களித்துண்டு வாழ்வமோ தமிழா! அங்கே கரித்துண்டாய்ப் போகிறான் தமிழன்! விழித்தின்று குரல்கொடுதமிழா! கொடும் விதிவெல்லப் புறப்படுதமிழா! பகிர்ந்துண்டு வாழ்ந்தவன் அன்று பதியின்றியலைகிறான் இன்று! துயில்கொள்ளத் தரைகூடஇன்றி-அவன் துடித்தங்கு மடிகிறான்இரைதண்ணியின்றி! அழிநச்சுவாயுவின் எரிபட்டுஉறவுகள் உருகெட்டுச் சாதல்கண்டும் பரிவற்றுவாய்மூடிப் பதுங்கிடும் உலகத்தின் சதிவெட்டக் குரல் கொடு தமிழா! வெளிக்குண்மை சொல்ல வா! தமிழா! – நாம் விழிமூடியுறங்கினால் யாருள்ளார் தமிழா! அழிக்கின்றபகை வெல்வோம் தமிழா!- உளம் அனல்பொங்க உலகிற்கு உண்மைசொல்தமிழா! – க. உலோகன்