ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆவணியில்  தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்!  தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் மேற்குறித்த தலைப்பு புதிராக இருக்கலாம். தைப்புத்தாண்டிற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்தாலே கண்டன அம்பு தொடுப்போர் இருப்பதையும் அறிவேன்.   60 ஆண்டுக் காலச்சுழற்சியில் அறிவுக்குப் பொருந்தாத ஒழுக்கக்கேடான கதைகளைக் கற்பித்து இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரை ஆண்டு மாறியதால் வந்த தைப்புத்தாண்டு வரவேற்கத்தக்கதே. நாம் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியதே! அதே நேரம் கடந்த கால வரலாற்றை அறியவேண்டியதும் நம் கடமையாகும்.  அந்த வகையில் அமைந்தததே இக்கட்டுரை.   வருடம் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல்…

தமிழகப்புலவர் குழுவின் முப்பெரு விழா

தமிழகப்புலவர் குழுவின் 109 ஆம் கூட்டம் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா முத்தமிழ்க்காவலரின் 119ஆம்  ஆண்டுவிழா தை 15, 2048 சனிக்கிழமை சனவரி 28, 2017 காலை 10.00 முதல் மாலை 4.00 வரை பாரத்து பல்கலைக்கழகம், பாலாசி மருத்துவமனை வளாகம், குரோம்பேட்டை, சென்னை கருத்தரங்கம் : செம்மொழி வளர்த்த செம்மல்கள்

மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா

  மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா தை 13, 2048 வியாழக்கிழமை சனவரி 26, 2017 மாலை 4.30 முதல் தமிழிசை நடனம் முனைவர் சு.பிரீதா-வின் அபிநய நாட்டியாலயா குழுவினர் ஐவர் வழி வ.வேம்பையன் எழுதிய ‘பொங்கல் விழாச்சிந்தனைகள்’ நூல் வெளியீடு வெளியிட்டுச் சிறப்புரை : ஆசிரியர் கி.வீரமணி பண்பாளர்களுக்குப்பாராட்டு மாணவர்களுக்குப் பரிசு திருவள்ளுவர் மன்றம், மறைமலை நகர்

வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.

வவுனியாவில் தை 10, 2048  திங்கள்கிழமை 23.01.2017 அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.  தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு  முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைக் குடியரசுத்தலைவர், தலைமையர்(பிரதமர்), எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு, அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை ( தை 07, 2048 / வெள்ளிக்கிழமை 20.01.2017 ) அனுப்பி வைத்துள்ளனர்.   வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் …

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 5& 6

திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 5& 6 ஐந்தாம் பாசுரம் தமிழ்மொழி மூலமறியா இறைபோல ! தானுணரா, பேசும் தமிழ்க்கூட்டம் தானுணரா வானுணரா, வையம் உணரா, தமிழவளை ஈன்றவர்தாம் யாரென்றும், என்றுயிர்த்தாள் என்றும், ஊன்றியா ராய்ந்தும் உணர்ந்தறியாத் தன்மையளாய்த், தோன்றறியா ஞானியாய்த் தோன்றும் இறையொப்ப, ஆன்ற பெருங்குழாத்திற் கன்னையளாய்ப், பன்மொழிகள் ஈன்றவளாய், நேரிலளாய், இன்பம் தருவாளின் கோன்மை இசைத்திடவா கோதையே, எம்பாவாய் ! ஆறாம் பாசுரம் தமிழின் பெருஞ்சிறப்பு ‘ ழ ‘ ழகரத் திருவெழுத்து ஏழிசைக்கு நேராய் ; நிகராய்ப் பிறமொழியில் நின்றிழைதல் காணார் ;…

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’: பன்னாட்டுக் கருத்தரங்கு

    கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில்  இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார்.      கம்பன் பிறந்த நாளை…

வாழ்ந்து காட்ட வேண்டும்! – அம்பாளடியாள்

வாழ்ந்து காட்ட வேண்டும்! வலிமையுள்ள மனிதனாக வாழ்ந்து காட்ட வேண்டும் ! எளிமையான வாழ்வுக்கே இடமளிக்க வேண்டும்! தனிமையிலும் இனிமை காண தன்னடக்கம் வேண்டும் ! தரணியெல்லாம் போற்றும் வகை தயவு நெஞ்சில் வேண்டும்! கலியுகத்தின் போக்கை மாற்ற கருணை தம்முள் வேண்டும் ! கடவுள் என்றும் கொண்டாட கடமை உணர்தல் வேண்டும் ! பழியுணர்வை போக்க வல்ல பாசம் இங்கே வேண்டும் ! பகைவரையும் மன்னிக்கும் பக்குவமும் வேண்டும் ! மனித குலம் உயிரினத்தை மதித்து வாழ வேண்டும்! மரணம் வரும் என்ற…

கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 7 & 8   சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச் சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்? போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு! தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி! தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7) மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும் மந்திரம்தான் தெரிந்திருக்கும்; மனிதர்க் கெங்கே? எண்ணளவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்! இதைத்தானா சுதந்திரத்தின்…

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்   [‘மருவே செறித்த’ என்ற திருப்புகழ் மெட்டு தனனா தனந்த தனனா தனந்த தனனா தனந்த தனதான என்ற வண்ணம்]   தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூ லெழுந்த மொழியாகி முருகால் நடந்த சவைமீ தமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே கனியா யருந்து முனையே மிகுந்து பயிலா மலுந்தன்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாங] – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] –  3. தமிழ்நலப் போராளி – தொடர்ச்சி  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பேராசிரியர் இலக்குவனாரும் தமிழ் காக்கும் எண்ணங்களில் ஒன்றுபட்டவர்கள். பாவேந்தரின் தமிழியக்க எண்ணங்களுக்கு வடிவம் தந்தவர் பேராசிரியர்; பாவேந்தர் வகுத்த தமிழ்ப்போராளி இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் எனத் தமிழ் உணர்வாளர்கள் உரைப்பர். அதே நேரம் மூத்த தலைமுறையினர் பேராசிரியரின் வாழ்வுப்பாதையைக் குறியீடாகக் கொண்டு தமிழ்உணர்வுப் பாடல்களைப் படைத்தவர் பாவேந்தர் என்பர். இரண்டிலும் உண்மைகள் உள எனவும் ஆன்றோர் எண்ணத்தால்…

இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3 – மு.இளங்கோவன்

இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3 இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று தற்புனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக் கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து வெளிப்படுத்தும்பொழுது அரிய படைப்பாக இலக்கியம் உருவாகிறது.   தம் இளமைக்கால வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் மேற்குலகப் படைப்பாளிகள் முன்னின்றதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 1977 இல் தற்புனைவு என்னும்…

வேதம் தமிழிலுண்டு! – கவிஞாயிறு தாராபாரதி

வேதம் தமிழிலுண்டு! – கவிஞாயிறு தாராபாரதி   தாயின் கருவறையில் தான்படித்த செந்தமிழைக் கோயில் கருவறைக்குள் கொண்டுசெல்ல முடியாதா?   பொன்னியில் குளித்த புனிதத் திருமொழியைச் சன்னதியில் பாடினால் சாமிக்கா தீட்டுவரும்?   தேவாரம் பிரபந்தம் திருவாசகம் அருட்பா நாவாரப் பாடினால் நாதன் செவி கேளாதா?   தமிழறியும் பெருமாளும் தமிழ்க் கடவுள் முருகனும் அமுதத் தமிழ்கேட்டால் ஆசிதர மறுப்பாரா?   சொற்றமிழால் பாடென்று சுந்தரனை வேண்டிநின்ற நெற்றிக்கண் ஈசனது நேயர் விருப்பம் எது?   ஒதும் மந்திரங்கள் உண்டெந்தன் தாய்மொழியில்; வேதம் தமிழிலுண்டு!…