மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வுகள்

இ.ஆ.ப.(IAS),இ.கா.ப.(IPS), இ.வன.ப.(IFS), இ.வரு.ப.(IRS) அதிகாரியாக ஓர் அரிய வாய்ப்பு  உங்கள் மகன் அல்லது மகளை மாவட்ட  ஆட்சியர், காவல்துறை ஆணையாளர்  மற்றும் மத்திய அரசின்  முதன்மைப் பெரும் பதவிகளை அடைய ஓர் அரிய வாய்ப்பு இந்தியக்குடிமைப்பணித்தேர்வுகள் 2016 விண்ணப்பிக்க இறுதி நாள் மே27, 2016, இரவு 11.59  இணைய இணைப்பு : http://upsconline.nic.in/mainmenu2.php  தேர்வு நாள் ஆகத்து 07, 2016 கூடுதல் விவரங்களுக்கு :  http://www.upsc.gov.in/exams/notifications/2016/CSP_IFS/CSP/CSP_2016_Engl_Notice.pdf தேர்வர்களுக்கான வழிகாட்டி : தொலைபேசி எண்கள் : 011-23385271; 011-23381125; 011-23098543 வேலை நாள்களில் காலை 10.00…

துபாயின் சிறப்புகள் – மாணிக்கவாசகம் பள்ளியில் உரை

தேவகோட்டை: தேவகோட்டை  பெருந்தலைவர்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துபாய் நாட்டில் புகழ்பெற்ற பள்ளி இந்தியப் பள்ளி என்று துபாய் ஈமான் பண்பாட்டு மைய மக்கள் தொடர்புத்துறைச் செயலர் இதயதுல்லா தகவல் தெரிவித்தார்.     இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துபாய் ஈமான்  பண்பாட்டு மைய மக்கள் தொடர்புத்துறைச் செயலர் இதயதுல்லா மாணவர்களுடன் துபாய் நாடு குறித்து கலந்துரையாடல்…

வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழா, பன்னாட்டுக் கருத்தரங்கம்

  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் தமிழியற்புலத் தமிழியல்துறையின் சார்பாக  எதிர்வரும் ஆகத்து – (2016) திங்கள் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழாவும்,  “வ.சுப.மாணிக்கனாரின் பன்முக ஆளுமைத் திறன்” என்னும் பொருண்மையில் பல்கலை வளாகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.   எனவே, மதிப்பிற்குரிய மேனாள்துணைவேந்தர் அவர்களின் மீது நீங்காப் பற்றறுள்ள தமிழறிஞர்கள், பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வளர்கள் துணைவேந்தர் அவர்களின் வாழ்வும் பணியும், அவருடைய படைப்புகள் தொடர்பாகவும் இன்ன பிற பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் அமையலாம். ஆய்வுக் கட்டுரைகள் எந்தவிதப் பதிவுக் கட்டணமும்…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 1/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

1/5 முனைவர் க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் :உவமைக் குவியல்! உணர்ச்சிப் படையல்!     எதையும் எழுதலாம் என்பவன் எழுத்தாளன். இதைத்தான் எழுதவேண்டும் என்பவன் படைப்பாளன். இதில் ஐயா தமிழமல்லன் அவர்கள் இரண்டாவது வகை. சிந்துகின்ற வியர்வைத் துளியும், செதுக்குகின்ற மைத்துளியும் செந்தமிழர் வாழ்வுக்கே என்னும் சிறப்புக்குச் சொந்தக்காரர்  ஐயா அவர்கள். உழலும்போது மட்டுமல்ல, உறங்கும்போதும் தமிழர் நலனையே கனவு காண்பவர்  அவர். காட்சிக்காகவோ, பேச்சுக்காகவோ, மேல்பூச்சாக தொண்டாற்றுபவர். அல்லர். தன்னுடைய உடல், பொருள், உயிர் மட்டுமல்ல, குடும்பத்தினரையும் தமிழுக்காய்த் தாரைவார்த்திருப்பவர். அவரின்…

பெரியாரியல் பயிற்சி வகுப்பு, பாலமலை,சேலம் மாவட்டம்.

பெரியாரியல் பயிற்சி வகுப்பு இடம் : பாலமலை, காவலாண்டியூர், சேலம் மாவட்டம்.  நாள் :17.05.2016 – 18.05.2016. (இரண்டு நாள்) நிகழ்வுத் திட்டங்கள் :  17.05.2016. செவ்வாய்க்கிழமை காலை : 8.30. – காலைச் சிற்றுணவு. 10.00 – தோழர்கள் அறிமுகம். 11.00 -”அறிவியல் மன்பதை உருவாக்கத்தை நோக்கி”.- மருத்துவர் எழிலன். மதியம் 1.00 – உணவு இடைவேளை. 2:30 – ”இட ஒதுக்கீடு -சந்திக்கும் அறைகூவல்கள்” – தோழர் கொளத்தூர் மணி. 3:30 – தேநீர் இடைவெளி. 4:00 – ”பெரியாரியல் காலத்தின்…

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: மறைமலை இலக்குவனாரின் கூட்டிணைப்புத் தொலையுரை

வைகாசி 09, 2047  / 2016  மே  22  ஞாயிறு  இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை (கிழக்கு நேரம்/ET) (கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்) வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை         Federation of Tamil Sangams of North America இலக்கியச் சொற்பொழிவு     “மணிப்பிரவாளமும்        தனித்தமிழ் இயக்கமும்”    வழங்குபவர்:   பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்   தமிழ்ப் பேராசிரியர்; இலக்கியத் திறனாய்வாளர்; கவிஞர்; நூலாசிரியர்; சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர் என்கிற பன்முகம்கொண்ட தமிழறிஞர். சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பணியாற்றிவுள்ளார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் தமிழ்ப்புலத்தில்…

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம்  தேடாமல் கடமையாற்றட்டும்!  தேர்தல் ஆணையம் எப்படிப் பணியாற்றினாலும் ஒவ்வொரு தரப்பாரும் அவரவர் கண்ணோட்டத்தில் குறை கூறத்தான் செய்வர். என்றாலும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவோர் மனச்சான்றுடன் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையரின்  அறிவிப்புகளைப் பார்க்கும் பொழுது மலிவான விளம்பரத்தில் காட்டும் நாட்டத்தை உரிய கடமையாற்றுவதில் காட்டவில்லை என்றுதான் தெரிகின்றது.   எடுத்துக்காட்டிற்கு ஒன்று:-   தேர்தல் ஆணையம் அவ்வப்பொழுது ஊர்திகளை மடக்கிப் பணங்களைப் பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி, இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணத்தில்…

அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது! – பாவா சமத்துவன்

அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது! தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்றான் பாரதிதாசன். தமிழனையே அழித்தவர்கள் மீண்டும் மீண்டும் கூட்டு சேர்ந்து வாக்கு கேட்டு நம் வாசலுக்கே வருகிறார்கள்.. என்ன செய்யலாம் தமிழர்களே..? உன் விரலசைவிற்கு வரலாறு காத்திருக்கிறது..!   பாவா சமத்துவன்

தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம்

    தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம்   வைகாசி 16, 2047 /  29/05/2016 ஞாயிறு   வள்ளுவர் சமையற்கலை கல்லூரி, கரூர் தலைவர் :  இராமநாதபுர மன்னர்  குமரன் சேதுபதி, தலைவர், மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் தமிழ் ஆர்வலர்கள் மகிழச் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.   தமிழ் இராசேந்திரன் வழக்கறிஞர், கரூர் செயலாளர், கரூர் தமிழ்ச்சங்கம். 9789433344

வேலையில்லாத் திண்டாட்டம் – இலக்கியச் சான்று : தி.வே.விசயலட்சுமி

வேலையில்லாத் திண்டாட்டம் – இலக்கியச் சான்று   நம் குமுகாயச் சூழலில் ஒரு நிறைவான வாழ்வு வாழ அனைவர்க்கும் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியை முறையாக, ஆழமாகப், பல அல்லல்கட்கிடையே (பெற்றோரை வருத்தி, அவர்கள் தேவையைக் குறைத்து) 4, 5 பட்டங்கள் பெற்றாலும், நாட்டில் வேலை கிடைப்பது எளிதான ஒன்றல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு பெண்மணி தன் அணிகலன்களை விற்று, இருவேளை உணவை ஒரு வேளையாகக் குறைத்துத் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தாள். படிப்புக்கேற்ற வேலை மகனுக்குக் கிடைக்கவில்லை. என்னிடம் தன் பெரிய…

பாராட்டு – அரவிந்தன் சுமைதாங்கி சாம்பசிவம்

பாராட்டு குறள் வெண்செந்துறை பாராட்டை வேண்டாரும் உண்டோ உலகினில் சீராட்டும் தாயையே வேண்டிடும் சேய்மை மெச்சுதலைத் துச்சமாய் எண்ணினாலே நம்திறமை உச்சத்தை எப்பொழுதும் காணாது காண்க ஏற்பளிக்கும் போற்றுதலை நல்மனத்தில் நீவிதைத்தால் நாற்றங்கால் நெல்மணியைத் தந்திடுமே பார்! நேர்மறையின் எண்ணமுடன் தட்டிக் கொடுப்பதுவே பார்போற்றும் பாராட்டாய் நின்று பேசும்! கலித்தாழிசை மெச்சுதலும் முகத்துதியும் சமமெனவே நினைப்பவரோ தன்முனைப்பை ஆவணத்தைச் சரிவரவே பிளந்தறியார்! அரவிந்தன் சுமைதாங்கி சாம்பசிவம்

முதல்வர் நாற்காலிமீதுள்ள விருப்பம் தமிழ்மீது இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

  முதல்வர் நாற்காலிமீது விருப்பம் உள்ளவர்களுக்குத் தமிழ்மீது விருப்பம் இல்லையே!     நிலையான(நிரந்தர) முதல்வர் என்று ஒருவர்!  அடுத்தவாரம் முதல் முதல்வர் என்று சிலர் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முதல்வராக விழைவோரின் தமிழ் உணர்வு எப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக அவர்களின்  வேட்பு உறுதிப் பத்திரத்தைப் பார்த்தோம்.    இன்றைய முதல்வர் தன் வேட்புறுதியை ஆங்கிலத்தில் அளித்துள்ளார். ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இட்டுள்ளார். அரசின் பணியாளர்கள் தமிழில்  கையொப்படமிட வேண்டும் என்று ஓர்  ஆணை உள்ளது. இருப்பினும் ஏறத்தாழ 14 ஆண்டுகள் அரசை வழிநடத்தியும் கையொப்பம் …