தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 218 -227

(தமிழ்ச்சொல்லாக்கம் 213 – 217 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 218. அசாதாரண தருமம்   –    சிறப்பியல்பு 219. ஆசீர்வாத ரூபம்     – வாழ்த்து 220. திருக்கு – அறிவு 221. நாநா    –          பல 222. பரசுபரம்      – ஒன்றற் கொன்று 223. பத்தியம் – பாடல் 224. பிரதியோகி  – எதிர்மறை 225. பிராக பாவம் – முன்னின்மை 226. விசேடம் – அடைகொளி 227. விட்சேபம்      – புடைபெயர்ச்சி நூல்   :           வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908) குறிப்புரை…

பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!: 2/8

(ஏ, தாழ்ந்த தமிழகமே!1/8 தொடர்ச்சி) ஏ, தாழ்ந்த தமிழகமே!: 2/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] சங்க இலக்கியம் கவிஞர்களையும், மற்றவர்களையும் அன்று போற்றாததற்கும், இன்று போற்றுதற்கும் இன்னுமொரு காரணமுண்டு. சங்க இலக்கியங்களிலே, நமது கண்ணும் கருத்தும் படாதபடி திரையிட்டு வந்தார்கள். உங்களில் பலர் சங்க இலக்கியங்களைப் படித்திருக்கலாம். சிலர் புரிந்து கொண்டிருக்கலாம்; சிலர் புரிந்தது போல் பாவனை…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  56 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 21 நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்கனற்புகைய வேகின்றான். . .     – புகழேந்தி முதலில் திட்டமிட்டிருந்தபடி அரவிந்தனும் முருகானந்தமும்தான் கோடைக்கானலுக்குப் புறப்படுவதாக இருந்தது. காலையில் புறப்படுகிற சிறிது நேரத்துக்கு முன்னால் அந்தத் தந்தி வந்திருக்காவிட்டால் அரவிந்தன் பயணம் தடைப்பட்டிருக்காது. அரவிந்தனுக்குத் தன்னுடைய சொந்தக் கிராமத்தில் உறவு கொண்டாடிக் கொண்டு ஆள்வதற்கு சொத்து ஒன்றுமில்லாவிட்டாலும் மனிதர்கள் இருந்தார்கள். பேருக்குத்தான் அவர்கள் உறவினர்கள், உண்மையிலோ அத்தனை பேரும் பகைவர்கள், அத்தனை பேரும் குரோதமும் அசூயையும் கொண்டவர்கள்;…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 7

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 6 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி “யாரை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார், குமரியை மட்டும் நிறுத்தவே மாட்டார். “ “ஏன்? என்னா விசயம்?” “செட்டியாருக்கு அவளைப்பார்க்காவிட்டா உசிரே போயிடும்.” ” அம்மா, அவ்வளவு சொக்குப்பொடி போட்டு விட்டாளா அந்தச் சிறுக்கி.” “பொடியுமில்லை, மந்திரமுமில்லை ! அவளைக் கண்டவன் எவன் தான், தேனில் விழுந்த ஈபோல் ஆகாமலிருக்கிறான் அவகூடக் கிடக்கட்டும்; கொஞ்சம் மூக்கும் முழியும் சுத்தமா ஒரு பெண் இருந்தா, எந்த ஆம்பிள்ளை, விறைக்க விறைக்கப்…

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 – வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4 தொடர்ச்சி) முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 13.0.0.0. நலம் நடைநலம்: ஒரு நூலை / ஆய்வு நூலை மிகக் கடினப்பட்டு, நூலாசிரியர் நெய்கிறார். அந்நூல் ஆய்ஞர், அறிஞர், கற்றார், கல்லார், சுவைஞர் என அனைவரிடமும் சென்று அகத்துள் பதிய வேண்டும். அவ்வாறு செலச்செல்வதற்கு நூலின் நடை நலம் மிக இன்றியமையாதது. அப்போதுதான், நூலாசிரியரின் ஆய்வுக்கும் அரிய உழைப்புக்கும் ஆன்ற பயன் ஊன்று நிலை தோன்றும்.              …

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 213 – 217

(தமிழ்ச்சொல்லாக்கம் 208-212தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 213. GLAND- உமிழ்நீர்க் கோளம் கீழ்த்தாடை என்பு, மேல்தாடை என்பு இவற்றில் உமிழ்நீர்க் கோளங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்றாக அணைந்திருக்கின்றன. நூல்   :           சரீரவியவசேத சாத்திரம் என்னும் அங்க விபாக சுகரண வாதம் (1906) பாகம் 15 நூலாசிரியர்                     டி. ஆர். மகாதேவ பண்டிதர் ★ 214. தத்தம் –           கொடுக்கப்பட்ட பொருள் 215. சூதிகாகாரம்            –           பிள்ளை பெறும் வீடு 216. திகுதிகு           –           சுடுகடு நூல்   :           சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை (1907)…

‘புலம்பெயர் மணற்துகள்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சார்சா

சார்சாவில் மலையாள எழுத்தாளர் இசுமாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாள் : ஆனி 16, 2053 03 / சூலை 2022 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9.30 மணி முதல் 12 மணி வரை இடம் : சார்சா அரண்மனை(பேலசு)உறைவகம், சார்சா தலைமை: முகிப்புல் உலமா அல்காசு ஏ. முகம்மது மஃகரூபுப் பங்குதாரர், சங்கீதா உணவகம், துபாய் முன்னிலை: முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நிறுவனத் தலைவர், கல்லிடைக்குறிச்சி தேசியக்…

இன அழிப்பிற்கு நீதி கோரும் தொடர் உரையாடல், 30.06.2022

இன அழிப்பிற்கு நீதி கோரும் தொடர் உரையாடல் 59 ஆனி 16, 2053 / 30.06.2022 இரவு 7.00 இருட்டில் இலங்கை அடையாள எண் 864 136 8094 புகு எண் 12345 பேசுநர் தோழர் தியாகு தோழர் செந்தில்

நம்பிக்கையுடன் எழு! :  கி.பி. அரவிந்தன்

நம்பிக்கையுடன் எழு! மலைகளில் உரமாய்த்தேநீரில் இரத்தமாய்முகமற்றுப் போனோரேகவனித்தீர்களா? பனிப் படலங்களைஊடுருவும்எக்காள ஒலிகள்.சிங்கத்தின் வாள்இனிஉடைபடக்கூடும். அதோ.வயல்வெளி எங்கும்தலை நிமிரும் நெற்பயிர்கள்.வசந்தன் கூத்தின்நாயகர்கள் ஆட்டம்.இவனோ நண்பன். பனைகள் மறைக்கும்செம்மண் பரப்பு.பனங்காட்டுச் சலசலப்பு.ஓலைகள் உராய்வினில்அக்கினிக் குஞ்சுகள். அவற்றுக்கும் அப்பால்அலைகளின் சீற்றம்,முரல்களின் துள்ளல்.அம்பாப் பாடல்களில்சோகம் தொலைக்கும்ஏலேலோப் பாடகர்கள். நண்பர்கள் . . .தோழர்கள். . . “ஆறுகள் முன்னோக்கியேபாய்கின்றன”அப்புறமென்ன!அடர்ந்த மலைகளின்இருட்டினில் இருந்துதேநீர் கரங்களில்விலங்குகள் கழற்று.பனி மலைகளின்உச்சிகள் பிளந்துகலவியைத் தொடங்கு,சக்தியை உமிழ்,உழுத்த மாளிகையின்இடுக்குகள் எங்கணும்ஆலம்விதைகள். நம்பிக்கையுடன்எழு. . . . -கி.பி. அரவிந்தன்

மற்றொரு  மொழி புகுத்தப்படுவதை எதிர்க்கிறேன்!- பெரியார் ஈ.வெ.இராமசாமி

மற்றொரு  மொழி புகுத்தப்படுவதை எதிர்க்கிறேன்! “ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.” “தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.”…

தமிழில் முழுத் தேர்ச்சிக்கு வழிகள் – இலக்குவனார் திருவள்ளுவன் & இருவர் : குமுதம் ‘ரிப்போர்ட்டர்’

தமிழில் தேர்ச்சி பெற மாட்டேன் போடா!…10 ஆம் வகுப்பு தேர்வு பகீர் – கணேசுகுமார் “இந்தி தெரியாது போடான்னு சொல்லிப் போராடினீங்களே? இப்போ தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் பேர் ஃபெயிலாமே” என பா.ச.க., மூத்த தலைவர் எச்.ராசா போட்ட சுட்டுரைப் (twitter) பதிவுதான் தமிழ் ஆர்வலர்களுக்குக் கடும் அதிர்ச்சி! இந்த ஆண்டு திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து அரிய சாதனை படைத்திருக்கிறார். இதனைப் பலரும் பாராட்டியும் கொண்டாடியும் மகிழ்கின்றனர். இந்த நேரத்தில்தான் 9.12 நூறாயிரம் பேர்…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் – சூலை 03,2022

  தமிழ்க்காப்புக்கழகம்  ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் ஆனி 19, 2053 ஞாயிறு , சூலை 03, 2022, காலை 10.00 “இயக்கமும் நானும்” முனைவர் இல.அம்பலவாணன் நிறுவன இயக்குநர், மக்கள்  மேம்பாட்டு வினையகம் தலைமையிடம் : திருச்சிராப்பள்ளி பேராசிரியர் முனைவர் ந.மணிமேகலை இயக்குநர், மகளிரியல் துறைத் தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோழர் ப. பரிமளா தலைவர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி /…