கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா

கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா   கவிதைஉறவு 45 ஆம் ஆண்டு விழாவும்  ஏர்வாடியாரின் நூல்களின் வெளியீடும் கவிதை உறவுப் பரிசுகள், விருதுகள் வழங்குதலும் சென்னை வாணி மகாலில் மிகச்சிறப்பாக நடந்தது.  முனைவர் நல்லி குப்புசாமி(செட்டி) தலைமையில் இல கணேசன் பரிசுகள் விருதுகள் வழங்கினார். கவிப்பேரருவி தமிழன்பன் சிறப்புரையாற்றினார்.  ஏர்வாடியார் முதல் நூல் 1976 இல் கவியரசர் கண்ணதாசன் வெளியிட்டார். இவ்விழாவில் 100ஆவது நூலைத் தமிழன்பன் வெளியிட  பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.   முனைவர் உலகநாயகி, பேராசிரியர்  இரா.மோகன், கவிஞர்…

உன்னிதழில் என் சொற்கள்! – ஆரூர் தமிழ்நாடன்

உன்னிதழில் என் சொற்கள்!   உன்காட்டு முட்களினால் பாதந் தோறும் உண்டாகும் பரவசத்தை என்ன வென்பேன்! உன்னம்பு  துளைக்கின்ற இதயத் திற்குள் உயிர்க்கின்ற காதலினை என்ன  வென்பேன்! உன்மூலம் வருகின்ற மரணம் என்றால் உயிர்கசிய வரவேற்றுப் பாட்டி சைப்பேன்! இன்னும்நீ வெறுமையினைக் கொடுப்பா யானால் என்னுலகை நலமாக முடித்துக் கொள்வேன்!   வரையாத சித்திரமாய் வந்தாய்; எந்தன் வாழ்வினது சுவரெல்லாம் ஒளிரு கின்றாய்! கரையோரம் கதைபேசும் அலைகள் போலக் கச்சிதமாய் உயிர்ப்பாகப் பேசு கின்றாய்! அரைஉயிராய்க் கிடக்கின்ற போதும்; என்னை அரைநொடிநீ நினைத்தாலும் பிழைத்துக்…

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு

வைகாசி 13, 2048   சனிக்கிழமை 27-05-2017   மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை,  சென்னை 600018 இலக்கியச் சிந்தனையின் 566  ஆவது நிகழ்வு  “கவியோகி சுத்தானந்த பாரதி” உரையாற்றுபவர் : திரு. புதுவை இராமசாமி    குவிகம் இலக்கிய வாசலின் 26 ஆவது நிகழ்வு “புத்தகங்கள் வெளியிட எளிய  வழி” உரையாற்றுபவர் :   திரு  சிரீகுமார்   அனைவரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in  

பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு, மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா

பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு ஆகத்து 2017  மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா   அன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல தமிழ் அமைப்புகளோடு இணைந்து, வாசிங்டன் வட்டாரத்தில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாடு, இந்த ஆண்டு ஆகத்து மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை ஒட்டி, குறுந்தொகை சார்ந்த கட்டுரைகள் அடங்கிய மலர் ஒன்று வெளியிடப்படும்.  இம் மலரில் வெளியிடுவதற்கு, தமிழறிஞர்களிடமிருந்து குறுந்தொகை பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  தங்கள் கட்டுரைகளை ஆனி 16 / சூன் 30, 2017 நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.     படைப்புகளுக்கான விதிமுறைகள்; அனுப்பப்படும் படைப்பானது, ‘குறுந்தொகை’ சார்ந்தோ குறுந்தொகையில் இடம்…

ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு : பன்னாட்டுக் கருத்தரங்கம்

  ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு :  பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ் முதுகலை – உயராய்வு மையம் பச்சையப்பன் கல்லூரி, சென்னை  ஆடி 08 & 09, 2048 : திங்கள் & செவ்வாய்:  சூலை 24 & 25, 2017 கருத்தரங்கக்குழுத் தலைவர் முனைவர் ப.அனுராதா தொடர்புக்கு : முனைவர் இல.செ. திருமலை drthirumalai72@gmail.com

எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

  வல்லமை மின்னிதழ், 7 ஆண்டுகளை நிறைவு செய்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, சாந்தி மாரியப்பன், முனைவர் காயத்திரி பூபதி, முனைவர் செல்வன்  முதலான ஆசிரியர் குழுவினர், வழங்கிச் செயற்பாட்டாளர் ஆமாச்சு, தளச் செயற்பாட்டாளர் சீனிவாசன்,  அறிவுரைஞர்கள்,  எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள்  முதலான அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்   8ஆம் ஆண்டில் நுழைந்துள்ளதை முன்னிட்டு, வாசகர்களுக்கு ஓர் இனிய பரிசாக, வல்லமையின் ஆண்டிராய்டு செயலியை வெளியிட்டுள்ளோம். கூகுள்காணாட்டப்…

ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை!    ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ)   பேராசிரியரைக் கைது செய்யத்திட்டமிட்டுள்ளதை அறிந்த புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அதனைப் பேராசிரியரிடம் தெரிவித்தார். சிறைசெல்லும் புலவர்சிலர் வேண்டும் இன்று   செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று  முறைசெய்யப் பதவிதனை இழப்ப தற்கும்   முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டும் இன்று  குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க்   குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும்  நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள்   நிற்குமுதற் புலவன்நான் ஆகவேண்டும்  (எழுத்தாளர் மன்றக் கவியரங்கில் முடியரசன்  குறள்நெறி…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (1.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) 2.தமிழ் முழக்கம் என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல் இறுதி எனக்கு வாராது; என்மொழி உலகாள வைக்காமல் என்றன் உயிரோ போகாது’ என்ற வேகமும் தாகமும் கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ சேதுராமன். தமிழ் மொழியிடம் அளவிலா அன்பும் பற்றும்(பக்தியும்) ஈடுபாடும் கொண்டுள்ள கவிஞர், தமிழை அன்னையாக உள்ளத்தில் நிலைநிறுத்திப் போற்றி வணங்குகிறார். தனக்கு ஆற்றலும் துணிவும் செயலூக்கமும் தந்து தன்னை வளர்க்கும் தாய், தமிழ்தான் என்று பாடித் துதிப்பதில் அவருக்கு அலுப்பு…

திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல்  தொடர்ச்சி) 3. காமத்துப் பால்        15.  கற்பு இயல் 127.  அவர்வயின் விதும்பல்   பிரிவுக் காலத்தில் ஒருவரை ஒருவரைக் காணத் துடித்தல்.   (01-08 தலைவி சொல்லியவை) வாள்அற்றுப், புற்(கு)என்ற கண்ணும்; அவர்சென்ற,       நாள்ஒற்றித் தேய்ந்த விரல். எதிர்பார்த்துக், கண்கள் ஒளிஇழந்தன. நாள்எண்ணி, விரல்கள் தேய்ந்தன.   இலங்(கு)இழாய்! இன்று மறப்பின்,என் தோள்மேல்       கலம்கழியும், காரிகை நீத்து. தோழியே! காதலை மறந்தால், தோள்கள் மெலியும்; வளைகழலும்.  …

சுந்தரச் சிலேடைகள் 12 வில்லம்பும் புருவக்கண்ணும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 12 வில்லம்பும் புருவக்கண்ணும் வளைந்திருக்கும் ,கூர்முனியோ வஞ்சிக்கத் தாவும், களைப்புற்றோர் மீளவழி  காட்டும் – திளைப்புதரும், விண்ணோரும், மண்ணோரும் வீதிதனில் சண்டையிடக் கண்புருவம் வில்லம்பாம் காண் . பொருள் வில்லம்பு 1 ) அம்பு பூட்டிய வில் வளைந்திருக்கும். 2) அம்பானது தன் கூர்மையால் பகைவரை வஞ்சிக்க எந்நேரமும் ஆயத்தமாக இருக்கும் . 3) போரில் களைப்புற்றோர் கூட வெற்றி பெற உதவிகரமாக இருக்கும். 4) கலைநயமிக்க வில்லம்பு பார்க்க இனிமை    தரும். 5) உலகில் தேவர்களாக இருந்தாலும்…

பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா? – ஆரூர் தமிழ்நாடன்

பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா?   உழவர்களின் கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறது தேசத்தின் மீதான நம்பிக்கை. இங்கே அதிகாரத்தில் பாலை. அதனிடம் நீதிகேட்டுப் போராடுகிறது எங்கள் வண்டல். கழனிகளுக்குப் பாலூட்டும் கருணைக் காவிரி பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கத்தை  எதிர்பார்க்கலாமா?  வடக்கத்தி கோதுமை தெற்கத்தி அரிசியை எள்ளி நகையாடுவது உயிரியல் அவமானம். வேளாண் தோழனே! பசிக்குச் சோறிடும் உன்னைப் பசியோடு அலையவைக்கிறது தேசம். கதிர் அறுக்கும் உன் அரிவாளைப் பிடுங்கி உன் கழுத்தை அறுக்கிறது தேசம் நாட்டின் மானம் காக்கப் பருத்தி கொடுக்கும் உன்னை அம்மணமாக்கி…

1 4 5 6 8