வெருளி நோய்கள் 1431 -1435: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1426 -1430: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1431 -1435 நற்பேறு குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது நற்பேற்று வெருளி.eutýchēma என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நற்பேறு எனப் பொருள்.00 எளிதில் ஈரம் உறியாத மேற்பரப்புடைய பொருள்கள் குறித்த அளவுகடந்த பேரச்சம் நனையா வெருளி.தீவிர நீர் விலக்கும் தன்மையைக் கொண்ட தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதால் இதனைத் தாமரை இலை விளைவுப் பேரச்சம் என்றும் கூறுவர். 00 மூச்சு நல்லதாக இருக்க வேண்டும் என்ற அளவுகடந்த பேரச்சம் நன்மூச்சு வெருளி.கெட்ட மூச்சு குறித்து…

வெருளி நோய்கள் 1426 -1430: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1421 -1425: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1426 -1430 நல வாழ்வு தொடர்பான அளவற்ற பேரச்சம் நல வாழ்வு வெருளி.பெரும்பாலும் தூய்மையின் மீதான மிகுதியான நாட்டம், நோய்வாய்ப்படுவோமோ என்ற பெருங்கவலை ஆகியவற்றால் உருவாகும் தேவையற்ற பேரச்சம்.தோய்நிலை வெருளி(Hagiophobia) நோய் வெருளி, நோய்மி வெருளி உள்ளவர்களுக்கு நலவாழ்வு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 நலக்குறைவு குறித்த அளவுகடந்த பேரச்சம் நலமிலி வெருளி.காய்ச்சல், நோயால் வருந்துதல் முதலியவற்றால் பெருங்கேடு விளையப்போவதாக அஞ்சும் பொழுது நலமிலி வெருளி வருகிறது.patho என்னும் கிரேக்கச் சொல்லிற்கு வருந்துதல் எனப்…

நாலடி நல்கும் நன்னெறி 29: தீயன விலக நல்லோரைச் சார்க! – இலக்குவனார்திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க!  – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 27: தீயன விலக நல்லோரைச் சார்க! அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வு – நெறியறிந்த நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு. நாலடியார் பாடல் 171 [அறியா பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறி அல்ல செய்து ஒழுகிய(வ்)வும் – நெறி அறிந்த நல் சார்வு சாரக் கெடுமே புல் பனி பற்று விட்டு ஆங்கு.] பொருளுரை: ⁠ அறியாப் பருவத்தில்…

குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! மனநலத்தி னாகு மறுமைமற் றஃது      மினநலத்தி னேமாப் புடைத்து (திருக்குறள், ௪௱௫௰௯ – 459) [ மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. ] மனநலத்தால் மறுமை உண்டாகும். அதுவும் இன நலத்தால் சிறப்படையும். பதவுரை:     மன நலத்தின்=உள்ளத்தின் சிறப்பால்; ஆகும்=உண்டாகும்; மறுமை=மறுமுறை அடையும் நல்வாய்ப்பு; மற்று=மீண்டும்; அஃதும்= அங்ஙனம் ஆவதும்;…

வெருளி நோய்கள் 1421 -1425: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1416 -1420: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1421 -1425 ஒருவர் மீது நம்பிக்கை வைப்பது தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் நம்பக வெருளி.நம்பிக்கை வைப்பது தொடர்பான பேரச்சம் பிறருடான உறவையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும். பொதுவாகக் காதலர்களிடையே நம்பிக்கை வெருளி ஏற்படுவது காதலை முறிக்கும்.நம்பிக்கை மோசடியைச் சந்தித்தவர்கள் அல்லது பிறரது நம்பிக்கை மோசடியை அறிந்தவர்கள் பிறரை நம்புவது குறித்துக் கவலைப்படுவர்.யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்உறவெல்லாம் முள்ளாகும்உயிரெல்லாம் கல்லாகும்எனப் ‘பறக்கும் பாவை’யில் வரும் கண்ணதாசன் பாடல் வரிகள் நம்பக வெருளியின் வெளிப்பாடே.‘எங்க…

வெருளி நோய்கள் 1416 -1420: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1411 -1415: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1416 -1420 நடை பேசி குறித்த வரம்பற்ற பேரச்சம் நடை பேசி வெருளி.நடைபேசிகள்(walkie-talkies) காவல் துறையினரால் பயன்படுத்தப் படுகின்றன. எனவே, காவல் துறையின் குறியீடாகக் கொண்டு இவை குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். காவலர் சிலர் கவனக் குறைவால் தமக்குரிய நடைபேசியைத் தொலைத்துள்ளனர்.இதுபற்றி அறிந்த பிறர் விழிப்பாக இருப்பதற்கு எண்ணி அளவு கடந்து கவலைப்படுகின்றனர்.00 முகநூலில் ஒருவர் விடுக்கும் நப்புக் கோரிக்கையை மற்றவர் ஏற்காததால் வரும் அளவுகடந்த பேரச்சம் நட்பு ஏற்காமை வெருளி.எல்லாக் குமுகத்…

வெருளி நோய்கள் 1411 -1415: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1406 -1410: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1411 -1415 நடுகல் குறித்து அறிவுக்குப் பொருந்தாத மிகையான பேரச்சம் கொள்வது நடுகல் வெருளி.நடுகல் குறித்துச் சங்க இலக்கியங்கள் 18 இடங்களில் குறித்துள்ளன. நடுகல் வணக்கம் தொன்றுதொட்டே உள்ளது. நாட்டிற்குக் காவலாக விளங்கிப் போரில் வீர மரணம் அடைந்தவர்க்குத்தான் நடுகல்கள் அமைக்கப்பட்டன.கல்லறைவெருளி-Coimetrophobia / Koimetrophobia), அழி பொருள் வெருளி(Necrophobia), புதைவுவெருளி-(Taphephobia/ Taphiphobia/ Taphophobia/Taphosphobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது நடுகல் வெருளி.coimetro என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் புதைவிடம் எனப் பொருள்.00 நடுக்கம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நடுக்க…

வெருளி நோய்கள் 1406 -1410: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1401 -1405:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1406 -1410 நகம் வெட்டல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நகவெட்டல் வெருளி.நகத்தைச் சரியாக வெட்ட முடியாமல் போய்விடுமோ இதனால் ஏதும் கேடுவிளையுமோ என்று பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 நகை குறித்த வரம்பற்ற பேரச்சம் நகை வெருளி.கழுத்தணி, ஆரம், காதணி என்பன போன்று குறிப்பிட்ட வகை நகைமீது சிலருக்கு வெறுப்பு இருக்கும். சிலருக்குப்பொதுவாகவே நகைகள் மீது இருக்கம். சிலருக்கு ஒரு முறை நகையால் அரிப்பு ஏற்பட்டு, நகை ஒவ்வாமை உள்ளதாக எண்ணி வெறுப்பர். சிலர் பிறரின்…

வெருளி நோய்கள் 1401 -1405: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1396 -1400:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1401 -1405 தோறணையரைக் கண்டு ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் தோறணை வெருளி.Euax என்பது இலத்தீன் வியப்பிடைச்சொல். அதிலிருந்துதான் Euaxo உருவானது. தோற்றச்சிறப்பு கண்டு வியப்பதைக் குறிக்கிறது.தோரணம் > தோரணை என்பதுபோல் தோற்றம் > தோறணை(Posh) எனக் குறிக்கலாம். தோறணையுடன் திகழும் மக்களைத் தோறணையர் (Posh People) எனலாம்.00 நகம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நக வெருளி.ஒருவரின் நகத்தைக் கொண்டே அவருக்குள்ள நோய்பற்றிக் கூறலாம் என்பர். எனவே, நகத்திற்குப் பாதிப்பு என்றால் உடலுக்குப் பெருங்கேடு என…

முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!

முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்! நேற்று ஞாயிறு 10.05.2026 காலை 10.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.சோ.விசய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு நடந்ததை அனைவரும் அறிவோம். நேற்று அதே நேரம் அவருக்குத் தமிழ்காப்புக் கழகம் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதுவே முதல் பாராட்டுக் கூட்டம். அதுவும் தமிழ் அமைப்பு நடத்திய பாராட்டுக் கூட்டம். தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது. தேர்தல் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கித் தன்னம்பிக்கையால்…

வெருளி நோய்கள் 1396 -1400: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1391 -1395: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1396 -1400 தோல்வி குறித்து ஏற்படும் அல்லது எதிர்பார்க்கும் சூழல் குறித்த அளவுகடந்த பேரச்சமே தோல்வி வெருளி.தோல்வி வெருளி (cadophobia), தோற்கடிப்பு வெருளி (kakorraphiaphobia, kakorraphiophobia, kakorrhaphiophobia), ஆகூழின்மை வெருளி(Atychiphobia) யாவுமே தோல்வி தொடர்பானவைதானே. எனவே, பொதுவாகத் தோல்வி வெருளி என்று சொன்னால் போதும்.தோல்வி குறித்த அச்சமே முயற்சிக்கு முட்டுக்கட்டையாய் அமைந்து வெற்றி வழிக்குச் செல்வதைத் தடுக்கிறது.தேர்வு, தேர்தல், தொழில், காதல், வாழ்க்கை, விளையாட்டு, போட்டி என எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பது…

கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்

சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1. இன்றைய ஆய்விற்குரிய நூல், ‘சிவகங்கை இராமச்சந்திரனார்‘ என்பதாகும். கொடைக்கானல் காந்தியால் எழுதப் பெற்றது இந்நூல். இந்நூல் வரலாற்றின் வாயில், அரசியல் வரலாறு, தலைவர்களின் தலைவர், கொள்கை குணம் கோட்பாடு என்னும் 4 பிரிவுகளில் மொத்தம் 43 தலைப்புகளில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் எழுவரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையான சூரியவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிவகங்கைஇராமச்சந்திரனார் பற்றிய கருத்தினக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது கட்டுரை தலைமுறை வரலாறு; மூன்றாவது கட்டுரை வரலாற்றின் வரலாறு; நான்காம் கட்டுரை வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்; ஐந்தாவது…