சிவகங்கை இராமச்சந்திரனார் நூல்வெளியீடும் நகைமுகன் படத்திறப்பும், சென்னை

வைகாசி 12, 2047 / மே 25, 2016 மாலை 6.00 பெரியார்திடல், சென்னை 600 007  கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்தினார்  நூலின் சீர்பதிப்பு வெளியீடு இதழாளர் பொறி.க.நகைமுகன் படத்திறப்பு முன்னிலை  : முனைவர் நாகநாதன் தலைமை :   இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(ப.நி.) வெளியீட்டுரை: ஆசிரியர்  கி.வீரமணி முதல்நூல் பெறுநர் : நீதிபதி  பொன்.பாசுகர் நூலாசிரியர் உரை :கொடைக்கானல் காந்தி படத்திறப்பு : திரு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சிறப்புரை :  திரு திருநாவுக்கரசர் ஆய்வுரை: பலர் பொறி.பன்னீர் இராமச்சந்தி்ரன் வழ.இரா.நீதிச்செல்வன்

யார் வந்தாலும் வரவேற்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

யார் வந்தாலும் வரவேற்போம்!  வைகாசி 06, 2047 / மே 19, 2016 : வாக்குகள் எண்ணப்பட்டுச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்டிருக்கும்; யார் ஆட்சி அமைக்கப் போவது என்று தெரிந்திருக்கும். அதன்படி யார்  ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் வரவேற்போம்! தேர்தலுக்கு முன்னர் யார், எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும், அல்லது யார் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தாலும், விரும்பியவர் ஆட்சி அமைத்தாலும் விரும்பாதவர் ஆட்சி அமைத்தாலும் வரவேற்போம்!   அஇஅதிமுக வின்  மீது மக்கள் காணும் குறைகள்  வேறுகட்சி மீது இருந்தது என்றால்,…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200:  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225   201. மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  233.1 புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 235.3 செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார். – பெரியபுராணம்:…

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! கொடுவினையில், சதிவலையில் இறந்தவர்களை நினைக்கும்பொழுது தீவினையரை மறந்துவிடுவோமோ! கொலைக்குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை  கிடைக்க வேண்டாவா? அன்றுதானே நம் மனம் ஆறுதல் அடையும்!  இறந்தவர்களை நினைவுகூர்வோம்! இருப்பவர்களுக்குத் துணை நிற்போம்! இறந்தவர்கள் கனவை நனவாக்குவோம்! இருப்பவர்கள் வாழ்வை வளமாக்குவோம்! அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 625) – இலக்குவனார் திருவள்ளுவன்

கொடுந்துயரை நினைவுறுத்தும் மே மூன்றாவது வாரம் – காங்கிரசைக் கருவறுக்க நினைவு கொள்வோம்!

கொடுந்துயரை நினைவுறுத்தும் மே மூன்றாவது வாரம் – காங்கிரசைக் கருவறுக்க நினைவு கொள்வோம்!  உலகில் எங்கு துயரம் நிகழ்ந்தாலும் அதில் பங்குகொள்பவர்கள் தமிழர்கள். கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுப்பதிலும் துயர் நீக்க உதவுவதிலும் முதலிடத்தில் இருப்பவர்கள் தமிழ் மக்கள். ஆனால், தம் நாட்டிற்கு மிக அருகில் உள்ள நாட்டில் – இலங்கையில் – இனப்படுகொலை நேர்ந்த பொழுது அவர்கள் கையறு நிலையில் தள்ளிவிடப்பட்டனர்.  தங்கள் வலிமையை  ஒன்று திரட்டி ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற இயலாமல் கூனிக்குறுகினர்.  இதற்கெல்லாம் காரணமான ஒற்றைச் சொல் ‘இந்தியம்’ என்பது….

வாக்காளர் ஆத்திசூடி – இலக்குவனார் திருவள்ளுவன்

வாக்காளர் ஆத்திசூடி அளவிலா மதிப்புடைய வாக்குரிமையைப் பயன்படுத்த வாக்களிப்பீர்! ஆற்றல் மிக்கவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பீர்! இன்னலைத் துடைக்க வருவோரைத் தேர்ந்தெடுப்பீர்! ஈடிலாச் சிறப்புடைய வாக்குரிமையைப் பயன்படுத்துவீர்! உங்களுக்காக உழைப்பவரைத்தேர்ந்தெடுப்பீர்! ஊக்கமுடன் செயல்படுவோரைத் தேர்ந்தெடுப்பீர்! எளிமையைக் கடைப்பிடிப்பவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஏற்றம்தரும் வல்லவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஐந்தாண்டுகளுக்குப் பொறுப்பானவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஒற்றுமைக்கு வழிவகுப்பவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஓங்குபுகழ் தருபவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஓளவியம்இல்லாதாரை(ஏய்க்காதவரை)த் தேர்ந்தெடுப்பிர்! – இலக்குவனார் திருவள்ளுவன் [வாக்காளருக்கான வேண்டுகோள் முழக்கங்கள் ஆத்திசூடி என்னும் பெயரில் தரப்பட்டுள்ளன.]

ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது!   தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகள்,  நிறைகளும் குறைகளும் கொண்டவையே! இவ்வாறு இருப்பது இயற்கையே! குறிப்பாக இப்பொழுது  தேர்தல் களத்தில் உள்ள செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் பாராட்டத்தக்கப் பணிகளும் ஆற்றி உள்ளனர். ஆனால்,   அதே நேரம், வாயில் தமிழ் முழங்கிக்கொண்டே,  செயலில் தமிழை மறந்தவர்களாக, இருவரும் உள்ளனர். எதை எதையோ கட்டணமாகத் தர முடிபவர்களால் கல்வியையும் மருத்துவ வசதியையும் ஏன் இலவயமாகத் தர இயலவில்லை? பொருள்களைக் கட்டணமின்றித் தரும்பொழுது அவற்றின் கொள்முதலில் ஆதாயம் பார்க்க இயலும். கல்வியையும்…

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை!   தனக்குப்பின் குடும்பத்தில் யார் எனக் குடும்பத்தலைவர் என்ற முறையில்  கலைஞர் கருணாநிதியால்  கூற இயலும். ஆனால் கட்சியில் தனக்குப்பின் யார் எனக்  கூற முடியாதே! சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை அவர் எப்படி அறிவிக்க இயலும்? “தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. கட்சிப் பதவிக்கு யார் வர வேண்டும் என்பதைப் பொதுக் குழு, செயற்குழுதான் முடிவு செய்யும்’  என்பதல்லவா கலைஞர் கருணாநிதியின்  அழுத்தமான பேச்சு. எனினும் தி.மு.க. பொருளாளராக…

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!   மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால்,  பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது  தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் அறிந்தே தவறு செய்பவர்களே!   அதிமுக தலைவியின் செயலொன்று ஊடகங்களாலும் மக்களாலும் அங்கதமாகவும் கேலியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டாலும்…

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம்  தேடாமல் கடமையாற்றட்டும்!  தேர்தல் ஆணையம் எப்படிப் பணியாற்றினாலும் ஒவ்வொரு தரப்பாரும் அவரவர் கண்ணோட்டத்தில் குறை கூறத்தான் செய்வர். என்றாலும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவோர் மனச்சான்றுடன் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையரின்  அறிவிப்புகளைப் பார்க்கும் பொழுது மலிவான விளம்பரத்தில் காட்டும் நாட்டத்தை உரிய கடமையாற்றுவதில் காட்டவில்லை என்றுதான் தெரிகின்றது.   எடுத்துக்காட்டிற்கு ஒன்று:-   தேர்தல் ஆணையம் அவ்வப்பொழுது ஊர்திகளை மடக்கிப் பணங்களைப் பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி, இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணத்தில்…

முதல்வர் நாற்காலிமீதுள்ள விருப்பம் தமிழ்மீது இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

  முதல்வர் நாற்காலிமீது விருப்பம் உள்ளவர்களுக்குத் தமிழ்மீது விருப்பம் இல்லையே!     நிலையான(நிரந்தர) முதல்வர் என்று ஒருவர்!  அடுத்தவாரம் முதல் முதல்வர் என்று சிலர் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முதல்வராக விழைவோரின் தமிழ் உணர்வு எப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக அவர்களின்  வேட்பு உறுதிப் பத்திரத்தைப் பார்த்தோம்.    இன்றைய முதல்வர் தன் வேட்புறுதியை ஆங்கிலத்தில் அளித்துள்ளார். ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இட்டுள்ளார். அரசின் பணியாளர்கள் தமிழில்  கையொப்படமிட வேண்டும் என்று ஓர்  ஆணை உள்ளது. இருப்பினும் ஏறத்தாழ 14 ஆண்டுகள் அரசை வழிநடத்தியும் கையொப்பம் …

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200: இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175  தொடர்ச்சி)   காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200   செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 24. பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் 8.2   சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடு எய்தி – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 25. காரைக்கால் அம்மையார் புராணம் : 43.1   அந் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து…