http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png

“அகர முதல”

விரித்த அருந்தமிழ்

கண்டு மலைத்தேன்.

நூல் விரித்தன்ன‌

மணிநீர் அருவி

நுழை படுத்தாங்கு

மெல்லிமிழ் தும்பி

புன்கால் குடைதர‌

நுண்புலம் அதிர்ந்து

விண் விதிர்த்தாங்கு

பொதிகை அடுக்கம்

பரல் நரல் தமிழின்

பொறி கிளர்ந்தன்ன‌

பொற்றமிழ் கண்டு

களி மிகுதலுற்றேன்.

புல்லுள் கல்லுள்

புள்ளுள் குன்றுள்

அமிழ்தமிழ் ஈண்டு

அகவுதல் கேட்டு

அக மகிழ்வுற்றேன்.

வாழ்த்துக்களுடன்

ruthra-paramasivan01(உ)ருத்ரா இ.பரமசிவன்