கலைச்சொல் தெளிவோம்! 87. அனைத்து வெருளி

87. அனைத்து வெருளி-Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது. எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர். அனைத்தும், புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266) கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22) அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68) அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, (அகநானூறு : 378:16) இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்        அறி அறிவு ஆகாச் செறிவினை…

கலைச்சொல் தெளிவோம்! 85 & 86. அழுக்கு வெருளி & குப்பை வெருளி

 85. அழுக்கு வெருளி – Automysophobia/Mysophobia 86. குப்பை வெருளி-Rupophobia ‘அழுக்கு’ என்பது சங்கக்காலத்திலேயே வழங்கிய சொல். புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் (புறநானூறு : 126:11) என மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடும் பொழுது கபிலர் பற்றிக் குறிக்கின்றார். பின்னர உரைகளிலும் இன்றளவில் மக்கள் வழக்கிலும் அழுக்கு, அப்பழுக்கு என்பன இடம் பெறுகின்றன. தூய்மையின்மை அல்லது துப்புரவின்மையால் -அஃதாவது அழுக்கினால் – ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அழுக்கு வெருளி-Automysophobia/Mysophobia அழுக்கின் பிறப்பிடங்களில் ஒன்றாகிய குப்பை பற்றிய பேரச்சம் குப்பை…

கலைச்சொல் தெளிவோம்! 84. அழிவுவெருளி-Atephobia

 84. அழிவுவெருளி-Atephobia  அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய சொற்கள் அழிவு தொடர்பாகச் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.  மனையியலில் destroy அழி, நிலைகுலை, தகர எனவும், பொறிநுட்பவியலில் destroyer அழிகலன் எனவும் பயன்படுத்துகின்றனர். எனினும் அழிவு பற்றிய…

கலைச்சொல் தெளிவோம்! 80-83 கூர்மை தொடர்பான வெருளிகள்

80-83  கூர்மை தொடர்பான வெருளிகள்  கூர் (109), கூர்த்த (1), நுனி (1) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. முனை என்பது போர்க்களப் பகுதியைக் குறிக்கின்றது. நுனை (17) கூரிய முனையைக் குறிக்கின்றது. அயில்(9) கூர்மையையும், கூர்மையாக உள்ள வேலையும் குறிக்கின்றது. வை (49) என்னும் சொல் கூர்மை என்னும் பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. கூர்முனையைக் குறிக்க வைந்நுதி என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஊசி அல்லது கூரிய முனை உடைய பொருள்களைப் பார்த்தால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் அயில்/ ஊசி வெருளி-Enetophobia கூர்…

கலைச்சொல் தெளிவோம்! 79. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia

79. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia அயலார் + வெருளி அயல்(27), அயலிலாட்டி(3), அயலிற்பெண்டிர்(1), அயலார்(2), அயலோர்(3), அயல(9), அயலது(25) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களி்ல் பயன்படுத்தப்பட்டுள்ளன. அயலாரைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய அயலார் வெருளி-Xenophobia/Zenophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கெ.கல்லுப்பட்டியில் கிடைத்த கோபுரக் கலசம்

கெ.கல்லுப்பட்டியில் ‘100 நாள்’ வேலை பார்க்கும் போது கிடைத்த கோபுரக் கலசம்   தேவதானப்பட்டி அருகே உள்ள கெ.கல்லுப்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு வேலை செய்யும்போது சிவப்புத்துணி சுற்றிய நிலையில் கோபுரக் கலசம் இருப்பதை அப்பகுதி மக்கள் எடுத்தனர்.  கெ.கல்லுப்பட்டி பகுதி, வரலாறும் பரம்பரைச்சிறப்பும் மிகுந்த பகுதியாகும். பண்டைய காலத்தில் திப்பு சுல்தான், ஊமைத்துரை, இராணிமங்கம்மாள் ஆகியோர் ஆங்கிலேயர் ஆட்சியில் தலைமறைவாக இருந்த இடங்களும் அதனால் பல வரலாற்றுச்சுவடுகளும் உள்ளன.   மேலும் இப்பகுதியில் பலவருடங்களுக்கு முன்னர்ப் பிளக்கப்பட்ட…

கைலாசநாதர் கோயிலில் பிறந்தநாளுக்கான பூசை

பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் மக்கள் முதல்வரின் 67 ஆம் பிறந்தநாளுக்கான பூசை  மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 67-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கைலாசநாதர் கோயிலில் மாவட்ட இளைஞர்கள், இளம்பெண்கள்பாசறை சார்பாகச் சிறப்பு பூசை செய்யப்பெற்றது. மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஒ.ப.இரவீந்திரநாத்துகுமார், பெரியகுளம் நகர்மன்றத்தலைவர் ஒ.இராசா, மாவட்ட எம்ஞ்சியார் அணி இளைஞர் செயலர் எல்லப்பட்டி முருகன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் முருகானந்தன், நகரத் துணைச் செயலர் அப்துல்சமது, கூட்டுறவுச் சங்க இயக்குநர் ஏ.சி.சிவபாலு, தொழிற்சங்கச்…

கலைச்சொல் தெளிவோம்! 78.வெருளி-phobia

78.வெருளி-phobia அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்  ஒன்றைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின் மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு, போபியா(phobia) எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி, அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள் தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத பொழுதும் விடாப்பிடியான அல்லது இயல்பிற்கு மீறிய அல்லது பகுத்தறிவிற்கு முரணான அச்சம் ஏற்படுவதையே இது…

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் துயர நேர்ச்சிகள் ஏற்படும் பேரிடர்

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் துயர நேர்ச்சிகள் ஏற்படும் பேரிடர்   தேவதானப்பட்டி அருகே உள்ள தம்தம்(டம்டம்)பாறைப் பகுதியில் கடந்த அத்தோபர் மாதம் 27 ஆம்நாள் கனமழை பொழிந்ததால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் இயற்கையாக உருவான ஊற்றுகளால் மேலிருந்து மரங்கள் அடித்து வரப்பட்டு, தண்ணீர் வெளியேறும் பகுதியில் அடைத்ததால் பல இடங்களில் சாலை போக்குவரத்து நின்றுவிட்டது. இதனால் கொடைக்கானல் செல்லமுடியாமல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அல்லல்பட்டனர். இதனால் கொடைக்கானலுக்குச் செல்லமுடியாமல் பொதுமக்கள் பழனி, தாண்டிக்குடி வழியாகச் சென்றனர்.   தேனி, திண்டுக்கல் மாவட்ட…

தேவதானப்பட்டி பகுதியில் மாம்பூப் பருவம் தொடங்கியது

    தேவதானப்பட்டி பகுதியில் மாமரத்தில் மாம்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, முருகமலை, கல்லுப்பட்டி பகுதிகளில் பல காணி பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. செந்தூரம், காசா, கல்லாமாங்காய், பங்கனப்பள்ளி, கழுதைவிட்டை முதலான பலவகை மாம்பழவகைகள் உள்ளன.  இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா, கருநாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் தற்பொழுது வெளிமாநிலங்களைச்சேர்ந்தவர்கள் மாந்தோப்புகளைப் பார்வையிட்டு முன்கூட்டியே பணத்தை கொடுத்து விட்டுச்செல்கின்றனர்.   கடந்த இரண்டு…

பேரூராட்சி நிருவாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்

பேரூராட்சி நிருவாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சியைக்கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்தலக்குண்டு பகுதியில் பேரூராட்சி சார்பாக நிலக் கவர்வுகள் நீக்கப்பட்டன. இதில் நிருவாகத் தலையீடு காரணமாக ஒரு சில பகுதிகளில் மட்டும் எடுத்து விட்டு மற்ற பகுதிகளில் எடுக்காமல் விட்டுவிட்டனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் விளைச்சல் நிலங்கள் அனைத்தும் பயன்பாடற்ற நிலையில் உள்ளன.   இதனைக்கண்டித்து மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் அ.நசீம்,…

சாலையோரக்கடைகளால் நேர்ச்சி(விபத்து)கள்!

மலைச்சாலைப் பகுதிகளில் சாலையோரக்கடைகளால் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்(அபாயம்)   தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலைப் பகுதி உள்ளது. இப்பகுதி மிக முதன்மையான சாலை இணைப்புப் பகுதியாகும். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து வரும் ஊர்திகள் கொடைக்கானல் செல்லும் பிரிவு இதுதான். எனவே தமிழகம், பிறமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் இச்சாலையில் பயணம் செய்கின்றனர்.   இன்னும் ஓரிரு வாரங்களில் கோடைப்பருவம் தொடங்க உள்ளதால் இப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஊர்திகள் கொடைக்கானல் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனைப்பயன்படுத்தி இப்பொழுது சாலையின் இருபுறமும், சாலை…