார்.  ஆனால்,  மூச்சுத் திணறலால்  காலமானார்.   ‘வானகம்,  எண் 7, 11 ஆவது குறுக்குத் தெரு,  ஒளவை நகர், புதுச்சேரி-…

பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!

பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!   புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், எங்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியருமான பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இன்று (பங்குனி 27, 2048 / 09.04.2017) பகல்பொழுதில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் என அனைவரின் துயரிலும் பங்கேற்கின்றேன்.   முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக்…

பொறியியல் கல்வியைப் பரவலாக்கிய முன்னோடி சேப்பியார் காலமானார்!

பொறியியல் கல்வியைப் பரவலாக்கிய முன்னோடி சேப்பியார் காலமானார்!  சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தரும் பல கல்வி நிறுவனங்களின்  நிறுவனரும் வணிக நிறுவனங்களின் உரிமையாளருமான  சேப்பியார் என அறியப்பெறும் ஏசுஅடிமைபங்கிஇராசு உடல் நலக்குறைவால் ஆனி 04, 2047 / சூன் 18, 2016 சனி இரவு காலமானார்.   கல்விநிலையங்கள் வணிக நிறுவனங்களாக மாறிய அவலத் தொடக்தக்திற்குக் காரணமாக இருந்தாலும் ஏழை எளிய குடும்பங்களிலிருந்தும் பொறியாளர்கள்  உருவாவதற்கு  இவரே முதற் காரணம்.  புனிதர் சோசப்பு பொறியியல் கல்லூரி,  சேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, சத்யபாமா…

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார்.

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கதிர்.மகாதேவன் (80) மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (சித்திரை 09, 2047 / ஏப்.22) காலை இயற்கை எய்தினார்.   இவர் எழுதியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுள் ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்கக் காலம்’ என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. இந்நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. ஆங்கிலத்திலும் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தமிழ்த்தொண்டாற்றினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் இலக்குவனார்…

வைகை அனிசு தாயார் மும்தாசு பேகம் மறைவு

  ‘அகரமுதல’ இதழின் சிறப்புச் செய்தியாளரும் கட்டுரையாளரும், தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உடையவருமான தமிழ்நாடு இதழ்கள் ஊடகச் செய்தியாளர்கள் ஒன்றியத்தின் தேனி மாவட்டச் செயலாளரும், இதழ்கள், தொலைக்காட்சிகளின் செய்தியாளரும், வரலாற்றுக் கட்டுரையாளரும் கல்வெட்டு ஆய்வாளரும் தொல்லியல் சார் படைப்பாளருமான வைகை அனிசு அவர்களின் தயாரும் காலஞ்சென்ற ஆசிரியர் அப்துல்வகாப்பின் மனைவியுமான ஓய்வு பெற்ற ஆசிரியர் மும்தாசு பேகம் அவர்கள் இன்று (ஆடி 31, 2046 / ஆகத்து 16, 2015) காலை 8.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவருடைய உடல் நல்லடக்கம் தேவதானப்பட்டி…

இசை முரசு நின்றது! இரங்கற்பா!

  நாகூர்  தேன்குரல் அனிபா (HONEYபா!) – (உ)ருத்ரா “அழைக்கின்றார் அண்ணா” என்ற கணீர் தேன்குரலில் திராவிடக் கீதம் யாழ் மீட்டிய‌ மா மனிதர் திரு நாகூர் அனிபா மறைந்ததற்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள். எத்தனைப்பாடல்கள்? அந்தக் குரல் சுவடுகளுக்கு இறைவனின் கையெழுத்தும் போடப்பட்டிருக்கும் விந்தை உண்டு. “இறைவனிடம் கையேந்துங்கள்” என்று மக்கள் முன் உருகி வழிந்தார். காசுகள் குலுங்கும் ஒலிபோல‌ அந்த கைப்பறையின் ஒலியில் ஆகாயமே குலுங்கி கீழே உதிர்ந்தது. அனி{ ‘HONEY’)பா  அவர்களின் தேன்குரலில் தமிழின் இன்பத்தேன் வந்து பாய்ந்ததை இந்தத் தமிழ்…