தனிச்சொல் தமிழ்ச் சொல்லைச் சேர்த்தொன்றாய்ப் பாடி கனிச்சுவை ஈந்த தலைவா – கனி சுவைத்த நற்றமிழர் நெஞ்சினில் நீங்காது நீவாழ்ந்து இற்றரையில் வாழ்க இனிது.   தட்டி எழுப்பி தமிழுர்வு ஊட்டி வந்(து) எட்டி நீ சென்றாய் கவித்தலைவா! –  விட்டின்று சென்றாலும் உன் கவிதைப் பார்க்கும் தமிழ் நெஞ்சில் என்றென்றும் வாழ்க இனிது.   மொழி வாழ்ந்தால் வாழ்வுண்டு நற்றமிழர்க்கும்; பாரில் மொழியழிந்தால் வாழ்வில்லை காண்பீர் –  விழிபோன்று காப்பீர் எனவுரைத்த பாவேந்தர்! நின்வழியை காப்பவர் நெஞ்சில் புகு.   வண்டமிழர்…