நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும்  சனவரி முதல் நாளன்று நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கிறோம்.  ஆனால் நாம் எண்ணுவதுபோல் இஃது ஆங்கில ஆண்டுமல்ல, கிறித்துவ ஆண்டுமல்ல. நடைமுறையில் இவ்வாண்டு பயன் பாட்டில் உள்ளமையால் இதனை நாம் நடைமுறை ஆண்டு என்று சொல்லலாம். கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும் வரலாறு அறிந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர். கிறித்து பிறந்த பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஆண்டிற்குப் பத்து மாதங்கள்தாம் இருந்தன. அப்பொழுது சூலையும் ஆகத்தும் கிடையாது. கி.மு.45இல் உரோமானியப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு அவர் பெயரால் சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்றுஅழைக்கப் பெற்றதே முன்பு பயன்பாட்டில் இருந்தது. அலோசியசு இலிலியசு [Aloysius Lilius (1510 – 1576)] என்னும் இத்தாலிய மருத்துவர், வானியல் அறிஞர், மெய்யியலாளர், காலக்கணிப்பர் எனப் பல்துறை வித்தகராய் விளங்கினார். இவர் உலுயிகி  இலிலியோ(Luigi Lilio) என்றும் உலுயிகி கிகிலியோ(Luigi Giglio) என்றும் அழைக்கப்படுவார். இவரால் மாற்றி யமைக்கப்பட்ட வடிவமே சில திருத்தங்களுடன் இப்பொழுது வழக்கில் உள்ளது….

சந்திப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

சந்திப்பு   எண்ணத்தின் சந்திப்பு நட்பாய் மலரும் உள்ளத்தின் சந்திப்பு காதலாய்க் கனியும் தாய் தந்தை சந்திப்பு மகவை ஈனும் ஆய்வு செயல் சந்திப்பு அறிவைப் பேணும் அறிஞரின் சந்திப்பு ஆக்கம் அளிக்கும் கலைஞரின் சந்திப்பு ஊக்கம் அளிக்கும் மறவரின் சந்திப்பு வீரம் ஊட்டும் அறத்தார் சந்திப்பு வறுமை ஓட்டும் எழுத்தின் சந்திப்பு சொல்லாய் மாறும் சொல்லின் சந்திப்பு வரியாய் மாறும் வரியின் சந்திப்பு கவியாய் மாறும் கவியின் சந்திப்பு காவியம் ஆகும் உழைப்போர் சந்திப்பு உயர்வைச் சேர்க்கும் விலைமகள் சந்திப்பு இழிவைச் சேர்க்கும்…

தேடுகின்றேன் நான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

உடலில் பாதியைத் தேடுகின்றேன் நான் உளத்தில் பாதியைத் தேடுகின்றேன் நான் கண்ணின் ஒளியைத் தேடுகின்றேன் நான் கருத்தின் எழுச்சியைத் தேடுகின்றேன் நான் பார்வையின் கனிவைத்  தேடுகின்றேன் நான் ஆர்வத்தின் தொடக்கத்தைத் தேடுகின்றேன் நான் பேச்சின் சுவையைத் தேடுகின்றேன் நான் மூச்சி்ன் மூலத்தைத் தேடுகின்றேன் நான் இளமையின் பொலிவைத் தேடுகின்றேன் நான் பழமையின் வலிவைத் தேடுகின்றேன் நான் அமிழ்தின் இனிமையைத் தேடுகின்றேன் நான் அழகின் இயற்கையைத் தேடுகின்றேன் நான் தாயின் பரிவைத் தேடுகின்றேன் நான் சேயின் மழலையைத் தேடுகின்றேன் நான் உன்னிடம் மட்டும் காணுகின்றேன் நான் தமிழே…

தமிழர் தேசிய முன்னணியின் தமிழ்வழிக் கல்வி வற்புறுத்தல் கூட்டம், பம்மல்

பங்குனி 24, 2050 ஞாயிறு 07.04.2019 மாலை 4.00 – இரவு 8.00 அன்சாரி மாளிகை, பம்மல் முதன்மைச்சாலை, பம்மல் சென்னை 75 தமிழ்வழியில் படித்தவனுக்கு வேலை கொடு! தமிழ்வழியில் கல்வி கொடு! தமிழர் தேசிய முன்னணியின் 6ஆவது மாநாடு கா.பா.பன்னீர்செல்வம், தலைவர் முனைவர் இளமாறன் –  தணிகை மைந்தன் – புலவர் இளஞ்செழியன் – அறிஞர் அரு.கோ – சிவ.செந்தமிழ்வாணன் – பட்டுக்கோட்டை  சி.இராமசாமி – சுந்ரமூர்த்தி – தஞ்சை பனசை அரங்கன் – மறை தி.தாயுமானவன் – இலக்குவனார் திருவள்ளுவன் – அ.பத்மநாபன் – புலவர் வெற்றிச்செழியன் – கரு .அண்ணாமலை – திருத்தணிப்புலவர் குறளன்பன் – ஆவடி நாகராசன் –…

சிலம்பு ஒலிப்பு நின்றது! சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார்!

மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் மருததுவம் பெற்று வந்தார். இன்று (பங்குனி 23, 2050 சனி ஏப்பிரல் 06.2019) காலை 6.30 மணிக்குச் சென்னையில் காலமானார். இவரது உடல்  பதப்படுத்தப்பட்டு நண்பகல் கொணரப்படும். நாளை காலை வரை இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பெறும்.நாளை மறுநாள் நாமக்கல் சிவியாம்பாளையத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும். சிலப்பதிகாரம் என்றதும் நினைவிற்கு வரும் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் போன்ற மற்றோர் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலப்பதிகாரத்தைப் பாரெங்கும் பரப்பிய இலக்கியச் சொற்பொழிவாளர்….

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 61-70: இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 51-60 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி)   காதற் துணையை அடைந்து கடவுட் பெருமையை அடை! புகழ்மிகு துணையால் பெருமித நடை கொள்! இல்லறப் பெருமையே பொலிவு! நன்மக்களே அழகு! என உணர்! நன்மக்கட்பேறே சிறந்த பேறு என அறி! எப்பருவத்திலும் துன்பங்கள் நெருங்காவண்ணம் பழியிலா மக்கள் பெறு! நம் மக்கள் நம் செல்வம். அவர் முயற்சியால் அவர் செல்வம் வரும் என அறி! நம் மக்கள் சிறு கையால் தரும் உணவை அமிழ்தினும் இனிதாய்ச் சுவை! மக்களைத்…

கல்வி உ ரிமையைப் பொதுப்பட்டியலில் இருந்து மீட்க முழக்க நிகழ்வு – ஒளிப்படங்கள்

செ ன்னை வள்ளுவர் கோட்டம் அருகே, பங்குனி 9, சனிக்கிழமை, 23.03.2019 அன்று முற்பகல் தமிழ்க்கல்வி உரிமைகளுக்காக முழக்க நிகழ்வு நடைபெற்றது.  தோழர் அ.சி.சின்னப்பத் தமிழர் தலைமையுரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரை ஆற்றினார்.  தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு அமைப்பினர் உரைகளும் முழக்கங்களும் இடம் பெற்றன. முதல் படத்தைச் சொடுக்கியபின் வரிசையாகப் பிற படங்களைக் காண்க.

சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்

சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்? தமிழ்நாட்டு மக்கள் சாதிப்பட்டங்ளைத் துறப்பதற்கு முன்னோடியாய் விளங்கிய சீர்திருத்தச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார். பகுத்தறிவு இயக்கத் தலைவர், கல்விப் புரவலர், மது ஒழிப்பைப் பரப்பிய அறவாணர், தமிழ் வளர்த்த தகைமையாளர் எனப் பல சிறப்புகள் கொண்டவர் அவர். அவரது பெயர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது. ஆனால் அப்பெயர் தந்திரமாக  அகற்றப்பட்டுள்ளது. அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அருந்தலைவர். 21.12.1991 இல் மதுரையில் தி.மு.க.வின் பவளவிழா மாநாட்டு அரங்கத்திற்குச் சிவகங்கை இராமச்சந்திரனார் பெயர்…

தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை!- இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை! தேர்தல் ஆணையத்தின் அறமுறையற்ற செயல்பாடுகளைக் கொடுங்கோலாட்சியின் செயல்பாடுகளுடன்தான் ஒப்பிட முடியும். மக்களாட்சியின் அடையாளமாகத் திகழ்வது தேர்தல். தேர்தலில் போட்டியிடுவோருக்குரிய மக்களாட்சிக் கடமைகளை ஆற்ற உதவ வேண்டியது தேர்தல் ஆணையத்தின் அடிப்படைப் பணி. ஆனால் கட்சிகளுக்கேற்றவாறு மாறுபட்ட அளவுகோல்களைக் கொண்டு சூழ்நிலைகளை ஆராய்ந்து தனக்குரிய கடமையிலிருந்து தவறுவதே தேர்தல் ஆணையத்தின் பணியாக உள்ளது. நடுநிலையாளர் என்ன சொல்லுவார்கள் என்ற அச்சம் இன்றித் துணிந்து தவறுகளைச் செய்கிறார்கள் என்றால் இதனை எங்ஙனம் செங்கோன்மையாகக் கூற முடியும்? ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு ஓர்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50: இலக்குவனார் திருள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50 (குறள்நெறி) நாளை வீணாக்காமல் நன்றாக்கி வாணாள் காக்கும் அணையாக்கு! அற வழியில் உண்மை இன்பம் அடை! அறம் செய்! பழிச்செயல் விடு! சார்ந்தோர்க்குத் துணையாக இரு! துறந்தார், துய்க்க இயலார், காப்பிலார்க்குத் துணை நில்! பிறருடன் உன்னையும் காத்திடு! பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்! இல்வாழ்வின் பண்பும் பயனுமான அன்பையும் அறனையும் கடைப்பிடி! இல்வாழ்வே அறவாழ்வு, பிற வாழ்வில் ஒன்றுமில்லை. என உணர்! முயற்சியுடையாருள் தலைசிறந்து விளங்கு!இலக்குவனார்திருவள்ளுவன் (தொடரும்) இலக்குவனார்திருவள்ளுவன்

ஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஊழல் ஒழிய 5 ஆண்டுகளேனும் கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். தேர்தலுக்கான செலவுப் பெருக்கமும் தேர்தலில் வழங்கப்படும் முறையற்ற அன்பளிப்புகளும் ஊழல் மிகுதிக்கு முதன்மைக் காரணங்களாகும். தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கூறிப் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முன் வரும் சிறிய கட்சிகள், பெரியகட்சிகளுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ அதே தொகுதிகளைத்தான் கேட்கின்றனர். அது மட்டுமல்ல. தேர்தல் செலவுகளையும் பெரிய கட்சியிடமே கேட்டுப் பெறுகின்றனர். தொகுதி உடன்பாட்டையே முறையற்ற வழியில் பணத்தை அளித்தும் கொடுத்தும் மேற்கொள்ளும் இக்கட்சிகள் வெற்றிக்குப் பின் அல்லது…

பாவம் வைகோ! – இலக்குவனார் திருவள்ளுவன்

பாவம் வைகோ! கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ம.தி.மு.க.வை வைகோவே ஆக்குகிறார். பிற கட்சித் தலைவர்களாலும் பாராட்டப் பெறுபவர் வைகோ. மக்கள் நலன்களுக்காகத் துணிந்து போராடுபவர் புரட்சிப்புயல் என அழைக்கப்பெறும் வைகோ. நாடாளுமன்றத் தேர்தல்களில் 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் முறையே 3,4, 4 தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. 2006இல் சட்டமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. ஆனால், 2016 இல்  ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. என்றாலும் உலக அளவிலான அவர் மீதான மதிப்பு குறையவில்லை. இருப்பினும் அவர் கட்சிக்கு ஒற்றைத்…