புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் : காமராசர் விழா

ஆனி 20, 2046 / சூலை 05, 2015 கவியரங்கம் :கவிஞர் ஆலந்தூர் செல்வராசு கருத்தரங்கம் : முனைவர் குமரிச்செழியன்

சங்க இலக்கியங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை – இரா.சாரங்கபாணியார்

சங்க உவமை உணர்த்தும் உயிரியல் அறிவாற்றல் சங்கப் புலவர்கள் கையாண்டுள்ள இயற்கை உவமைகளை நோக்கும் போது பயிரினங்கள், விலங்கினங்கள் முதலியவற்றின் இயல்புகளை அவர்கள் எத்துணைக் கூர்ந்து நோக்கியறிந்திருந்தனர் என்பது பெறப்படும். – பெரும்புலவர் முனைவர் இரா.சாரங்கபாணியார்: இயற்கை விருந்து: பக்கம்.3 சங்க இலக்கியங்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை சங்க இலக்கியங்கள் சாதி, சமய, இன வேறுபாடற்றவை. வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை. பொருட் சிறப்பும், கருத்துச் செறிவும், சொல்லினிமையும் வாய்ந்தவை. அவை அகத்திணை, புறத்திணை என இருபாற்பட்டுப் பெரும்பாலும் காதல், வீரம், குறித்துப்…

அழிக்கின்றபகை வெல்வோம் – க. உலோகன்

களித்துண்டு வாழ்வமோ தமிழா! அங்கே கரித்துண்டாய்ப் போகிறான் தமிழன்! விழித்தின்று குரல்கொடுதமிழா! கொடும் விதிவெல்லப் புறப்படுதமிழா! பகிர்ந்துண்டு வாழ்ந்தவன் அன்று பதியின்றியலைகிறான் இன்று! துயில்கொள்ளத் தரைகூடஇன்றி-அவன் துடித்தங்கு மடிகிறான்இரைதண்ணியின்றி! அழிநச்சுவாயுவின் எரிபட்டுஉறவுகள் உருகெட்டுச் சாதல்கண்டும் பரிவற்றுவாய்மூடிப் பதுங்கிடும் உலகத்தின் சதிவெட்டக் குரல் கொடு தமிழா! வெளிக்குண்மை சொல்ல வா! தமிழா! – நாம் விழிமூடியுறங்கினால் யாருள்ளார் தமிழா! அழிக்கின்றபகை வெல்வோம் தமிழா!- உளம் அனல்பொங்க உலகிற்கு உண்மைசொல்தமிழா! – க. உலோகன்

தமிழ் இலக்கியத் தோற்றக் காலத்தை அறுதியிட்டுரைக்க இயலாது – சி.இலக்குவனார்

தமிழ் இலக்கியத் தோற்றக் காலத்தை அறுதியிட்டுரைக்க இயலாது   ‘இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச் சொல். இதனை “இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணைகொண்டு அவ்விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம்.   தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத் துணைபுரிவனவற்றுள் முதன்மை இடம் பெறுவதும் தமிழ் இலக்கியமேயாகும். தமிழ் இலக்கியம் தொன்மை நலம் சான்றது. அதன்…

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 1: மறைமலை இலக்குவனார்

1 கட்டுரையின் நோக்கம்:   கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தராக விளங்கிய சங்கத் தமிழர், தம்மைச் சுற்றியும் ஒலிக்கும் ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக்கொண்டனர்.   வளியின் போக்கையறிந்து நீரில் கலன்களைச் செலுத்தும் முறைமையையறிந்த தமிழர்,நிலத்தில் தம்மைச் சூழ்ந்தமையும் ஒலிகளின் மாறுபாடுகளை வகைப்படுத்தியறிந்து ஊறு நேர வாய்ப்புள்ள வழிகளைத் தவிர்த்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். இனிய ஓசைகளைச் செவியாரத் துய்த்தும் இன்னா ஓசைகளை இனங்கண்டு பிறர்க்குரைத்தும் ஒலிகளை ஒப்புநோக்கிக் கூறியும் தம்மைச் சூழ்ந்திருந்த ஒலிச்சூழலமைவை அவர்கள் ஆய்ந்துரைத்த திறம்…

சமூக ஞானத்தைப் பெறுவதற்குப் புத்தக வாசிப்பே பெரிதும் துணை!

       மனிதன் மன்பதை அறிவைப் பெறுவதற்கு            புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன        – வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் பேச்சு –            வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் அறிமுக விழாவில், ஒரு மனிதன் சமூக அக்கறையையும், மன்பதை அறிவைபயும் பெறுவதற்குப் புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு   பேசினார்.           கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர்…

சங்கத்தமிழ் வீரனின் அம்பும் இராமனின் அம்பும் – அறிஞர் அண்ணா

இதுதான் வீரமா? இந்தக் கதையை அறிவுடையதென்று ஏற்கமுடியுமா?  வில்வீரன் ஒருவன் வில்லிலே நாணேற்றி அம்பைப் பூட்டி விசையாக விடுகிறான், ஒரு புலியைக் குறி வைத்து. 1. அம்பு வில்லினின்றும் விடுபட்டு மிக வேகமாகப் புலியின் உடலை ஊடுருவிச் சென்று, அருகிலிருந்த வாழை மரத்திலே பாய்ந்து நின்று விட்டது. இந்நிகழ்ச்சி உண்மையானது. உருவகப்படுத்தியதன்று. அம்பு புலியின் உடலைத் துளைத்துச் சென்றது என்பது அம்பின் கூர்மையையும் வேகத்தையும் அதை எறிந்தோனுடைய சக்தியையும், குறி தவறாத திறமையையும் குறிக்கிறது.புலியைத் துளைத்தபின் அம்பின் வேகம் குறைகிறது. தடையேற்பட்டதால், 1. எனவே,…

கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார் – சேக்கிழார் & பரஞ்சோதி முனிவர்

முழுமுதற் கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார் மும்மைப் புலவர்களின் மிக்கதன்றே அம் மூதூர் மெய்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்குவாய்மைச் செம்மைப் பொருளுந் தருவார் திருவாலவாயில் எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கம் இருந்ததென்றால் – சேக்கிழார்: பெரியபுராணம் கடவுளும் சங்கத்தமிழ் ஆய்ந்தார் கண்ணுதற் பெருதற்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத தெரித்தாய்ந்த இப்பசுந்தமிழ் – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்

கலைச்சொல் தெளிவோம் 211. தண்கலன்- Refrigerator : இலக்குவனார் திருவள்ளுவன்

Evaporator Coolant (absorbs heat from air inside) Air chamber Condensor Coolant (gives heat to surrounding air) Compressor pressurizes coolant Electric pump Electric wires to thermostat Refrigerator thermostat(temperature control) Flexible air chamber(changes in size as air inside warms or cools Temperature control knob Electric wires to pump and compressor – – இலக்குவனார் திருவள்ளுவன்  

சங்க இலக்கியத்தில் கனவுக் குறிப்புகள் – ச.வே.சுப்பிரமணியன்

சங்க இலக்கியத்தில் கனவுக் குறிப்புகள்   சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ நாற்பத்து நான்கு கனவுக் குறிப்புகள் காணப்படுகின்றன. சில, தலைவன் தலைவியர் கண்டனவாகவும், சில பறவை, விலங்குகள் கண்டனவாகவும் அமைகின்றன. – நல்லறிஞர் ச.வே.சுப்பிரமணியனார்: இலக்கியக் கனவுகள்: பக்கம்: 17-18 சங்கத்தமிழ் கற்றால் கீழ்மை போகும் பழம் சங்கப் பனுவலைக் கற்றால் கிழம் போகும் கீழ்மையும் போகும் – அறிஞர் வ.சுப.மாணிக்கனார்

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 3

3   நாம் கேட்கும் தகவல்களை முறையாகத் தகவல் தராமல் அலைக்கழிப்பு செய்வதற்காக அரசு அதிகார்கள் மூன்றாமவர் பற்றிய தகவலைத் தரமுடியாது என ஒரே வரியில் கூறிவிடுவார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அப்துல் மசீத்து என்பவர் தன்னுடைய குடும்ப அட்டையில் முத்துப்பேட்டையில் வசிக்கும் நபர்களின் பெயரைச் சேர்த்துக் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படக்கூடிய பொருட்களை வாங்கி வருகிறார். அவர் குறிப்பிட்டுள்ள இருநபர்களுக்கு திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டையிலும் குடும்ப அட்டை உள்ளது. இதன் தொடர்பாகக் கேட்கப்பட்ட தகவலுக்கு விடை கூறமால் மூன்றாமவர் தொடர்புடைய பதில் கூறஇயலாது என…