(திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் தொடர்ச்சி)

attai-kuralarusolurai

திருக்குறள் அறுசொல் உரை

2. பொருள் பால்
13.குடி இயல்

       அதிகாரம்    102. நாண் உடைமை

   இழிசெயல் வழிவரும் அழியாப்

 பழிக்கு வெட்கி,அது ஒழித்தல்.  

 

  1. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

      நல்லவர் நாணுப் பிற.

 பழிச்செயலுக்கு வெட்குவதே, வெட்கம்;

        மகளிர்தம் வெட்கம், வேறு..

 

  1. ஊண்,உடை, எச்சம், உயிர்க்(கு)எல்லாம் வே(று)அல்ல;

      நாண்உடைமை மாந்தர் சிறப்பு.

உணவு,உடை, பிறஎல்லாம் பொது;

நாணம் மக்களுக்குச் சிறப்பு.

 

  1. ஊனைக் குறித்த உயிர்எல்லாம்; நாண்என்னும்

      நன்மை, குறித்தது சால்பு.

உயிருக்கு உடம்பும், நிறைவான

பண்பிற்கு நாணமும், அடித்தளம்.

 

  1. அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்(கு)….?

                                       அஃ(து)இன்றேல்,

      பிணிஅன்றோ பீடு நடை….?

வெட்கமே பெரியார்க்கு அழகு;

வெட்காத பெருமிதநடை நோய்.

 

  1. பிறர்பழியும், தம்பழியும் நாணுவார், நாணுக்(கு)

      உறைபதி என்னும் உலகு.

பிறர்பழிக்கும், தம்பழிக்கும் வெட்குவார்.

வெட்கத்திற்கு வாழ்இடம் ஆவார்.

 

  1. நாண்வேலி கொள்ளாது மன்னோ…..? வியன்ஞாலம்

      பேணலர்; மேலா யவர்.

நாணத்தை வேலியாகக் கொண்டார்,

உலகமே பெறினும் நாணம்விடார்.

 

  1. நாணால், உயிரைத் துறப்பர்; உயிர்பொருட்(டு)ஆல்,

      நாண்துறவார் நாண்ஆள் பவர்.

நாணத்தார் நாணிற்காக உயிர்விடுவார்;

உயிரைக் காக்க நாணம்விடார்.

 

  1. பிறர்நாணத் தக்கது, தான்நாணான் ஆயின்,

      அறம்,நாணத் தக்க(து) உடைத்து.

மற்றவர் நாணத் தக்கவற்றிற்குத்

தானும் நாணாவிடின், அறம்நாணும்.

 

  1. குலம்சுடும், கொள்கை பிழைப்பின்; நலம்சுடும்,

      நாண்இன்மை நின்றக் கடை.

கொள்கை தவறினால், குலம்கெடும்;

நாணம் தவறினால், நலம்கெடும்.

 

  1. நாண்அகத்(து) இல்லார் இயக்கம், மரப்பாவை

      நாணால் உயிர்மருட்டி அற்று.

நாண்இல்லார் நடமாட்டம், கயிற்றால்

மரப்பொம்மை நடமாடல் போல.

-பேரா.வெ.அரங்கராசன்