தேவதானப்பட்டியில்  ஆழ்துளைக் கிணறு போடாமல் மோசடி தேவதானப்பட்டி ஊராட்சிப்பகுதிகளில்  ஆழ்துளைக் கிணறு மோசடி நடைபெற்றுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள 17 ஊராட்சிகளுக்கும் வறட்சித் துடைப்புத்திட்டத்தின் கீழ்ச் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ்  உரூ1.50  இலட்சமும், ஆழ்துளைக்கிணறு,   தரைத்தொட்டி அமைப்பதற்கு  உரூ. 2.25  இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர்களிடம் அதற்கான பணி வழங்கப்பட்டது. இதில் சில ஊராட்சிகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்காமல் ஏற்கெனவே ஊராட்சிகளுக்கு வரும் குடிநீர்க் குழாய் இணைப்பைத் தோண்டி அதிலிருந்து இயந்திரம்…