saa.ramanusam-pulavar01

மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும்இல்லை-ஆட்சி
மத்தியில் மாறினாலும் மாறாத்தொல்லை
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்னதெல்லாம் –மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம்
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும்போக்கே –எடுத்து
துல்லியமாய்க் காட்டுதந்தோ உற்றுநோக்க
நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா
நீங்களுமா..! போவதென்ன? வருதல் பழியே!

modi04 sonia02

அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஓயவில்லை – நாளும்
அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை
எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ!
ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே
உழுவார்க்குஊக்கத்தொகை ! நெல்லுக்கேமறுப்பதா!- இந்த
உலகுக்கே அச்சாணி!அவன்கழுத்தைஅறுப்பதா!
எழுவாரா ! தொழில்செய்ய! எண்ணுவாரா! மத்தியிலே -உடன்
ஏற்றிடுவீர் ! சிந்தித்து மாற்றமது புத்தியிலே!

eezham-genocide23

perarivalan_and_six01

tamilfishermen03

http://www.pulavarkural.info/2014/07/blog-post_31.html
pirar-karuvuulam