என்னடா தமிழா !- ஈரோடு இறைவன்

என்னடா தமிழா ! மூளை ஆங்கிலத்தில் கிடக்குது ! நாக்கு ஆங்கிலத்தில் கிடக்குது ! உன் எழுத்து ஆங்கிலத்தில் கிடக்குது ! என்னடா தமிழா உன் தமிழ் எங்கே கிடக்குது ! – ஈரோடு இறைவன்

தமிழிசைப் பேரரங்க விழா, மலேசியா

தமிழிசையை மீட்க மலேசியாவில் ஓர் அரிய வரலாற்று நிகழ்வு ….தமிழிசைப் பேரரங்கம் …..தமிழியல் பாடகர் இரகுராமன் அவர்கள் முதன்முறையாகத் தமிழ் கீர்த்தனைப் பாடல்களைத் தமிழிசை முறைப்படி பாடவுள்ளார் ….தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ.பு .திருமாலனார் அவர்களின் திருப்பாவிசை எனும் வண்ணப் பாடல்களையும் அவர்தம் மாணவர்களான திருமாவளவன் திருச்செல்வம் ஆகியோர் இயற்றிய தமிழியல் பாடல்களையும் தமிழ் மரபு வழுவாது இரகுராமன் அவர்கள் பாடவுள்ளார் . தலை நகர் சோமா அரங்கத்தில் மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015 பிற்பகல் 2 மணிக்கு…

‘தமிழம் பண்பலை’ : பொள்ளாச்சி நசன் வேண்டுகோள்

‘தமிழம் பண்பலை’ தொடங்கும் பொள்ளாச்சி நசன் வேண்டுகோள் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்   கடந்த 10 நாள்களாகத் தமிழம்.பண்பலையை வடிவமைப்பதிலேயே, என் முழு நேரமும் கழிந்தது. நேற்றுதான் அதற்கான இறுதிவடிவம் கொடுத்து முழுமைப்படுத்தி இணைத்து உள்ளேன். சிறு சிறு பிழைகள் இருக்கலாம், அவை வரும்காலத்தில் சரி செய்யப்படும்.   தமிழ் உணர்வுள்ள பாடல்களை வெளியிட்டு இருப்பவர்கள் அருள்கூர்ந்து அந்த இறுவட்டுகளை அனுப்பி வைக்கவும். தமிழம் வலையை தமிழம்.நெட் இணையதளத்திலும் கேட்கலாம். ஆன்டிராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்கள் அதற்கான மென்பொருளை இறக்கி நிறுவிக் கொண்டு தொடர்ந்து கேட்கலாம்….

கலைச்சொல் தெளிவோம்! 91. உணவு வெருளி-Sitophobia

91. உணவு வெருளி-Sitophobia   முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் (பெரும்பாண் ஆற்றுப்படை : 246) சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் (அகநானூறு : 283.5) பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட (மதுரைக் காஞ்சி : 660) வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த (பெரும்பாண் ஆற்றுப்படை : 137) ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், (பட்டினப் பாலை : 191) சிறு புல் உணவு, நெறி பட மறுகி, (அகநானூறு : 377.2) உண்டி கொடுத்தோர்…

ஆரியர்கள் தமிழ் எழுத்தைக் கொண்டு தம் மொழியை அமைத்துக் கொண்டனர்

ஆரியர்கள் தமிழ் எழுத்தைக் கொண்டு தம் மொழியை அமைத்துக் கொண்டனர்    ஐரோப்பாவிலுள்ள ஆரிய மொழியினங்களுக்குக் கிரேக்க, இலத்தீன் எனப் பெயர்கள் இருப்பதைப் போல, இந்தியாவிற்கு வந்த ஆரிய மொழிக்கு ஏதேனும் பெயர் உண்டு என்பரேல் அது சரி, ஒத்துக் கொள்வோம். சமற்கிருதம் என்னும் பெயர் எப்பொழுது வந்தது? ஆரியர் இந்தியாவிற்கு வந்து தமிழிலுள்ள உயிரையும் மெய்யையும் தம் மொழியில் வைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற உயிர் மெய்யெழுத்தையும் அமைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற மொழிகளையும் ஆராய்ச்சியால் செம்மை செய்து அமைத்துக் கொண்ட தமது மொழிக்குச் “சமற்கிருதம்’…

தமிழர்கள் தம் பண்புகள் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர்

தமிழர்கள் தம் பண்புகள் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர்   திராவிடர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும்.   மிகப் பழைய காலத்திலும் திராவிடர் நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தினால் திராவிடருக்கு உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்புபடுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாக விட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம்….

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 14– ஆ.வெ.முல்லை நிலவழகன்

 [மாசி 17, 2046 / மார்ச்சு 01, 2015 தொடர்ச்சி] காட்சி – 14 அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (நாடகமாடுவோர் அழகுகளை நயம்பட எடுத்துக் கூறியபின் ஓடிய முடியூர் எண்ணத்தை உரைக்கின்றார் கவிஞர் அன்புக்கு) அன்ப :     இத்தனை அழகு இருவருக்கும் இருக்க வேண்டுமா? நடிப்பதற்கு! சத்தியமிட்டே சொல்கிறேன்! இருவருமே நல்ல அழகுதான்! கவி       :     பார்த்ததும் மனதிலோர் ஒழுக்கத்தைப் பரப்பிடும் அழகு ஒன்றென்றால் பார்த்ததும் காம இச்சைதனை எழுப்பிடும் அழகினை இரண்டெனலாம்! எவ்வகை…

குள்ளப்புரம் ஊராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு

 தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் கோடைக் காலத்திற்கு முன்பே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.   குள்ளப்புரம் ஊராட்சிக்குற்பட்ட மருகால்பட்டி, புதூர், கோயில்புரம், சங்கரமூர்த்திபட்டி முதலான சிற்றூர்களில் இருபது நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பாத்திரங்களில் குடிநீரைப் பிடித்து வைக்கின்றனர். நீண்ட நாள் தண்ணீரைப் பாத்திரங்களில் வைத்திருப்பதால் புழுக்களும், நோய் பரப்பும் கொசுக்களும் உற்பத்தி ஆகின்றன. மேலும் இத்தண்ணீரை அருந்துவதன் மூலம் நச்சுக் காய்ச்சல், வயிற்றுக்கழிவு, கொசுக்காய்ச்சல்,…

கலைச்சொல் தெளிவோம்! 90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia

90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia பொன்னால் வளைத்து இரண்டு சுற்றாக அமைக்கப்பட்ட காற்சரி என்னும் கால்நகையைக் குறிப்பிடுகையில் கலித்தொகை(85.1) ஈரமை சுற்று என்கின்றது. கீழும் மேலுமாக அமைந்த நீச்சல் உடை ஈரணி எனப்படுகின்றது. ஈரறிவு (பதிற்றுப்பத்து : 74.18), ஈருயிர்(அகநானூறு : 72.12), ஈரெழுவேளிர்(அகநானூறு :135.12), ஈரைம்பதின்மர் (புறநானூறு : 2.15; பதிற்றுப்பத்து : 14.5; பெரும்பாணாற்றுப்படை 415) என இரண்டின் அடுக்கு சுட்டப்படுவதைப் பார்க்கிறோம். வாழ்(17), வாழ்க்கை(60), வாழ்க(25), வாழ்கல்லா(1), வாழ்குவன்(1), வாழ்ச்சி(1), வாழ்த்த(10), வாழ்த்தி(20), வாழ்த்தினர்(1), வாழ்த்தினெம்(1), வாழ்த்தினேம்(2), வாழ்த்து(2), வாழ்த்தும்(2),…

கலைச்சொல் தெளிவோம்! 89. இருள் வெருளி

 89. இருள் வெருளி- Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia இருள் (164), இருளி (6), இருளிய (9), இருளின் (1) என இருள் தொடர்பான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுருகு ஆற்றுப்படை : 10) அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி, (பெரும்பாண் ஆற்றுப்படை : 1) குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் (மதுரைக் காஞ்சி : 195) உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள் (நற்றிணை : 68.8) நிலவும் இருளும்…

கலைச்சொல் தெளிவோம்! 88. ஆழ்பு வெருளி

 88. ஆழ்பு வெருளி-Bathophobia  ஆழ்(14), ஆழ்க(1), ஆழ்ச்சி(2), ஆழ்ந்த(2), ஆழ்ந்தன்று(1), ஆழ்ந்து(1), ஆழ்பவன்(1), ஆழ(1), ஆழல்(1), ஆழல(1), ஆழி(24), ஆழிமுதல்வ(1), ஆழியான்(1), ஆழும்(1), என ஆழ் அடிப்படையிலான சொற்கள் சங்கப்பாடல்களில் உள்ளன. ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் கொண்டு, ஆழம் பற்றிய…

மாயாண்டிபாரதி என்னும் வரலாறு – பாலா, தமிழக அரசியல்

  ‘‘ஏறினா இரயிலு… இறங்கினா செயிலு!’’ – மாயாண்டி பாரதி என்ற சரித்திரம் மாயாண்டி பாரதி… மதுரை என்றதுமே அறிவு பூர்வமானவர்களின் நினைவுக்கு வரும் அற்புதப் பெயர்.   இந்திய விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஈகம் செய்த ஈகையர் மாயாண்டி பாரதி பிப்பிரவரி 24 ஆம் நாள் விடுதலை மண்ணில் மரணமடைந்தார்.   மதுரை மேலமாசி வீதியில் 1917 ஆம் ஆண்டு இருளப்பன் – தில்லையம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் மாயாண்டி. இவருக்கு 13 அகவை ஆகும்போது 1930ஆம் ஆண்டு திருமரைக்காடு என்னும் வேதாரண்யத்தில்…