திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 040. கல்வி

(அதிகாரம் 039. இறை மாட்சி தொடர்ச்சி) 02.பொருள்பால் 05.அரசு இயல் அதிகாரம் 040.   கல்வி   கல்வி கற்கும் முறைகள், கல்வி அறிவின் பயன்கள்.   கற்க, கச[டு]அறக் கற்பவை; கற்றபின்,       நிற்க, அதற்குத் தக.             படிப்பதைத் தெளிவாகப் படிக்க;         படித்தபின் படித்தபடி நடக்க.   எண்என்ப, ஏனை எழுத்(து)என்ப, இவ்இரண்டும்,      கண்என்ப, வாழும் உயிர்க்கு.        அறிவியலும், இலக்கியமும், வாழும்         உயிருக்கு, இரண்டு கண்கள்.   கண்உடையர் என்பவர், கற்றோர்; முகத்(து)இரண்டு     …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 039. இறை மாட்சி

(அதிகாரம் 038. ஊழ் தொடர்ச்சி) 02.பொருள் பால்    05. அரசு இயல்  அதிகாரம்  039. இறை மாட்சி   ஆள்வோரிடம் அமைய வேண்டிய,  பேரறிவுத்   திறனும்,  பெரும்பண்புகளும்.   படை,குடி, கூழ்,அமைச்சு, நட்(பு),அரண், ஆறும்       உடையான், அரசருள் ஏறு.       படை,மக்கள், உணவு,அமைச்சு, நட்பு,அரண்         உடையான், நல்ல ஆட்சியான்.   அஞ்சாமை, ஈகை, அறி(வு),ஊக்கம், இந்நான்கும்       எஞ்சாமை, வேர்ந்தர்க்(கு) இயல்பு.        அஞ்சாமை, கொடைமை, அறிவு,         ஊக்கம், ஆட்சியரது இலக்கணம்.   தூங்காமை, கல்வி, துணி(வு)உடைமை, இம்மூன்றும்,       நீங்கா, நிலன்ஆள்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 038. ஊழ்

(அதிகாரம் 037. அவா அறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 04. ஊழ் இயல் அதிகாரம் 038. ஊழ்   உலக இயற்கை முறைமைகளை,   உணர்ந்து, தக்கபடி நடத்தல்ஆம்.   ஆ(கு)ஊழால், தோன்றும் அசை(வு)இன்மை; கைப்பொருள்,    போ(கு)ஊழால் தோன்றும் மடி.     ஆகுசூழல் ஊக்கத்தால், பொருள்ஆம்;        போகுசூழல் சோம்பலால் பொருள்போம்.   பேதைப் படுக்கும், இழ(வு)ஊழ்; அறி(வு)அகற்றும்,    ஆகல்ஊழ் உற்றக் கடை.     அழிவுச் சூழலில் அறியாமைஆம்        ஆக்கச் சூழலில் அறிவுஆம்.   நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும்,தன்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 037. அவா அறுத்தல்

 (அதிகாரம் 036. மெய் உணர்தல் தொடர்ச்சி)  01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 037. அவா அறுத்தல்  பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை,    முழுமை யாகவே அறுத்[து]எறிதல்.   அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும்,      தவாஅப் பிறப்(பு)ஈனும் வித்து.      தொடரும் பேராசைதான், எல்லா        உயிர்களின் பிறப்புகட்கும் விதை.   வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது,      வேண்டாமை வேண்ட வரும்.          விரும்பின், பிறவாமையை விரும்பு;        விருப்புக்கெடின், இல்லை பிறப்பு.   வேண்டாமை…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)         பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க பாடல் படைப்பு அவரின் ‘துரத்தப்பட்டேன் என்னும்’ உள்ளக் குமுறலாகும். நம் நாடு சிறந்த மக்களாட்சி நாடாக விவரிக்கப்பட்டு வந்தாலும் உள்ளபடியே பல உரிமைகள் ஏட்டளவோடு நின்று நடைமுறையில் மறுக்கப்படுவனவாகவே உள்ளன. இதற்கொரு சான்றே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், தம் கல்லூரிப் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், சாதிக் கண்ணோட்டத்தால் வேலைவாய்ப்பை இழந்தது ஆகும். விருதுநகர்ச் செந்திற்குமார இந்து நாடார் கல்லூரியில் பேராசிரியர் அவர்கள்,…

‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047

 ‘காக்கைச் சிறகினிலே’ மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047   வணக்கம்!   நான் முகிலன் என்ற முகுந்தன். மறைந்த கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களுடைய நாற்பதாண்டு நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.   பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத்…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 6 இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) 6 9.] தண்டியலங்காரம் தேடுதல் பகுதி சென்றால் சொல் தேடல் பாடல் தேடல் ஆகியன உள்ளன. ஆனால், ஒவ்வொரு பக்க மேற்தலைப்பிலும் தேடுபொறி இடம் பெறவில்லை. இடப்பக்க அட்டவணையில் உள்ள உரைப்பகுதிக்குச் சென்று சொடுக்கினால்தான் உரையைப் படிக்க இயலும். அவ்வாறு சொடுக்காமல், மூலப்பகுதிகளில் உள்ள ‘உரை’ என்னும் இடத்தில் சொடுக்கினால் அப்பகுதியைக் காண இயலாது. உரைப் பகுதி செயல்படவில்லை என்ற எண்ணம் அல்லது உரை இல்லை என்ற எண்ணம் படிப்போருக்கு ஏற்படும்….

தொப்புள்கொடி உறவுதனை விடுதல் நன்றா? – குருநாதன்

அழிந்துவரும் மொழியா? ‘அழிந்துவரும் மொழிகளிலே தமிழும் ஒன்றாம்’ ஐ.நா. வின் இக்கூற்றைச் செவிம டுப்பீர்; கழிந்துவரும் வாழ்க்கையிலே தமிழைக் காக்க கட்டாயம் போர்த்தொடுப்பீர்; உலகில் மற்ற மொழியறிவு பெறுவதற்குத் தடையா சொன்னோம் மூத்தமொழி தாய்மொழியைப் போற்றச் செய்வோம்; விழிப்புணர்ச்சி இல்லையெனில் கெடுப்ப தற்கு விரைவாக வந்திடுமே வீணர்க் கூட்டம்! ஐந்திணையின் அழகுதனை எடுத்து ரைத்த அழியாத இலக்கியத்தை இழக்கப் போமோ? செந்தமிழைப் பேரறிஞர் பலரும் காத்த செழிப்பான வரலாறு அழிதல் நன்றா? பைந்தமிழில் பேசுதற்கு நாணு கின்றோம்; படித்தறிந்து போற்றுதற்குத் தமிழைப் போல எந்தமொழி…

“சிரியா” குழந்தையும் முள்ளிவாய்க்காலும் – ச.பா.நிர்மானுசன்

“சிரியா” குழந்தையும் முள்ளிவாய்க்காலும் கடற்கரையோரம் ஒதுங்கிய பாலகனின் உடலைப் பார்த்து நெஞ்சு கனக்கிறது. காவுகொண்ட கடலே காலனோடு கருத்து வேறுபட்டிருக்கக் கூடும் இந்தப் பாலகனின் உயிரைப் பறிப்பதா என்று .குழந்தையோடு குடும்பத்தையிழந்த தந்தையின் வலியையும் வேதனையையும் எங்களால் ஆழமாகவே உணரமுடியும். இறைவன் வரம் கொடுத்தாலும் இதயங்கள் தாங்காது அந்த வலிலையை. அப்பனுக்கு ஆறுதல் சொல்ல யாருளரோ நாமறியோம் – ஆயினும் வல்லமை கொடுவென்று மன்றாடுவோம். சின்னக் குழந்தையின் வாழ்ந்த காலச் சிரிப்பு – இனி நினைவில் வரும் போது தந்தை எப்படி வாடிப் போவார்…

கிழக்குத் தமிழீழத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் அரிய கிணறு கண்டுபிடிப்பு.

வந்தாறுமூலை பிள்ளையார் கோவிலில் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கிணறு, நாகக்கல் கண்டுபிடிப்பு   மட்டக்களப்பு, வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு, நாகக்கல் ஆகியன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.   வரலாற்றுதுறைப் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன், தொல்லியல் ஆய்வுக்குழுவினர் ஆகியோர் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயக் காணியினுள் மேற்கொண்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் அமைக்கப்பட்ட கிணறு, கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக் கல் என்பன கண்டுபிடிக்கபட்டன.   இதுபற்றிப் பேராசிரியர் சி.பத்மநாதன்…

இந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி கிடையாது! – வைகோ

இலக்கண இலக்கிய வளமே இல்லாத இந்தி மொழிக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது! – வைகோ அறிக்கை   பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளானால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்கும்.   உலகத்தின் மூத்த உயர் தனிச் செம்மொழியான தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்படும் தகுதி…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’-ஆய்வுநூல் 8 – மறைமலை இலக்குவனார்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)   ‘தமிழ்மொழி, முண்டா, திராவிடம், ஆரியம் எனும் மூன்றினாலும் உருவாயது’ என்று வையாபுரி(ப்பிள்ளை) கூறுகிறார் (History of Tamil language and literature, p. 5).  தமிழ்மொழியைத் திராவிடத்திற்கு அயலான ஒன்றாக வையாபுரியார் கருதுவது வியப்பையளிக்கிறது என்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.  ‘தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்’ (மே.ப. ப.177) என வியக்கும் பேராசிரியர், ‘ஒரயான் (Oraon) என்ற மொழி திராவிடக் குழுமொழிகளுள் திருத்தம்…